Saturday, November 23, 2013

கீரை மருத்துவம் - தாய் பால் அதிகம் சுரக்கும் பருப்பக் கீரை


செடி வகையைச் சேர்ந்தது அக்கீரை ஒரு காம்பில் இரண்டே இலைகள் காணப்படும். பச்சையும் சாம்பல் நிறமும் கலந்தது.

Portulaca Oleracea

பருப்புக் கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கி உடலில் இருக்கும் நாள்பட்ட பல நோய்களைத் தீர்க்கக் கூடியது. நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற பாதிப்புகளைப் போக்கும்.வெட்டைச்சூடு, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். தாய்ப்பால் இல்லாத பெண்கள், பருப்பு கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா இத ட்ரை பண்ணுங்க...

உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இரத்தம் பற்றிய அறிய தகவல்கள்!


1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில்ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

2. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?


ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க


உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை



நம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில் ஏற்படும் பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படலாம்.

கீரை மருத்துவம் - கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் நோய்களுக்கு பசலைக் கீரை


கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் பந்தலில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். 

பசலையில் இருவகை உண்டு:-

1.கொடிப்பசலை 
2.தரைப்பசலை
தரைப்பசலை  (Portulaca quadrifida)

கொடிப் பசலையில் இருவகைகள் உண்டு. ஒன்று சிவப்பு வகை மற்றொன்று வெள்ளைப் பசலை வெள்ளைப் பசலை வெண்ணிறம் கிடையாது. பச்சை நிறம் உடையது. இலை பெரியதாக இருக்கும் இது கொடியாகப் படரும் சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.
துரைப்பசலை தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும் பச்சை நிறத்திரும் காணப்படும் இதன் இலை சிறியதாக இருக்கும்.