பித்தம் குறைக்கும் மாதுளம் பூ
மாதுளை என்பது கனிவகைகளில் ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலும் மாதுளம் பழத்தை உண்பதற்கு பயன்படுத்தி வரக்கூடிய நாம், மாதுளையின் பூக்களிலே அதிக மருத்துவ குணம் உண்டு
மருத்துவப் பயன்
மாதுளம்பூவினை எடுத்து, நிழலில் உலர்த்தி, நன்கு பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தேனிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து தினசரி காலை-மாலை என இருவேளையும் அருந்தி வரலாம். இதனால் பசி நன்கு தூண்டப்பட்டு, உண்ட உணவு நன்கு சீரணமாகும். நோய் எதிர்ப்பாற்றல் நன்கு வளரும். இதனால் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். உடலும் வன்மை பெறும்.