Monday, December 30, 2013

எளிய மருத்துவக் குறிப்புகள்

வீட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் எனப்படுவது எப்போதுமே கைகொடுப்பது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் தும்மலுக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுவது வழக்கமாகிவிட்டது.

அவ்வாறு இல்லாமல் சில எளிய மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டால் அவை பொதுவாகவும் அவசரத்துக்கும் கைகொடுக்கும்.


1) வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் பெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

2) முழு நெல்லிக்காய் 4 பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக் அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.

3) வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்தது சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.

4) வெந்தயக்கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்

5) வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சோத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.

6) வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.

7) வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.

8) வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு பிரச்சனை குணமாகும்.

9) வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.

10) மூங்கில் மொக்குகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

11) முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்


  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
  • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
  • பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
  • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
  • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
  • தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
  • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
  • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
  • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
  • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
  • ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
  • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
  • மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.
  • பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
  • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
  • பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
  • தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  • தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
  • தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Monday, December 23, 2013

இயற்கை மருத்துவ - முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க இயற்கை மருத்துவ டிப்ஸ்:-

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க, முகம் பொலிவு பெற இயற்கை மருத்துவ டிப்ஸ்:-


* வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

* பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர்ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால்,முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

Saturday, November 23, 2013

கீரை மருத்துவம் - தாய் பால் அதிகம் சுரக்கும் பருப்பக் கீரை


செடி வகையைச் சேர்ந்தது அக்கீரை ஒரு காம்பில் இரண்டே இலைகள் காணப்படும். பச்சையும் சாம்பல் நிறமும் கலந்தது.

Portulaca Oleracea

பருப்புக் கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கி உடலில் இருக்கும் நாள்பட்ட பல நோய்களைத் தீர்க்கக் கூடியது. நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற பாதிப்புகளைப் போக்கும்.வெட்டைச்சூடு, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். தாய்ப்பால் இல்லாத பெண்கள், பருப்பு கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா இத ட்ரை பண்ணுங்க...

உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!


1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?


ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை



நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.

கீரை மருத்துவம் - கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் நோய்களுக்கு பசலைக் கீரை


கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் பந்தலில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். 

பசலையில் இருவகை உண்டு:-

1.கொடிப்பசலை 
2.தரைப்பசலை
தரைப்பசலை  (Portulaca quadrifida)

கொடிப் பசலையில் இருவகைகள் உண்டு. ஒன்று சிவப்பு வகை மற்றொன்று வெள்ளைப் பசலை வெள்ளைப் பசலை வெண்ணிறம் கிடையாது. பச்சை நிறம் உடையது. இலை பெரியதாக இருக்கும் இது கொடியாகப் படரும் சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.
துரைப்பசலை தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும் பச்சை நிறத்திரும் காணப்படும் இதன் இலை சிறியதாக இருக்கும். 

Friday, November 22, 2013

மூலிகை மருத்துவம் - இருமலுடன் கூடிய சளிக்கு கை கண்ட மருந்து கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .


கற்பூரவள்ளி (கோலியஸ் ஆறோமத்திக்குச்) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

உடலுக்கு அவசியமான அறுசுவைகள்

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.


நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம் உண்கிறோம்.

கீரை மருத்துவம் - கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய கரிசலாங்கண்ணி

 இக்கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும் இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றது வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணியில் மஞ்சள் பூ பூக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணியின் கசப்புத்தன்மை குறைவு, வெள்ளையில் கசப்புத்தன்மை அதிகம்

மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் மிகவும் விசேஷமானது. இரண்டையும்  சமைத்துச் சாப்பிடலாம். இதுதான் சமையலுக்கு ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது. கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

கீரை மருத்துவம் - ஆரம்ப நிலை காச நோய் குணமாக்கும் புளிச்சக் கீரை

இக்கீரையின் பெயரைக் கேட்டதும் புளியேப்பம் வருகிறதா? பெயர்தான் புளிக்கிறதே தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவுகிற கீரை இது.

இக்கீரை உணவுக்காக மட்டுமின்றி நார் எடுக்கவும் பயன்படுகிறது. வேறெந்தக் கீரையிலும் அத்தன்மை கிடையாது.

கீரை மருத்துவம் - பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படுகிறது தூதுவளை

கோடி வகையைச் சேர்ந்தது இது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூது வளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.
Solanum trilobatum

நாட்டு வைத்தியத்திலும், சித்த வைத்தியத்திலும் தூதுவளை நன்கு பயன்படுகிறது இதன் மருத்துவகுணம் தெரிந்தவளைத் தவிர மற்றவர்கள் இதை உணவுப் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். இக்கீரையை கலவைக்கீரையோடு கலந்துதான் சமைப்பார்கள்

மூலிகை மருந்து: ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும் சிறியா நங்கை, பெரியா நங்கை


சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

காய்கறிகள் மருத்துவம் - ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் உடல்நல நன்மைகள்:-

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..

கீரை மருத்துவ: பலநோய்களை குணப்படுத்து பொடுதலை கீரை

Phula nodiflora

இதன் சுபாவம் சூடு. அதிகமாய் உணடால் சூட்டை கிளப்பிவிடும். அளவோடு உண்டால மருந்தாக நமக்கு உதவும். கிராமங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சத்துக்கள் அதிகமில்லாவிட்டாலும் பலநோய்களை இக்கீரை குணப்படுத்துகிறது.

Thursday, November 21, 2013

குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்


'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும்.

குழந்தைகளின் வாந்தி நிற்க..

வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.

கருத்தரிக்க உதவும் அதிமதுரம்


அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

மூலிகை மருந்து: எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்:



ஆஸ்துமா குணமடையும்

வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.

மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.


  • விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

மூலிகை மருந்து:தோல்வியாதிகளுக்கு தொட்டாற்சுருங்கி

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள்

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

மூலிகை மருந்து:மன அழுத்தம் நீக்கும் மருதாணி

மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்

உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய கருப்பு கண் பீன்ஸ்


கருப்பு கண் பீன்ஸ் விதை பேருக்கு ஏற்றார் போல வெள்ளை நிறத்தில் சிறிய கண் போன்ற கருப்பு நிற புள்ளியை பெற்றுள்ளது. பொதுவாக பீன்ஸை  சமையலுக்கு பயன்படுத்துவோம் அதிலும் கருப்பு நிற புள்ளிகளைக் கொண்ட பீன்ஸ் கூடுதலான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. வெள்ளை நிற  அவரை விதை உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய நார்சத்து, புரதம், இரும்பு சத்துகளை பெற்றுள்ளது.

இதயத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டியவை

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும்  கொழுப்பை  குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது.  நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை  அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.

தும்மல்,மூக்கடைப்பு,தலைவலி சித்தர் மூலிகை மருத்துவம்

சைனஸ் தொந்தரவில் பல வகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது.  சைனஸ் பிரச்னையில் மூக்கிற்கு அருகே உள்ள காற்றறையான சைனஸ் என்ற இடைவெளியில் நீர் கோர்த்து சளியாக மாறி அடைப்பதால்  வருகிறது. சைனஸ் தொந்தரவின் முக்கிய குறிகுணம் மூக்கடைப்பு ஆகும்.

கடும் சளியை முடிவுக்குக் கொண்டுவரும் சுக்கு


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

Tuesday, November 19, 2013

முடி உதிர்வதைத் தடுக்க இயற்கை மருத்துவம்

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!



தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

Monday, November 18, 2013

கால் பாதமும் உடல் உறுப்புக்களின் தொடர்பு


அஞ்சறைப் பெட்டி மருத்துவம்: நறுமண மூலிகைகளின் அரசன் மிளகு

வருமுன் காப்போம் என்பது இன்றைய மருத்துவத்தின் குறிக்கோள்.இயந்திர வேகத்தில் இயங்கும் மனித வாழ்க்கையில், அன்றாட வாழ்வில் உணவுக்கு உள்ள முக்கியத்துவத்தையே மறந்து விடுகிறோம். நமது உடலை நோய் வருவதற்கு முன்பே காப்பது நம்முடைய உணவு முறைதான். முறையான சரிவிகித உணவு நம் உடலின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்துகிறது.

Monday, November 11, 2013

சத்துப் பட்டியல்:தேங்காய்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும்


அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

வீட்டு மருத்துவம்



  • நெல்லி வற்றல்- சந்தனத்தூள்- கொத்தமல்லி மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும். 
  • வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும். 
  •  மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

மூலிகை மருந்து:அரிவாள்மனை பூண்டு மருத்துவக் குணம்

அரிவாள்மனைப் பூண்டின் இலையை கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய ரத்தப்பெருக்கு உடனே நின்றுவிடும். அரிவாள்மனைப் பூண்டின் இலை, அதேயளவு குப்பை மேனி இலை கைப்பிடியளவு, பூண்டுப் பல் 2, மிளகு, 3 சேர்த்து அரைத்த புன்னக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து, காயத்திலும் வைத்துக் கட்ட நஞ்சு முறியும் (உப்பு, புளி நீக்கவும்)

கல்லீரலில் உள்ள கொழுப்பை மருந்து பூண்டு

பூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பாஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள். 

பூண்டில் வைட்டமின்கள் 'ஏ', பி1, பி2, பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரசத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்களும் நிரம்பி உள்ளன. பூண்டுவை குழம்பில் சேர்த்தாலோ வேறு பதார்த்தங்களில் சேர்த்து சாப்பிட்டாலோ வாயுத்தொல்லையில் இருந்து விடுபடலாம். ஜீரண சக்தியும் அதிகரிக்கும். 

Saturday, November 9, 2013

ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்




நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல்ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.

தாய்ப்பால் கொடுப்பது தாய்-சேய் இருவருக்கும் ஆரோக்கியம்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும்தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.

ஆனால் ஏனைய பால்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே உடல் நிறை அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயிலிருந்து தாய்மார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள்
பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.

அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.

எண்ணெய் குளியலில் தான் எத்தனை வகைகள்

தீபாவளிக்கு தீபாவளிதான் பலரும் தலையில் எண்ணெய் வைத்து குளிக்கிறார்கள். ஆனால், வாரந்தோறும் சனிக்கிழமை எண்ணெய் குளியல் போட்டால் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதனால்தான், ‘சனி நீராடு’ என்று அந்த காலத்திலேயே சொன்னார்கள். நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து குளிப்பது மட்டுமே எண்ணெய் குளியல் அல்ல.

கரு கரு' கூந்தலுக்கு குட்டி டிப்ஸ்

கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...

குழந்தையின் வாயுத்தொல்லை நீங்க சில பாட்டி வைத்தியம்

வாயுத்தொல்லை என்பது பிறக்கும் குழந்தை முதல் பெரியோர் வரை இருக்கும். பிறந்த குழந்தைக்கு எப்போதும் தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையானது சிலசமயம் வாயுத்தொல்லை
அல்லது மலச்சிக்கல் அல்லது வயிற்றுக்கடுப்பு போன்றவற்றால் அவதிப்படும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது வளர்ச்சியில் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். அதேப் போல் ஒரு சில பாட்டி வைத்தியமும் இருக்கிறது, அது என்னவென்று படித்துப் பாருங்களேன்...

சின்னச் சின்ன வைத்தியம்


  • தினமும் 10 கறிவேப்பிலைகளை மென்று தின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • தோண்டை கரகரப்பு, தொண்டை வலி இருந்தால் மிளகுத் தூளோ, சிறிதளவு உப்போ கலந்து மெல்லுங்கள்.
  • சாதாரணமான பூச்சிகள் கடித்தல் இடத்தில் வெள்ளைப் பூண்டு ஒன்றைக் கசக்கி தேயுங்கள். சரியாகி விடும்.
  • லேசான தீக்காயம் பட்ட இடத்தில் உடனடியாக சிறிதளவு டூத்பேஸ்ட் தேயுங்கள் சரியாகி விடும்.
  • தினமும் சிறிதளவு வெந்தயத்தை பாலில் அரைத்து முகத்தில் தேய்த்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.
  • முகப்பரு இருக்கும இடத்தில் பூண்டு சாறால் தேயுங்கள்.
  • வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்தால், முடி உதிர்வது குறையும் வாரத்தில் ஒருமுறை தொடர்ந்து அவ்வாறு செய்து வரவேண்டும்.
  • ஆட்டுப்பாலில் டீ தயாரித்து கினமும் பருகினால் தைராய்டு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
  • வாழைத்தண்டில் இருக்கும் நாரை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
  • முகுகு வலி இருப்பவர்கள் ஒரு கிலோ உப்பை துணிப்பையில் கட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முதுகில் வைக்க வேண்டும். வலி குறையும்.


உணவில் தேவையான சத்துகள்



1. இரும்புச் சத்து 

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். பெண்களுக்கு 12.5% கிராமும் ஆண்களுக்கு 14.5% கிராம் இருப்பது அவசியம். 10% கிராமிற்குக் கீழே இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச் சத்து நிறைந்த டானிக்குகள் அல்லது மாத்திரைகளையும் உண்பது அவசியம்.

கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய வலிகள்

‘தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக்  காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி,  அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க  அவதிப்படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்னை இது...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.

Monday, November 4, 2013

அஞ்சறைப் பெட்டி -கடுகு

நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண் டு நோய்நொடியின்றி வாழலாம்.


கடுகில் இரண் டு வகை உண்டு. அவை கருங்கடுகு மற்றும் வெண்கடுகு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‚… என்ற பழமொழிக்கேற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.

காய்கறிகளின் மருத்துவம்: புண்களை ஆற்றும் பூசணிக்காய்

கிராமப்புறங்களில் மார்கழி மாதம் முழுவதும் அனைவரின் வீட்டு கோலங்களின் மீது தவறாமல இடம் பெறுவது இந்த பூசணிக் பூ. இதை வைத்து திரைப்பட கவிஞர்கள் பல பாடல்களை இயற்றியுள்ளனர். இதிலிருந்தே பூசணிக்காயின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும், நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான பூசணிக்காய் பற்றி காணலாம்.

Wednesday, October 30, 2013

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.


•தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செறிக்கும் . மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்.



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

பாட்டி வைத்தியம்

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.


* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.