Saturday, December 27, 2014

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்



இந்தியாவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளும் ஒன்று. தென்னாட்டிற்கே உரிய சிறு தானிய வகையைச் சார்ந்தது. 

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்


வாழை மரம் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்கும் மரமாகும். வாழையின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன்  கொண்டவை. அதில் வாழைத்தண்டு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.

அதிக மருத்துவக் குணம் கொண்ட சின்ன வெங்காயம்

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.

உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.

Thursday, December 25, 2014

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்



பெண்களுக்கு பிரத்யோகமாக வரக்கூடிய சில நோய்களிலினின்று பெண்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய ஆற்றல் சில கனிகளுக்கு உண்டு. அவற்றுள் முதன்மையாக கருதக்கூடிய கனி அத்திப்பழம். இது பெண்களுக்கு மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்த சோகையை தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

கஸ்தூரி மஞ்சள் மகிமை

கஸ்தூரி மஞ்சள் மகிமை


மஞ்சள்களிலே கஸ்தூரி மஞ்சள் குணங்கள் நிறைந்தது. இதில் மூலிகைகளோ இதர சேர்மானங்களோ கிடையாது. நூறு சதவீதம் கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஆறாத புண்கள், அழகுக்கு அழகை சேர்க்கும் இவற்றை பற்ற சில காண்போம்.

Wednesday, December 24, 2014

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள் அவற்றின் பயன்கள்

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள் அவற்றின் பயன்கள்



அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

குடிநீரை சுத்திகரிக்க இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக காண்போம் .


நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.

கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்

கருவளையம் காணாமல் போக தக்காளி பேஸ்ட்


சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய் விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது. ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக்கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். 

Tuesday, December 23, 2014

மீல் மேக்கர் கிரேவி

மீல் மேக்கர் கிரேவி


ஹாய் அன்பு தோழிகளே நீங்கள் சைவ ப்ரியர்களா இதோ உங்களுக்கா மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:

  • மீல் மேக்கர்                   - 20 (எண்ணிக்கையில்) (சிறயதாக இருந்தால் 20 அல்லது பெரியதாக இருந்தால் 15 எடுத்துக்கொள்ளவும்)
  • சின்ன வெங்காயம்      - 15
  • தக்காளி                          - 2
  • தேங்காய்                       - கால் கப்

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்

நெல்லியின் மூலம் குணமடையும் நோய்கள்



நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ மூலிகைகளில் மிக எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதுமான நெல்லி கடலை கடைந்து எடுத்த அமிர்தத்திற்கு ஒப்பானது நெல்லிக்காய். இதனை  பகல் பொழுதி;ல் உண்டால் கீழ் கண்ட நோய்கள் அகலும். கபம் சம்பந்தப்பட்ட சளித் தொல்லைகள்,புரையழற்சி, வாயில் அபரிமிதமாக ஏற்படும் உமிழ்நீர் சுரப்பு, தலை சுற்றல், மயக்கம், மலச்சிக்கல், பித்த அதிகரிப்பான பயித்தியம் ஆகிய நோய்கள் அகலும். நெல்லிக்காயை உண்பதால் அழகு உண்டாகும்  அதனுடைய புளிப்பு சுவை வாயுத் தொல்லையை போக்குகிறது. அதனுடைய துவர்ப்பு கபத்தை நீக்குகிறது.

கோவாக்காய் ப்ரை

கோவாக்காய் ப்ரை


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாட உணவில் கோவக்காய் ப்ரை சேர்த்து வர நல்ல பலன் உண்டு. ஆனால் நீங்கள் என்னை கேட்கலாம் எண்ணெய் நிறைய ப்ரை பண்ண தேவைப்படும் எப்படி என்று கவலைப்பட வேண்டாம். எண்ணெயை பொரியலுக்கு செய்ய எடுத்துக்கொள்வது போல் எடுத்துக்கொள்ளலாம், அப்படியில்லையா நாண் ஸ்டிக் டவா உபயோகப்படுத்தலாம். 

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்


பாகற்காய் போன்று கசப்பு சுவையுடைய காய்கறிகளில் ஒன்றானது. நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை அதிகம் கொண்டதுமான கோவக்காயைப் பற்றி பார்ப்போம்.

கசப்பான மருந்துதான் நோயை விரைவில் குணமாக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல கசப்பான காய்கறிகள் தான் மனிதர்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்களை தீர்க்கக்கூடிய இயற்கையான மருந்துப் பொருட்களாகும்.

Monday, December 22, 2014

முகத்தில் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய சில டிப்ஸ்

முகப்பரு வந்தவுடன் முகத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்து அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் பருவைப் பலர் கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் அவ்விடத்தில் கரும்புள்ளிகள் நிலைத்து முகத்தின் அழகைக் கெடுக்கிறது. சில சமயம் பருக்களே உதிர்ந்து அவ்விடத்தில் தழும்பாக கரும்புள்ளிகளை உண்டாக்குகிறது.  

இந்த கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. கடைகளில் கிடைக்கும் கிரீம்களால் பல நேரம் பக்க விளைவுகள் உண்டாகின்றன. பக்க விளைவுகள் அற்ற மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம்.

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்


மனித உடலானது திறம்பட செயல்பட அனைத்து சத்துக்களும் தேவை. இந்த சத்தானது நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேருகிறது. இதில் ஏதேனும் ஒரு சத்துப் பொருள் குறையும் போது தான் நம் உடலை நோய தாக்க ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் பற்றாக் குறையினை ஈடுகட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை விட, நோய் வரும் முன் காத்தலே சிறந்தது.

Sunday, December 21, 2014

கால்சியம் மிக அதிகம் உள்ள எள்

கால்சியம் மிக அதிகம் உள்ள எள்


நவதானியங்களில் ஒன்றாய எள் நமது நாட்டிற்கே உரியதானிய வகையாகும். இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிகளில் இடம் பெற்றுள்ள எள். நம் தமிழர் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. எளிய உணவு தானியங்களில் ஒன்றான எள் நமது உடலுக்கு நன்மை தரும் பல சத்துக்களை கொண்டுள்ளது. எள் நாவுக்குச் சுவை தருவதோடு உடலுக்கு மருந்தும் ஆகிறது.



எள்ளில் கருப்பு, வெள்ளை, செம்மை என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் கருப்பு எள் சற்று அதிக சத்துக்களைக் கொண்டுள்ளது.

Saturday, December 20, 2014

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்



கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர். 

உலகை மிரள வைத்த திருநள்ளாறு

உலகை  மிரள வைத்த திருநள்ளாறு


சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து நின்று, பிறகு  வழக்கம்போல் வானில் பயணத்தைத் தொடர ஆரம்பித்தது. எந்தவித பழுதும் அந்த செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படவில்லை. கீழே நாசாவிலிருந்தும்  எந்த உத்தரவும் அளிக்கப்படவில்லை.

Monday, December 15, 2014

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

நவதானியங்களில் மிகுந்த புரதச்சத்து உள்ள ஒரு தானியம் பச்சை பயறு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியார் வரை அனைவரும் தம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய எளிய தானிய வகை. நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் உண்பதற்கு ஏற்ற தானியம் பச்சை பயறு.

பச்சை பயறின் தாவரவியல் பெயர் Vigna radiate இது ஆசியா கண்டம் முழுமையும் விளையக்கூடிய அரிசி, கோதுமை போன்ற பயிர் வகையை சேர்ந்தது ஆப்பிரிக்கா வட அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இதனை விளைவிக்கின்றன.

Saturday, December 13, 2014

முந்திரி காளான் மசாலா

முந்திரி காளான் மசாலா


தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 1 கப்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்

நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும்
தவிர்க்க வேண்டிய உணவுகள்


இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்... நோய்கள்... துன்பங்கள்!

நாம்சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக  இருந்தால் மட்டும் போதுமா... உடலுக்கு  ஆரோக்கியமானதுதானா என்று யோசித்திருக்கிறோமா?

'தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்என்று சொன்னாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள், ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும்மூலிகைத் தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால் மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

Thursday, December 11, 2014

சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சருமத்தைப் பாதுகாக்க சில இயற்கை வழிமுறைகள்

சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துபவர்களுக்கு சருமத்தைப் பாதுகாக்க சில இயற்கை வழிமுறைகள்


''வருடத்தின் 99 சதவிகித நாட்கள் வெயில் கொளுத்தும் நம் நாட்டில்தான் வைட்டமின் டி குறைபாடும் உள்ளது.  வெளியில் வெயிலில் செல்ல வேண்டும் என்றால் பயம். சூரியனை நம் சருமத்தின் முதல் எதிரியாக நினைக்கிறோம். சூரியக் கதிர்வீச்சுக்குப் பயந்து ஒருநாளைக்கு மூன்று- நான்கு முறைகூட சன்ஸ்கிரீன் போட்டுக்கொள்கிறோம்.

Monday, December 8, 2014

ஆரத்தி - விஞ்ஞான நலன்



தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. 

Wednesday, November 26, 2014

உடலில் ஏற்படும் சீர்கேடுகளை போக்க மூலிகை மருத்துவ குறிப்புகள்

பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம். 


சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது. 

மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ் (நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது. 

Friday, November 21, 2014

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மெண்ட்... 
கேரட் சாறு-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன்... 
இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வரவேண்டும். 
உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு `பளிச்' பேக் இருக்கிறது. 
முல்தானிமட்டி-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன்... 
இரண்டையும் கலந்து முகத்துக்கு `பேக்' போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த `பேக்' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணையை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கிவிடும். 
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் `பேக்' இருக்கிறது. 
உருளைக்கிழங்கு ஜுஸ்-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன், 
பயத்த மாவு-1 டீஸ்பூன்... 
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு`பேக்' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த `பேக்' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Monday, November 17, 2014

நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில வழிமுறைகள்


இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. முதுமை அடைந்தால்தான் வரும் என்ற நிலைமை மாறி, இளம் வயதிலேயே இந்தத் தொற்றாத நோய் பெருக ஆரம்பித்துவிட்டது.


உடல் இயக்கம் இல்லாமை, கொழுப்பு-சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் ஊதுவதும்தான் இதற்குக் காரணங்கள்.


நீரிழிவு நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

தியானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.


நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Thursday, November 13, 2014

குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு, ஷாம்புக்கு குட்பை சொல்லுங்கள்

முதல் வேலையாக குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். 

அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத்தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். 

Wednesday, November 12, 2014

எளிய மருத்துவக் குறிப்புகள்


1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:

அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் பவனமுக்தாசனம்

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. (பவன – வாயு, முக்தி – விடுதலை).


செய்முறை

# மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும்.

# உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம்.

# கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கும் பயறு

உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.


சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைக்கும் வீரபத்ராசனம்

வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.

முதல் நிலை:

# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.

# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.

மரீச்யாசனம்


செய்முறை

# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.

# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.

# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.

# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.

தலைவலிக்கு சிறந்த கை மருந்துகள்

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.


இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர வேண்டும் என்று தோன்றும். கண்களில் ஒளிவட்டங்கள் தெரியும். கை மரத்துப் போகலாம். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மலச்சிக்கல், மனச்சோர்வு, உணவில் அதிக நாட்டம், கழுத்து வலி, கொட்டாவி விடுதல் போன்றவை இதில் காணப்படும்.

Monday, October 27, 2014

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்கள்

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:

1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.

2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.

4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.

நல்லெண்ணை முழுக்கிற்கு விஞ்ஞானம், சோதிடம் கூறும் விளக்கம்

நம் முன்னோர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நல்லெண்ணை உடல் முழுக்கப் பிரட்டி சிறிது நேரம் (உடம்பில் சுவறும் வரை) இருந்து தோய்வது வழக்கமாக இருந்தது எங்கள் எல்லோருக்கும் தெரியும். காரணம் கேட்டால் உடம்புச் சூடு தணிய என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னுமொரு காரணம் இருப்பதாக விஞ்ஞான ரீதியில் கூறப்பெற்றுள்ளது. 

இந்தச் சனிக்கிரகம் உடலுக்குத் தீங்கு (தோஷத்தை) ஏற்படுத்தக் கூடிய தீய கதிர் வீச்சுக்களை வீசுகின்றது. அதனால் அதனை ஒரு பாபக் கிரகமாக ஜோதிடம் அடையாளம் காட்டுகின்றது. சனிக்கிரகம் ஒரு ஜாதருக்கு பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடிய இடங்களில் (ஜாதகத்தில் சந்திர ராசிக்கு 1, 2, 5, 8, 12 ஆகிய இடங்களில்) கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர்வீச்சுக்கள் மேலும் தீவிரம் அடைவதாக கணிக்கப் பெற்றுள்ளன. அதனால் அந்த ஜாதகர் உடல், உள்ளம் ரீதியாக பெரும் பாதிப்பை பெறுகின்றார். சனிக்கிரகத்தில் இருந்து வரும் கதிர்களை எள் எண்ணையில் சுவறிய எமது உடம்பு, தாக்க விடாது தடை செய்கின்றது. தீய கதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணைமுழுக்கு.

இத் தீய கதிர்கள் மூளை நரம்புகளை பாதிக்கின்றது. ஜாதகருடைய சிந்தனைகளை திசைமாறிச் செல்ல வைத்து பல சிக்கல்களில் மாட்டிவிடுகின்றது. அந்தக் கிரகத்தின் கதிர் வீச்சிலிருந்து தப்பிக்க பல பரிகார சடங்குகள் இருந்தாலும் மிக முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் உடல் முழுக்க எள் எண்ணைய் (நல்லெண்ணை வைத்து) பிரட்டி சூரிய உதயத்தில் 1/2 மணி நேரம் நின்ற பின் தோய வேண்டும், அதனால்தான் எமது முன்னோர்களும் சனிக்கிழமைகளில் எண்ணை வைத்து தோயும் வழக்கத்தினைப் பின்பற்றியுள்ளனர் என்பது வெளிப்படை. ஆனால் தற்போது நாகரீக மேலாதிக்கத்தினால் அவை பின்பற்றப் பெறுவதில்லை

அதிசய பானம்......!!

A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும் விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.


இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......!

Sunday, October 19, 2014

ரத்த புற்றுநோய் குணமாக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும்  பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும். 

பல்வேறு உடல் குறைபாடுகளையும், உற்ற நோய்களையும் போக்கும் குணம் வெண்டைக்காய்க்கு உண்டு. மலச்சிக்கல், மனச் சிக்கல் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு. 

முகமானது அழகாக, பொலிவாக, மென்மையாக இருக்க வெள்ளரி ஃபேஸ் பேக்

வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்குகிறது. 


இதனால் சருமமானது பொலிவுடன், பிரகாசமாக இளமை தோற்றத்தைத் தருகிறது. 

எப்படியெல்லாம் ‘வெள்ளரி ஃபேஸ் பேக்’ செய்யலாம் என்று பார்க்கலாம். 

Tuesday, October 7, 2014

அன்றாட சமையலுக்கு பயன்படுத்து மசாலா பொருட்களின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆயுர்வேத மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், போஷாக்கு நிறைந்த  உணவாகவும் கருதப்படுகிறது. 

கொத்தமல்லி


உண்மையாகவே சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா  பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர்வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப் படுத்துவதற்காக  பயன்படுத்துகின்றனர்.. ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சனையை தவிர்த்து சுவாச  பிரச்சனைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாகுவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரிசெய்கிறது.. பித்தம் அதிகமாகி பித்த  வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.

ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பிஸ்தா

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. 


பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. 

கருமையை போக்கும் எலுமிச்சை ஃபேஸ் பேக்

எப்போதும் டூ-வீலரில் பறக்கும் அவசரப் பறவையா நீங்கள் இந்த வெயில், உங்களின் மென்மையான முகம், கை, பாதம் போன்ற பகுதிகளை பதம் பார்த்துவிடுமே... என்ன செய்யப் போகிறீர்கள்? இதோ, உங்கள் சருமப் பாதுகாப்புக்கு ஒரு விசேஷ குளியல் பவுடர். 


எலுமிச்சை தோல்-50 கிராம், 
கஸ்தூரி மஞ்சள்-100 கிராம், 
கசகசா- 50 கிராம், 
பயத்தம் பருப்பு- கால் கிலோ... 

லவங்கம் மருத்துவ பயன்

* இலவங்கத்தை நீர்விட்டு மைய அரைத்து நெற்றி மீதும் மூக்குத் தண்டு மீதும் பற்றாகப் போட்டு வைக்க தலை பாரம், தலையில் நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன குணமாகும். 


* இலவங்கத்தை லேசாக வதக்கி வாயிலிட்டுச் சுவைப்பதால் தொண்டைப் புண் ஆறும். ஈறுகள் கெட்டிப்பட்டு பற்கள் உறுதி பெறும். 

Monday, October 6, 2014

நீண்ட ஆயுளைத் தரும் மூக்கிரட்டை கீரை

மூக்கிரட்டை கீரை மண்ணில் புல் வெளிகளிலும், நிலங்களிலும் படர்ந்து வளரும் கொடி இனத்தை சார்ந்தது. இதில் இரண்டு வகைகள் உண்டு. பொதுவாக மூக்கிரட்டையானது அது சிறிய சற்று வட்டமான இலைகளையும் சிவந்த பூக்களையும் கொண்டு தரையில் படரும் பூண்டு வகை ஆகும். 

இதைப் போலவே உருவம் கொண்டு சற்று பெரிய இலைகளையும் தடுமனான, வட்டமான வடிவத்தையும் வெண்மையான பூக்களையும் கொண்டு, காம்புகள் சற்று பருமனாகவும் கொண்டு விளங்குவது. ஆயுர்வேத நூல்களின்படி மூக்கிரட்டை என்பது உஷ்ணத்தை தருகிற ஒரு மூலிகை ஆகும். 

Saturday, October 4, 2014

சபரிமலை ஐயப்பனின் 18 படிகளின் தத்துவம்..


முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

அடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.

அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.

மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர் கூறுகின்றனர்.

Monday, September 29, 2014

சிதம்பர ரகசியத்தின் உண்மை ---- !!

கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?

எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....

இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..


அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..

பலவற்றை அறிய விஞானம் - ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ...

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...

அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,

இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

Saturday, September 27, 2014

பருக்கள் மறைய வேப்பிலை

சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் தோன்றி கைபட்டாலே எரிச்சலும், முகத்தைப் பார்த்தாலே வேதனையும் பீரிடும். இதற்கும் வேப்பிலையில் அருமையான சிகிச்சைகள் இருக்கின்றன. இரண்டை மட்டும் இங்கே பார்ப்போமா? 


1. ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி எடுங்கள். வேப்பிலை, மஞ்சளை சம அளவு அரைத்து பருக்களின் மீது பூசுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள்.

Friday, September 26, 2014

முடி உதிர்வதைத் தடுக்கும் எண்ணெய் மசாஜ்

மன அழுத்தம், டென்ஷன், தூசி,  ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். 


*  தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 

Tuesday, September 23, 2014

வாழைப்பழத் தோல்களில் சில மருத்துவம்

 அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன. 


வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும். 

Friday, September 19, 2014

இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும். 

இச்சத்து உடலிலுள்ள பல திசுக்களிலும், ரத்த வைட்டமின்களிலும் குடற்பகுதியின் உட்புறம் உள்ள சளிப்பகுதியிலும் பினியல் கிளாண்ட் என்னும் சுரப்பியிலும் மத்திய நரம்புப் பகுதியிலும் காணப்படுகிறது செர்டோனின் எனும் மருந்து சத்து குடலில் சீரணத்துக்கான திரவத்தைச் சுரக்கச் செய்து, மென் திசுக்களைச் தூண்டி செயல்பட வைப்பது, ரத்த நாளங்கள் சுருங்கி விரிவடையத் துணை நிற்கிறது. 

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவு

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம். 


பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். 

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி


எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 

அப்படி இருக்கக்கூடாது. என்ன நோய்க்கு, என்ன முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை உலக முதல்-உதவி தினமாகக் கொண்டாடப்படுகிறது அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) உலக முதல் உதவி தினமாகும். 

இதை முன்னிட்டு நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்... 

Tuesday, September 9, 2014

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்



பொட்டு :

பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு : 

மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி : 

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

Monday, September 8, 2014

ஜீரண கோளாறை போக்கும் ஓமம்

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.  சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.  


இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓம திரவம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.  

Thursday, September 4, 2014

சருமத்துக்கு பளபளப்பு தரும் பயத்தம் பருப்பு


பெரியவர்கள், இளையவர்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் பச்சிளங்குழந்தைகளின் சருமத்துக்கும் கூட பளபளப்பு தந்து பாதுகாப்பு வளையத்தையும் போனஸாக வழங்குகிறது பயத்தம் பருப்பு!

Sunday, August 31, 2014

கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்கள்


கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.

1.வைகாசி வளர்பிறை:- முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

2.செவ்வாய் விரதம்:- ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.