நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களையே உணவாக சாப்பிட்டு வந்தார்கள். ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் அஞ்சறைப் பெட்டி என்னும் அற்புத மருந்து பெட்டகம் இருக்கிறது. அதில் உள்ள உணவுப் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணம் மிக்கவை. அவற்றின் மருத்துவ குணங்களை அறிந்து உபயோகித்தால் நாம் நூறாண் டு நோய்நொடியின்றி வாழலாம்.
கடுகில் இரண் டு வகை உண்டு. அவை கருங்கடுகு மற்றும் வெண்கடுகு.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது‚… என்ற பழமொழிக்கேற்ப எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்ளையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் கடுகை பயன்படுத்தி வந்துள்ளோம்.