Monday, November 4, 2013

அஞ்சறைப் பெட்டி -கடுகு

நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண் டு நோய்நொடியின்றி வாழலாம்.


கடுகில் இரண் டு வகை உண்டு. அவை கருங்கடுகு மற்றும் வெண்கடுகு.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‚… என்ற பழமொழிக்கேற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.


கடுகு சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிரடப்படுகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படுகிறது. இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

கடுகு குளிர்ந்த நீருடன் சேரும் போது அதன் மேல்தோல் அப்புறப்படுத்தப்பட மைரோஸினேஸ் எனப்படும் என்ஸைம் வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணமாக இருக்கிறது. நம் நாட்டு சமையலில் சூடான எண்ணெயில் கடுகை பொரிக்கின்றோம். அப்போது அதன் மேல்தோல் அகலுகிறது. அதனால் மணமும் கார சுவையும் நம் சமையலில் சேர்க்கின்றது.

கடுகின் சத்துக்கள் :

கடுகில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள நச்சுத் தன்மையை போக்கும். இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆறறல் கிடைக்கிறது. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கடுகு நொதிகளில் செய்பாடு நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நியாசின் கடுகில் அதிக அளவில் உள்ளதால் இரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.

செரிமானத்தைத் தூண்ட :

செரிமானத்தைத் தூண்டும் சக்தி கடுகுக்கு உண!டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

இருமல் நீங்க :

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண!டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண!டாக்கும். இந்த இருமல் நீங்க கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலியுடன் உண!டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

வயிற்றுவலி குணமாக :

அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண் டாக்கும். கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இந்த வயிற்றுவலி நீங்கும்.

நஞ்சு உண்டவர்களுக்கு :

தெரிந்தோ தெரியாமலோ சிலர் நஞ்சை உண்டிருந்தால் அவர்களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுக்க வேண!டும். இவ்வாறு கொடுப்பதால் வாந்தி உண்டாகும். இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் நஞ்சானது வெளியேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகை அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

இருமல் இளைப்பு நீங்க

கடுகுத்தூள், அரிசி மாவு இவைகளை சரி பாதியாக எடுத்து வெந்நீரில் கலந்து களி போல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண!டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம்.

சிறுநீர் பெருக்கி :

கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.

கை, கால்கள் விரைப்பு சீராக :

கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும். உடனடியாக விரைப்பு சீராகும்.

இரத்தக் கட்டு, மூட்டு வலி குறைய :

கடுகை அரைத்து பற்று போட்டால் இரத்தக் கட்டு, மூட்டு வலி போன்றவை குறையும்.

கடுகு எண்ணெய் :

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

*    கடுகு எண்ணெய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*    கூந்தல் வளர்ச்சிக்கும், சரும பாதுகாப்பிற்கும் கடுகு எண்ணெய் உதவுகிறது.

*   கொழுப்பு சத்து அதிகமில்லாத கடுகு எண்ணெய் இதய நோயை தடுக்கும்.

* கருப்பை கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும் பங்கு வகிக்கிறது. கடுகு பெண!களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. நல்ல தூக்கத்தை கொடுக்கிறது.

இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த கடுகை நம் அன்றாட உணவில் சேர்த்து நம் உடல் ஆரோக்கியத்தை பெருக்கிக்கொள்வோம்.


No comments:

Post a Comment