Saturday, December 27, 2014

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்



இந்தியாவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளும் ஒன்று. தென்னாட்டிற்கே உரிய சிறு தானிய வகையைச் சார்ந்தது. 

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்


வாழை மரம் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்கும் மரமாகும். வாழையின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன்  கொண்டவை. அதில் வாழைத்தண்டு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.

அதிக மருத்துவக் குணம் கொண்ட சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.

உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.

Thursday, December 25, 2014

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்



பெண்களுக்கு பிரத்யோகமாக வரக்கூடிய சில நோய்களிலினின்று பெண்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய ஆற்றல் சில கனிகளுக்கு உண்டு. அவற்றுள் முதன்மையாக கருதக்கூடிய கனி அத்திப்பழம். இது பெண்களுக்கு மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்த சோகையை தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

கஸ்தூரி மஞ்சள் மகிமை

கஸ்தூரி மஞ்சள் மகிமை


மஞ்சள்களிலே கஸ்தூரி மஞ்சள் குணங்கள் நிறைந்தது. இதில் மூலிகைகளோ இதர சேர்மானங்களோ கிடையாது. நூறு சதவீதம் கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஆறாத புண்கள், அழகுக்கு அழகை சேர்க்கும் இவற்றை பற்ற சில காண்போம்.

Wednesday, December 24, 2014

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள் அவற்றின் பயன்கள்

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள் அவற்றின் பயன்கள்



அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

குடிநீரை சுத்திகரிக்க இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக காண்போம் .


நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.

கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்

கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்


சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய் விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக்கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். 

Tuesday, December 23, 2014

மீல் மேக்கர் கிரேவி

மீல் மேக்கர் கிரேவி


ஹாய் அன்பு தோழிகளே நீங்கள் சைவ ப்ரியர்களா இதோ உங்களுக்கா மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:

  • மீல் மேக்கர்                   - 20 (எண்ணிக்கையில்) (சிறயதாக இருந்தால் 20 அல்லது பெரியதாக இருந்தால் 15 எடுத்துக்கொள்ளவும்)
  • சின்ன வெங்காயம்      - 15
  • தக்காளி                          - 2
  • தேங்காய்                       - கால் கப்

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்



நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ மூலிகைகளில் மிக எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதுமான நெல்லி கடலை கடைந்து எடுத்த அமிர்தத்திற்கு ஒப்பானது நெல்லிக்காய். இதனை  பகல் பொழுதி;ல் உண்டால் கீழ் கண்ட நோய்கள் அகலும். கபம் சம்பந்தப்பட்ட சளித் தொல்லைகள்,புரையழற்சி, வாயில் அபரிமிதமாக ஏற்படும் உமிழ்நீர் சுரப்பு, தலை சுற்றல், மயக்கம், மலச்சிக்கல், பித்த அதிகரிப்பான பயித்தியம் ஆகிய நோய்கள் அகலும். நெல்லிக்காயை உண்பதால் அழகு உண்டாகும்  அதனுடைய புளிப்பு சுவை வாயுத் தொல்லையை போக்குகிறது. அதனுடைய துவர்ப்பு கபத்தை நீக்குகிறது.

கோவாக்காய் ப்ரை

கோவாக்காய் ப்ரை


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் கோவக்காய் ப்ரை சேர்த்து வர நல்ல பலன் உண்டு. ஆனால் நீங்கள் என்னை கேட்கலாம் எண்ணெய் நிறைய ப்ரை பண்ண தேவைப்படும் எப்படி என்று கவலைப்பட வேண்டாம். எண்ணெயை பொரியலுக்கு செய்ய எடுத்துக்கொள்வது போல் எடுத்துக்கொள்ளலாம், அப்படியில்லையா நாண் ஸ்டிக் டவா உபயோகப்படுத்தலாம். 

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்


பாகற்காய் போன்று கசப்பு சுவையுடைய காய்கறிகளில் ஒன்றானது. நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை அதிகம் கொண்டதுமான கோவக்காயைப் பற்றி பார்ப்போம்.

கசப்பான மருந்துதான் நோயை விரைவில் குணமாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல கசப்பான காய்கறிகள் தான் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்களை தீர்க்கக்கூடிய இயற்கையான மருந்துப் பொருட்களாகும்.

Monday, December 22, 2014

முகத்தில் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய சில டிப்ஸ்

முகப்பரு வந்தவுடன் முகத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்து அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் பருவைப் பலர் கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் அவ்விடத்தில் கரும்புள்ளிகள் நிலைத்து முகத்தின் அழகைக் கெடுக்கிறது. சில சமயம் பருக்களே உதிர்ந்து அவ்விடத்தில் தழும்பாக கரும்புள்ளிகளை உண்டாக்குகிறது.  

இந்த கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. கடைகளில் கிடைக்கும் கிரீம்களால் பல நேரம் பக்க விளைவுகள் உண்டாகின்றன. பக்க விளைவுகள் அற்ற மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம்.

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்


மனித உடலானது திறம்பட செயல்பட அனைத்து சத்துக்களும் தேவை. இந்த சத்தானது நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேருகிறது. இதில் ஏதேனும் ஒரு சத்துப் பொருள் குறையும் போது தான் நம் உடலை நோய தாக்க ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் பற்றாக் குறையினை ஈடுகட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை விட, நோய் வரும் முன் காத்தலே சிறந்தது.

Sunday, December 21, 2014

கால்சியம் மிக அதிகம் உள்ள எள்

கால்சியம் மிக அதிகம் உள்ள எள்


நவதானியங்களில் ஒன்றாய எள் நமது நாட்டிற்கே உரியதானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.



எள்ளில் கருப்பு, வெள்ளை, செம்மை என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் கருப்பு எள் சற்று அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது.

Saturday, December 20, 2014

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்



கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர். 

உலகை மிரள வைத்த திருநள்ளாறு

உலகை  மிரள வைத்த திருநள்ளாறு


சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று, பிறகு  வழக்கம்போல் வானில் பயணத்தைத் தொடர ஆரம்பித்தது. எந்தவித பழுதும் அந்த செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படவில்லை. கீழே நாசாவிலிருந்தும்  எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை.

Monday, December 15, 2014

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

நவதானியங்களில் மிகுந்த புரதச்சத்து உள்ள ஒரு தானியம் பச்சை பயறு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியார் வரை அனைவரும் தம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய எளிய தானிய வகை. நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் உண்பதற்கு ஏற்ற தானியம் பச்சை பயறு.

பச்சை பயறின் தாவரவியல் பெயர் Vigna radiate இது ஆசியா கண்டம் முழுமையும் விளையக்கூடிய அரிசி, கோதுமை போன்ற பயிர் வகையை சேர்ந்தது ஆப்பிரிக்கா வட அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இதனை விளைவிக்கின்றன.

Saturday, December 13, 2014

முந்திரி காளான் மசாலா

முந்திரி காளான் மசாலா


தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும்
தவிர்க்க வேண்டிய உணவுகள்


இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்... நோய்கள்... துன்பங்கள்!

நாம்சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக  இருந்தால் மட்டும் போதுமா... உடலுக்கு  ஆரோக்கியமானதுதானா என்று யோசித்திருக்கிறோமா?

'தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்என்று சொன்னாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள், ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும்மூலிகைத் தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால் மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

Thursday, December 11, 2014

சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சருமத்தைப் பாதுகாக்க சில இயற்கை வழிமுறைகள்

சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சருமத்தைப் பாதுகாக்க சில இயற்கை வழிமுறைகள்


''வருடத்தின் 99 சதவிகித நாட்கள் வெயில் கொளுத்தும் நம் நாட்டில்தான் வைட்டமின் டி குறைபாடும் உள்ளது.  வெளியில் வெயிலில் செல்ல வேண்டும் என்றால் பயம். சூரியனை நம் சருமத்தின் முதல் எதிரியாக நினைக்கிறோம். சூரியக் கதிர்வீச்சுக்குப் பயந்து ஒருநாளைக்கு மூன்று- நான்கு முறைகூட சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்கிறோம்.

Monday, December 8, 2014

ஆரத்தி - விஞ்ஞான நலன்



தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.