Wednesday, July 23, 2014

சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மஞ்சள்

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. 



மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

முகம் பளபளக்க இயற்கை பொருட்கள்

என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம்


  • முதலில் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் செய்வது அவசியம்.


  •  உடல் உழைப்பு என்பது தற்போது குறைந்துவிட்டது. அதனால் உடற்பயிற்சியை தினமும் அரை மணிநேரமாவது செய்வது நல்லது.

 இப்படி உடலும், உள்ளமும் சீரானால் என்றும் இளமை தான்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும் சோற்றுக் கற்றாழை

கற்றாழை பொதுவாக சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, ரயில் கற்றாழை (அ) ராகாசி மடல் என பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் சோற்றுக் கற்றாழையே நமக்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது. 


சோற்றுக் கற்றாழையில் அத்தியாவசியமான வைட்டமின்களான ஏ,சி, இ, போலிக் ஆசிட், கோலின் பி1, பி2, பி3 (நியாசின்), பி6 மற்றும் பி12 ஆகியன அடங்கியுள்ளன. மேலும் அமினோ ஆசிட்களும், சோற்றுக் கற்றாழையில் நிறைந்துள்ளன. 

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.


  •  கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால்,

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க எலுமிச்சை

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. 


மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். 

கருவளையத்தைப் போக்கும் எலுமிச்சை

எலுமிச்சையின் சாறை ஒட்டப்பிழிந்த பிறகு, மீதியிருக்கும் தோலை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்ளும் அம்மாவை... பார்த்திருப்பீர்கள்! அத்தனை பெயர் பெற்ற எலுமிச்சையின் எழில் பலன்களைப் பார்ப்போம். 


  • அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும். 

முத்திரை முக்கிய அம்சம்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம். 

யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும்.