Sunday, December 20, 2015

முட்டை ,உருளைக்கிழங்கு ஆம்லெட்

 முட்டை ,உருளைக்கிழங்கு ஆம்லெட்



தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2
பெரியது முட்டை - 3
பெரிய வெங்காயம்- 1
உப்பு - சுவைக்கு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்

மூட்டு வலி,முழங்கால் வலி,தலைவலி,காலில் வீக்கம் நீங்க மேல் பூசுவதற்க்கும், உள்ளுக்கு சாப்பிடும் விதம்

மூட்டு வலி,முழங்கால் வலி,தலைவலி,காலில் வீக்கம் நீங்க மேல் பூசுவதற்க்கும்,  உள்ளுக்கு சாப்பிடும் விதம்



மூட்டு வலி நீங்க...

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

சுத்தம் செய்தபின் தண்­ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ்யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.

Friday, December 18, 2015

நோய்களும் வராமல் தடுக்கும் முளை கட்டிய தானியங்கள்

நோய்களும் வராமல் தடுக்கும் முளை கட்டிய தானியங்கள் 


உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன.

பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக் கும் பயறு வகைகள் அவசியம் தேவை. அதே சமயம், அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது!'' என்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
எச்சரிக்கை: ஜீரண சக்திக் குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்டப் பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுவதே நல்லது.

முளைக்கட்டியப் பயறு வகைகளில் 'யூரிக் ஆசிட்’ அதிகம் இருப்பதால், மூட்டு வலி (Gout Disease) வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். முளைக்கட்டியப் பயறை வெந் நீரில் மிதமாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். இதில், நார்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், சாப்பிட்டதும் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பச்சைப் பயறு

எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும். இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

கொண்டைக்கடலை

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். வயிற்றில் வரும் புற்றுநோயான இன்டெஸ்டினல் கேன்சர் (Intestinal cancer) போன்ற நோய்களைத் தடுக்க வல்லது. இதில் புரதம், மாவுச் சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச் சத்து மற்றும் தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன. கொழுப்பு ஓரளவும் கோலின், பீட்டா கரோட்டின் ஆகியவை சிறிதளவும் இருக்கின்றன. வெள்ளை நிறக் கொண்டைக் கடலையைக் காட்டிலும் சிறிய அளவிலானக் கறுப்பு நிறக் கொண்டைக் கடலையில் அதிக அளவு நார்ச் சத்து இருக்கிறது. முளைக்கட்டிய கொண்டைக் கடலையில் இருக்கும் ஹார்மோன் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மொச்சைப் பயறு

சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்; மலச்சிக்கலைப் போக்கும்; இதில், புரதம், மாவுச் சத்து, கோலின், பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்பு, கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. சிலருக்கு மொச்சை சாப்பிட்டால், வாயுப் பிரச்னை ஏற்படும். அவர்கள் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

காராமணி

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும். தென் மாவட்ட மக்கள் இதைத் தட்டைப் பயறு என்று அழைப்பார்கள். இதில் பொட்டாசியம் மிகவும் அதிகமாக இருக்கிறது. புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

கொள்ளு

எலும்புக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்; தசைகள் வலுப் பெறும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில், புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றன. ஆக்ஸாலிக் ஆசிட் இருப்பதால், அதிகம் சாப்பிடக் கூடாது. அவ்வப்போது, கொள்ளு ரசம் வைத்துச் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்றது. புரதச் சத்து அதிகம் இருப்பதால் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ராஜ்மா

தசைகளை நன்றாக இறுகச்செய்வதோடு, மலச் சிக்கலையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் புரதம், கலோரி, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் உண்டு. மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஓரளவு இருக்கின்றன. சோடியம், பொட்டாஷியம் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. உடலை வருத்தி உடற்பயிற்சி செய்பவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை மற்றும் இதய நோயாளிகள் அனைவரும் சாப்பிட ஏற்றது.

பட்டாணி

காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி மற்றும் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து ஓரளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன. புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் - சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் சாப்பிடலாம். குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது.

சோயா

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்; வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோயைத் தடுக்கவல்லது; இதில், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்துவதால், நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

துவரை

உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும், மலச் சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கக்கூடியது. இதில், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. நார்ச் சத்து, கால்சியம் பாஸ்பரஸ், பீட்டா கரோட்டின், வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் - சி, நார்ச் சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், மாவுச் சத்து, கலோரி, இரும்பு, கோலின், ஆக்சாலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. அதிகம் வேக வைக்கவேண்டியது இல்லை. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

Saturday, December 12, 2015

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம்

உதட்டின் மேல் மீசை போல் வளரும் முடியை போக்க  இயற்கை  மருத்துவம் 



சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.


தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்

Friday, November 6, 2015

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்


பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்

உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய் 


 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்

என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.

உடல் சோர்வு நீங்கும்

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுண்டைக்காய்த் துவையல்


சுண்டைக்காய்த் துவையல்



தேவையானவை:-

சுண்டைக்காய் - 1 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 ( சிறியது)
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 3 சுளை
பெருங்காயம் - 1 மிளகு அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை:-

சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்தவுடன் உளுந்து, பெருங்காயம் போட்டு சிவந்தவுடன் பச்சை மிளகாய், சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதங்கியதும் வெங்காயம், தக்காளியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். உப்பு, புளி, தேங்காய் சேர்த்து இன்னும் நன்கு வதக்கி ஆறவைத்து அரைக்கவும். இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம் அல்லது நெய் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.

Monday, September 7, 2015

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ்

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ்

அடிக்கடி முக்கியமான விஷயங்களை மறந்து போய்விடுகிறீர்களா? மறதியால் உங்கள் படிப்போ அலுவலக பணியோ பாதிக்கப் படுகிறதா? நினைவாற்றல் இல்லாததால் சில சமயம் அவமானங்களை சந்திக்கிறீர்களா… அப்படின்னா இந்த கட்டுரை உங்களுக்குத்தான்… இதுல நாம ஞாபக சக்தியை அதிகரிக்க என்ன என்ன சாப்பிடணும் / செய்யணும்னு சொல்றேன்..

மறதியைப் போக்க ஹெல்த் டிப்ஸ் !

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

Friday, August 28, 2015

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்



எண்ணெய்களில் பல உள்ளன. அந்த எண்ணெகளை எதில் இருந்து வருகிறதோ அதன் பெயர்களை வைத்துதான் சொல்லுவார்கள். உதாரணத்திற்கு தேங்காயில் இருந்து தான் தேங்காய் எண்ணெய் என்று சொல்லுவார்கள். ஆனால் நல்லெண்ணெய் எள்ளில் இருந்து வருகிறது ஏன் நாம் எள் எண்ணெய் என்று கூறாமல் நல்லெண்ணெய் என்று கூறுகிறோம். உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தருவதால் தான் என்னவோ, நம் முன்னோர்கள் இதனை நல்லெண்ணெய் என்று அழைக்கின்றனர் போலும். இந்த நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம்.இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெயை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல் :

நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கெட்ட கொழுப்பைக் கரைக்கும்:

 நல்லெண்ணெயில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இயற்கையான எளிய மருத்துவ குறிப்புக்கள்

இயற்கையான  எளிய மருத்துவ குறிப்புக்கள் 

தலை சுற்றல்,இருமல்,வறட்டு இருமல் ,ஆஸ்துமா, மூச்சுத்திணறல்,சளிகட்டு ,தலைபாரம் ,மார்புச்சளி,மூக்கடைப்பு,ஜலதோஷம்,வாந்தி,குமட்டல் இவற்றை போக்க எளிய மருத்துவ குறிப்புக்கள்

தலை சுற்றல் குணமாக:

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.

இருமல் குணமாக:

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

தேனீன் பயன்கள்

தேனீன் பயன்கள்





பித்தத்திலிருந்து விடுதலை பெற எளிய இயற்கை மருத்துவ முறைகள்

பித்தத்திலிருந்து விடுதலை பெற எளிய இயற்கை மருத்துவ முறைகள்


விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றைப் பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்கிக்கெண்டே இருக்குமா இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் இப்போது பார்ப்பேம்...

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள் 


* கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.
* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.
* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.
* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
* பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.
* மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

Thursday, May 21, 2015

மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்

        மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்


   “மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்!”
       என்பது பழமொழி.
     தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில் முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன.

  மாம்பழம் ‘கடவுளின் கனி’ என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிய சுவையுடன் உள்ள இக்கனியில், பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன.

Wednesday, May 20, 2015

மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து  உருளைக்கிழங்கு சாறு


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

கருவளையம் வந்த பின் அவற்றை போக்க

             கருவளையம் வந்த பின் அவற்றை போக்க


  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. அத்தகைய முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு… சொல்லவே வேண்டாம். இந்த முகப்பொலிவை கெடுக்கும் காரணங்களுள் முக்கியமானது ‘கருவளையம்’. ஆண், பெண், சிறுவர், நடுத்தர வயதினர், பெரியவர் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி நம்மில் 90 சதவீத பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.

Tuesday, May 19, 2015

இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்

    இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்


பார்ப்பதற்கு பளபளப்பாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் காய்கறிகளில் முக்கியமானது காரட். உணவில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் முக்கியமானதும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடியதுமான கேரட் பற்றி நாம் காண்போம்.

 இது குளிர் மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள் மிகச் சிறியதாகவும், கொத்தாகவும் ப+மிக்கு வெளியில் காணப்படும். பூமிக்கு அடியில் வேர்ப்பகுதியில் நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருள் இருக்கும்.

கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்

 கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்



  அறுகம்புல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய அறுகம்புல் சிறந்த மருத்தவ குணங்களைக் கொண்டது. இது ஓர் அற்புத மூலிகை..

  விநாயக சதுர்த்தி அன்று இதனை விநாயகருக்குச் சாற்றும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இப்புல்லின் மேல் பாகம் வெயிலால் காய்ந்தது போல் தோன்றினாலும், இதன் வேர்கள் சாவதில்லை. அதனால்தான் நாம் ஒருவரை வாழ்த்தும் போது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடிப் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்துகிறோம்.

Saturday, May 16, 2015

ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு

         ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு


முன்பு  இன்றைய உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். 

 அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5 ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இயற்கை முறையில் பயனள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. ¼  தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலலையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து  எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்

   அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள் 


 
1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

2. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தடைபட்டு முகம் அழகு பெறும்.

3. குண்டாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

Friday, May 15, 2015

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

     முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்



  முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.

  தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்

    உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்


 நம் அன்றாட வேலைகளை செய்யும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.  இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை காரணமாகும்.  சிலருக்கு மட்டும் ஆர்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன. 

 கீழே தரப்பட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது மாதம் 4 கிலோ எடை குறைவது மிக உறுதி.

Thursday, May 14, 2015

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி


 12 ராசிகளில் கன்னி ராசிக்கு உரிய மூலிகை அவுரி. இது அஷ்ட கன்மங்களில் தம்பளத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீலி என்றும் அழைக்கப்படும் அவுரியின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்க்கலாம்.

Wednesday, May 13, 2015

பித்தம் குறைக்கும் மாதுளம் பூ

        பித்தம் குறைக்கும்  மாதுளம் பூ 


மாதுளை என்பது கனிவகைகளில் ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலும் மாதுளம் பழத்தை உண்பதற்கு பயன்படுத்தி வரக்கூடிய நாம், மாதுளையின் பூக்களிலே அதிக மருத்துவ குணம் உண்டு 

மருத்துவப் பயன்

  மாதுளம்பூவினை எடுத்து, நிழலில் உலர்த்தி, நன்கு பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தேனிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து தினசரி காலை-மாலை என இருவேளையும் அருந்தி வரலாம். இதனால் பசி நன்கு தூண்டப்பட்டு, உண்ட உணவு நன்கு சீரணமாகும். நோய் எதிர்ப்பாற்றல் நன்கு வளரும். இதனால் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். உடலும் வன்மை பெறும்.

பல் பராமரிப்பு வழிகள்

பல் பராமரிப்பு வழிகள்



  • கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிடுங்கள். எல்லா வயதினருக்கும் கேரட் சிறந்த பல்பாதுகாப்பு உணவாகும்.
  • பல் மஞ்சள் நிறம் மாற எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உப்பைச் சேர்த்து வாருங்கள். ஒரு வாரத்தில் பல்லின் மஞ்சள் நிறம் மாறும்.
  • மாதத்திற்கு ஒரு தடவையேனும் கரும்புத் துண்டுகளை மென்று துப்புங்கள். அதனால் பற்கள் சுத்தமாவதுடன் பற்கள் நல்ல பலமடைகின்றன.

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள்

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள் 


 உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப்  பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான, அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துப முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல் வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோயின்றி வாழ பிரண்டை

         நோயின்றி வாழ பிரண்டை 


    சித்தர்கள் நாம் நோயின்றி வாழ பல முறைகளை வகுத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான்  மூலிகை கற்ப வகைகளுள் சிறப்பானதாக கூறப்பட்ட “பிரண்டை” என்னும் மூலிகை பற்றி  பார்க்கலாம்.

     உணவே மருந்து,மருந்தே உணவு” என்பதற்கிணங்க பிரண்டை என்னும் இந்த மூலிகை வீட்டு உபயோகத்தில் துவையல், ஊறுகாய், அடை போன்றவையாகவும் மருத்துவத்தில் வயிறு எரிச்சல், வயிற்று வலி (அல்சர்) போன்றவற்றிற்காகவும் பன்னெடுங்காலமாக நம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “வச்சிரவல்லி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Tuesday, May 12, 2015

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்


சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

வாழையிலையின் பயன்கள்

வாழையிலையின் பயன்கள் 


தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Monday, May 11, 2015

டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும் பப்பாளி இலை

                       டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும்  பப்பாளி இலை


தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது.

சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை

 சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை


குப்பைமேனி கீரை மலம் இளக்கியாகும். சொறி, சிரங்கு,உடல் அரிப்புக்கு மேற்ச்சாகவும் பயன்படுகிறது. இலைச் சாறு பாம்புக்கடி நச்சினை முறிக்கவும் பயன்படுகிறது. நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது. இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது. குப்பைமேனி இலையால் பல்நோய்,தீச்சுட்டப் புண் பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, மூலம், நமைச்சல், குத்தல்,இரைப்பு, மூக்குநீர் பாய்தல்,கோழை போன்றவை தீரும்.

Tuesday, May 5, 2015

அபரிமிதமான விட்டமின்களை கொண்ட முளைவிட்ட தானியம்

அபரிமிதமான விட்டமின்களை கொண்ட முளைவிட்ட தானியம் 


இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். 

நாம் பயன்படுத்தும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்

நாம் பயன்படுத்தும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்


* எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல்லது. 

உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொருட்கள்

இரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொருட்கள்



பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்


சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம்.சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறு நீரைப் பெருக்கக் கூடிய சிறந்த உணவுப் பொருள். இதை உணவாகக் கொள்ளும்போது உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. 

சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்

சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்


* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. 

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

சர்க்கரை நோயில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்ற உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

சர்க்கரை நோயில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்ற உன்னதமான உணவு வெள்ளரிக்காய்


வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது. 

அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்

அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்


உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ... 

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். 

ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல் செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து விடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதே நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும். 

மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள  ‘கேப்சைசின்’, உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். 

கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும். 

பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் ‘ஸ்லிம்’ ஆக மாற்றும். 

கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய்களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 

முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறுவிதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும். 

தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க  வேண்டும். 

மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.

Tuesday, April 28, 2015

கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள்

கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள்


முகத்தின் அழகைக் கெடுப்பதில் கருவளையங்களும் ஒன்று. இத்தகைய கருவளையமானது களைப்பு, தூக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பல காரணங்களால் ஏற்படும். இத்தகைய கருவளையங்களைப் போக்க பல ஆயுர்வேத வழிகள் உள்ளன.

இத்தகைய ஆயுர்வேத வழிகளைப் பயன்படுத்தினால், கருவளையங்கள் நீங்குவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். சரி, இப்போது கருவளையங்களைப் போக்க உதவும் அந்த சிம்பிளான ஆயுர்வேத வழிகள் என்னவென்று பார்ப்போமா

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா..?

சிசேரியன் தழும்பை இயற்கையா மறைய வைக்கணுமா..?


கர்ப்பமாக இருந்தபோது பெரிதான வயிறு பிரசவத்திற்குப் பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.

மூலம் நோய்க்கு எளிய மருந்து

மூலம் நோய்க்கு எளிய மருந்து


இந்த நோய் பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும் ,

ஒரே இடத்தில் நாற்காலில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும், அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.

Monday, April 6, 2015

கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்


ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும்.

ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.

மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால்,

Friday, April 3, 2015

இளநரையை தடுக்கும் வெந்தயம்

இளநரையை தடுக்கும் வெந்தயம்



  • வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும். 


  • வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும். முகப்பருக்களும் குணமாகும். 

Thursday, March 19, 2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

Monday, March 16, 2015

மக்காச்சோள வடை

மக்காச்சோள வடை


தேவையான பொருட்கள்:-


  • மக்காச்சோளம் - 1 கப்
  • வெங்காயம்         - 1 கப்
  • பச்சைமிளகாய் - 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
  • உப்பு                 - தேவையான அளவு
  • கறிவேப்பிலை         - தேவையான அளவு

ஐதராபாத் கத்திரிக்காய் மசாலா

ஐதராபாத்  கத்திரிக்காய் மசாலா


தேவையான பொருட்கள்:


  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • கடுகு                  - கால் டீஸ்பூன்
  • சீரகம்                  - கால் டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • எண்ணெய்           - தேவையான அளவு

Thursday, March 5, 2015

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?


நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

பாகற்காய் சிப்ஸ்

பாகற்காய் சிப்ஸ்


தேவையான பொருட்கள்:-

  • பெரிய பாகற்காய் -  4
  • பெருங்காயத்தூள் -  சிறதளவு
  • கடலை மாவு         -  5 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு                 -  2 டேபிள் ஸ்பூன்
  • நசுக்கிய பூண்டு -  1 டேபிள் ஸ்பூன்

மக்காச்சோள அல்வா

மக்காச்சோள அல்வா



தேவையான பொருட்கள்:

  • மக்காச்சோளம் - 1 கப் (2 கதிர்)
  • சர்க்கரை                 - 1 கப்
  • சுவிட் பால்கோவா         - 1 கப்
  • நெய்                 - தேவையான அளவு

Wednesday, March 4, 2015

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை


தேவையான பொருட்கள்:-

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - கால் கிலோ
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • சர்க்கரை         - 1 கப்
  • நெய்         - தேவையான அளவு
  • ஏலக்காய் தூள்         - சிறிது


செய்முறை:-

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் அவற்றை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். மசித்த வள்ளிக்கிழங்கில் சர்க்கரை, ஏலக்காய் 2 பொடித்து சேர்த்துக் கொள்ளவும். நெய் சிறிதளவு ஊற்றி பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டிக்கொள்ளவும் பின்பு தேங்காய் துருவலில் உருண்டைகளை பிரட்டி எடுக்கவும். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு உருண்டை தயார்.

மணத்தக்காளி சூப்

மணத்தக்காளி சூப்


தேவையான அளவு:-

  • மணத்தக்காளி - அரை கட்டு
  • வெங்காயம்         - 1
  • தக்காளி                  - 1
  • உப்பு          - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு

கோழி கொழுக்கட்டை

கோழி கொழுக்கட்டை




தேவையான பொருட்கள்:-

  • கோழி கறி        - ¼ கிலோ
  • பச்சரிசி மாவு - 1 கப்
  • வெங்காயம்         - 1
  • இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
  • கர மசாலா         - சிறிதளவு

ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசி அல்வா



தேவையான பொருட்கள்:-

  • ஜவ்வரிசி  - 1 கப்
  • முந்திரி         - தேவையான அளவு
  • நெய்         - தேவையான அளவு
  • சர்க்கரை - 1 கப்