Thursday, July 31, 2014

ஏகாதசி தினத்தன்று சாப்பிடாமல் விரதம் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு காரணம்

ஏகாதசி தினத்தன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஒரு காரணம் உள்ளது. நமது உடல் நலனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் இந்த விரததினத்தை குறிப்பிட்டு வரையறுத்துள்ளதாக தெரிகிறது.


ஏகாதசி தினத்தன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியிலுள்ள ஜல வர்க்கத்தின் மீதும் பாதிப்பு உண்டாக தொடங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலிலும் சந்திரனின் சக்தியால் பாதிக்கப்படும்.

Wednesday, July 30, 2014

முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்க


  • வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும்.



  •  தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம். 


Monday, July 28, 2014

அடிக்கடி மலச்சிக்கலா? அலட்சியப்படுத்த வேண்டாம்

நாம் சாப்பிடும் உணவு உடலுக்குள் எங்கெங்கு பயணப்படுகிறது, என்னென்ன மாற்றங்களை உடலுக்குள் சந்திக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

- அது ஒரு நீண்ட பயணம்! 

வாய் வழியாக சாப்பிடும் உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. அங்கு ஜீரண செயல்பாடுகள் நடந்து, தேவையான சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. தேவையற்றவை அனைத்தும் மலமாக பெருங்குடலை வந்தடைகிறது.

சுமார் ஒன்றரை மீட்டர் நீளத்தில், அகன்ற கேள்விக்குறிபோல் தோன்றும் பெருங்குடல், மலத்தில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி அதை இறுகவைத்து, மலக்குடலுக்குள் தள்ளும். அங்கிருக்கும் மெல்லிய தசை நாளங்கள் உடனே, மூளைக்கு ‘மலம் வந்திருக்கிறது‘ என்ற தகவலை உணர்த்தும். 

Sunday, July 27, 2014

உடல் எடையை குறைக்க மரீச்சாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். 

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும். 

பிரமர முத்திரை

பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

செய்முறை :

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.

அழகுக்கு துளசி பவுடர்

துளசி, சந்தனம், வெட்டிவேர்... இன்னும் பல மூலிகைகள் அடங்கியது என்று பல விளம்பரங்கள் சொல்லக் கேட்டிருப்போம். அழகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு அழகு பலன்கள் நிரம்பியது துளசி!


* பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது. இப்படி வரும் பருக்களை

Saturday, July 26, 2014

வாய்புண் தவிர்க்கும் முறைகள்

வாய்புண் என்பது வாய், உள் உதடு, கன்னத்தின் உட்பக்கங்களில் ஏற்படுவது. உணவு உண்ணும் போதும், ஏதாவது குடிக்கும் போதும், பல்தேய்க்கும் போதும் இது அதிக வலியினை ஏற்படுத்தும். ஐந்தில் ஒருவருக்கு அடிக்கடி வாய்புண் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. வாய் புண்ணின் பிரிவு வகைகள்... 





* சிறிய புண் : 2-6 மில்லிமீட்டர் வரை இருக்கும். இரு வாரங்களுக்குள் தானே ஆறிவிடும்.

* பெரிய புண்: அகலமாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆறுவதற்கு பல வாரங்கள், மாதங்கள் ஆகும்.

Friday, July 25, 2014

உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும் தூக்கம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக, உற்சாகமாக செயல்பட வேண்டும் என்றால்- அதற்கு நீங்கள் நேற்று இரவு நிம்மதியாக தூங்கியிருக்கவேண்டும்! ஆழ்ந்த தூக்கம் மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தை தரும். நன்றாக தூங்கியிருக்காவிட்டால் சோர்ந்துபோய் காணப்படுவீர்கள்.


அடுத்தடுத்த நாட்கள் நீங்கள் தேவையான அளவு தூங்கியிருக்காவிட்டால் உடல், பல்வேறு நோய்களுக்கு அச்சாரமிடும். மனம், அழுத்தத்திற்கு உள்ளாகிவிடும். இன்றைய நமது வாழ்க்கை முறை தூக்கத்தை தொலைக்கக்கூடியதாக இருக்கிறது. பரபரப்பு நிறைந்த பகல் வேலையில் மூழ்கி, இரவு வருவதே பலருக்கு தெரிவதில்லை.

Thursday, July 24, 2014

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு.சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை  இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழக்கம். இதை தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்.  தலைவாழை என்றதும் நம்அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்துதான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும்  இலையில்தான் நிச்சயம் இருக்கும். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது.


அதுவும் நகர்ப்புறங்களில் தட்டு அல்லது பாலிதீன் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது கால மாற்றத்தினால்  ஏற்பட்ட மாற்றம். நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்துக்கு விடுமுறை  நாட்களில் செல்லும்போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர். அதை மாற்ற முயற்சிக்கலாம். வாழை இலையில் சாப்பிடும்போது  ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என்பது நமக்கு தெரியவரும். 

சில இயற்கை வைத்தியம்


  • வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 
  • வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 

தொண்டை வலி விரட்ட சில டிப்ஸ்

தொண்டை வலி என்பது எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடியது. இவ்வாறு தொண்டை வலி ஏற்பட்டால் எச்சில் விழுங்கக்கூட முடியாது. சாப்பிடும்போதும் சிரமம் இருக்கும். எனவே இதை விரட்ட சில டிப்ஸ்...

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில்  புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி  விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும்  உண்டாகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா  தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. 

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல்  ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா டீ குடித்தால்  நல்லது. மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இவ்வாறு  குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

Wednesday, July 23, 2014

சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மஞ்சள்

கிராமப்புறத்தில் வாழும் பெண்களின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டால், அவர்கள் மஞ்சளைத் தான் சொல்வார்கள். விலைமலிவில் கிடைக்கும் மஞ்சளில் அவ்வளவு சக்தி உள்ளதா என்று பலர் கேட்பார்கள். ஆம் உண்மையிலேயே மஞ்சளில் பலர் நினைக்காத அளவில் நன்மைகளானது நிறைந்துள்ளது. 



மேலும் நம் அம்மா, பாட்டியின் அழகிற்கும் மஞ்சள் தான் காரணமாக இருக்கும். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-செப்டிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் அதில் குர்க்யூமின் என்னும் மஞ்சன் நிறமி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்.

முகம் பளபளக்க இயற்கை பொருட்கள்

என்றும் இளமையுடன் வாழும் வாழ்க்கையே அனைவரும் விரும்பும் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை அடைய, நாம் தினமும் சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும். இளமையாக வாழலாம்


  • முதலில் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும். அதற்கு யோகா, தியானம் செய்வது அவசியம்.


  •  உடல் உழைப்பு என்பது தற்போது குறைந்துவிட்டது. அதனால் உடற்பயிற்சியை தினமும் அரை மணிநேரமாவது செய்வது நல்லது.

 இப்படி உடலும், உள்ளமும் சீரானால் என்றும் இளமை தான்.

இதய நோய்கள் வராமல் தடுக்கும் சோற்றுக் கற்றாழை

கற்றாழை பொதுவாக சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, ரயில் கற்றாழை (அ) ராகாசி மடல் என பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் சோற்றுக் கற்றாழையே நமக்குப் பெரிதும் பயன்படுவதாக உள்ளது. 


சோற்றுக் கற்றாழையில் அத்தியாவசியமான வைட்டமின்களான ஏ,சி, இ, போலிக் ஆசிட், கோலின் பி1, பி2, பி3 (நியாசின்), பி6 மற்றும் பி12 ஆகியன அடங்கியுள்ளன. மேலும் அமினோ ஆசிட்களும், சோற்றுக் கற்றாழையில் நிறைந்துள்ளன. 

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

  • முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.


  •  கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால்,

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க எலுமிச்சை

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. 


மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். 

கருவளையத்தைப் போக்கும் எலுமிச்சை

எலுமிச்சையின் சாறை ஒட்டப்பிழிந்த பிறகு, மீதியிருக்கும் தோலை முகத்திலும் கைகளிலும் தேய்த்துக் கொள்ளும் அம்மாவை... பார்த்திருப்பீர்கள்! அத்தனை பெயர் பெற்ற எலுமிச்சையின் எழில் பலன்களைப் பார்ப்போம். 


  • அரை டீஸ்புன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச்சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் ப்ளீச் செய்தது போல் பளிச்சென்று பிரகாசிக்கும். 

முத்திரை முக்கிய அம்சம்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம். 

யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும்.

Tuesday, July 22, 2014

முகத்தில் இருக்கும் கருப்பானது மறைய

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது கருப்பாக இருக்கும். 

சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வந்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம்.

அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் கொய்யா

மென்மையான தோலும், சதைப்பற்றுமாக மலிவான விலையில் கிடைக்கும் இந்தப் பழத்தில் இருக்கும் அழகு பலன்கள் ஏராளம். நமக்கு வேண்டிய அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இதன் இலை, பழம், குச்சி போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். 


  • என்ன தான் எண்ணெய் வைத்தாலும் வறண்டு போய்க் காட்சியளிக்கிறதா உங்கள் கூந்தல்? அதைப் பளபளப்பாக்கும் டெக்னிக் சிவப்பு கொய்யாவில் இருக்கிறது. கொட்டை இருக்கும் சிவப்பு கொய்யாப் பழத்தை நறுக்கி வெயிலில் உலர்த்தி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்த பவுடர் 2 டீஸ்பூன், கொய்யா இலையை அரைத்து எடுத்த சாறு 3 டீஸ்பூன் இரண்டையும் நன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசுங்கள். வறண்ட கூந்தல் பளபளவென மின்னுவதுடன் கருமையாகவும் மாறும். 

இதயம் சீராக இயங்க காளேஷ்வர முத்திரை


செய்முறை :

நடுவிரலை நேராக நீட்டி நுனிகளைச் சேர்க்கவும், கட்டை விரல் இதயத்தை நோக்கி இருக்கும்படி வைத்து நுனிகளை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்களையும் உட்புறம் மடக்கி இடதுகை விரலும், வலது கைவிரலும் ஒட்டியபடி வைக்கவும். தினமும்15 நிமிடம் பயிற்சி செய்யவும்.  பின்னர் படிப்படியாக நேரத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.

பயன்கள் :

மன அமைதி, தீய எண்ணங்களில் இருந்து விடுதலை, நிம்மதியான உறக்கம், டென்ஷன் போக்குதல் போன்றவற்றிக்கு இந்த முத்திரை ஏற்றது. இதயம் சீராக இயங்கவும், மூச்சு சீராக உடலில் இருக்கவும் செய்கிறது

அழகு பலன்களை அள்ளித் தரும் ரோஜா

அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை. 

  • ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும் இந்த ரோஜா பன்னீரை, தயாரிக்கும் விதம் இதோ... 


  • 50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இது தான் பன்னீர். தேவைப்படும் போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம். 

காற்றாழை - கூந்தல் பிரச்சனையை போக்கும்

இன்றைய தலை முறையினரிடம் இன்று மாபெரும் பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஆண், பெண் இருபாலருக்கும் முடி உதிர்தல் என்பதாகும். சிலருக்கு இதனால் திருமண வாழக்கையே கூட அமையாமல் தள்ளி போகின்றது. உருவ அழகை அதிகப் படுத்துவதில் கூந்தலுக்கு பெரும் பங்குண்டு. 

அதிக நேரம் கண் விழித்தல், இரவுப் பணி செய்தல், நீண்ட நேரம் கணிணி முன் அல்லது தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்திருத்தல், வெயிலில் அதிக பிரயாணம் செய்தல் போன்ற காரணங்களால் உடல் உஷ்ணம் அதிகரித்து தலையில் வியர்வை உண்டாகிறது. 

Saturday, July 19, 2014

செரிமான பிரச்சனையை தீர்க்கும் பெருங்காயம்


பெருங்காயத்திற்கு சில மருத்துவ குணங்கள் உண்டு. இது உணவுக்குழாய் வாயுநிலை தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும், மலமிளக்கியாகவும், சளி நீக்கியாகவும் மற்றும் தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பெருங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. 

கேரட் கூந்தல் உதிர்வதை தடுக்கும்


  • வெயிலால் தலைமுடி வறண்டு, வெடிப்பு விடும். கேரட்டின் இலை கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர். கேரட் இலைகளைத் துண்டுகளாக்கி, வேண்டிய அளவில் நல்லெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து பயத்தமாவைப் போட்டு அலசுங்கள். இப்போது பாருங்கள் கூந்தல் வெடிப்பு நீங்கி, பரட்டைத் தலை பளிச்சென்று காட்சி தரும். 

நோயிகளை தீர்க்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்

1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்குவளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்


பருக்கள் 

பற்பசையைத் தடவுவதன் மூலம் பருக்களைக் கரையச் செய்யலாம். பருக்களால் ஏற்படும் தொற்றுக்களையும் பற்பசை அழிக்கிறது.


தீப்புண்

சிறிய தீக்காயங்கள் மீது பற்பசையைத் தடவினால் உடனடி விமோசனம் கிடைக்கும். அது தற்காலிகமாக அந்த இடத்தைக் கூலாக்கும். பெரிய, திறந்துள்ள காயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது, கவனம்!

Friday, July 18, 2014

அல்சர் குணமடைய விளாம்பழம்

  • தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. 


  • விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது. 

Thursday, July 17, 2014

பைரவி முத்திரை

பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கல்வி முறை.


செய்முறை :

விரிப்பில் அமர்ந்து இடது கையை வலது கையின் மேல் வைப்பது சக்தி அம்சமாகவும். இது பைரவி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு உதவும் சாத்துக்குடி

சாத்துக்குடி ஜூஸ் கூந்தலின் தரத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சாத்துக்குடி ஜூஸை கொண்டு கூந்தலை எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம். 



  • சாத்துக்குடி பழத்தை சாறு எடுத்து, அத்துடன் தயிர் அல்லது க்ரீம் சேர்த்து கலந்து கூந்தலுக்கு தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், கூந்தலானது மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும். 

ஆரோக்கியமாய் இருக்க இயற்கை உணவு முறைகள்

இயற்கை என்றுமே மனிதனுக்கு நல்லவற்றினை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நன்கு வாழ. ஆரோக்கியமாய் இருக்க, நீண்ட ஆயுள் பெற இயற்கையோடு, ஒட்டிய பாரம்பரிய வைத்திய முறையும், உணவுப் பழக்கமும் பேருதவி செய்யும். இயற்கை உணவு முறைகள் கொடுக்கும் உடல் நலன்கள்:- 


  •  உடல் சக்தி கூடும். 
  • வீக்கம், வலி என்பவை மிக குறைந்த பாதிப்பினை ஏற்படுத்தும். 

Wednesday, July 16, 2014

நோயிகளை தீர்க்கும் காய்கள் பழங்கள்

''இன்னிக்கு... பாவக்கா பொரியலா?... வாழைத்தண்டுக் கூட்டா...? அய்யே... எனக்கு சாப்பாடே வேண்டாம்...'' என்று முகம் சுளிப்பது இன்றைய தலைமுறைக்கு வழக்கமாகிவிட்டது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, என வித்தியாசமான சுவைகளையும், சத்துக்களையும் அள்ளித்தருகிற அனைத்துக் காய்கறிகளையும் குழந்தையிலேயே பழக்க மறந்துவிட்டதன் விளைவுதான், இந்த சுளிப்பு.

வாய்க்கு ருசியான பதார்த்தம் என்றாலே, குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கும். அந்த அளவுக்கு, 'செய்வது சுலபம்’ என்பதால், குக்கரில் சாதத்துடன் உருளைக்கிழங்கை வேகவைத்து, காரம் போட்டுச் செய்து கொடுத்துவிடுகின்றனர். இப்படி, தினமும் ஒரே காய்கறியை மட்டும் உணவில் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்

அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும். 

நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும். 

தலை முதல் பாதம் வரை அழகாக்க.

தினசரி வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகள் மூலமாக உங்கள் இயற்கையான அழகைத் தக்க வைத்துக்கொள்ளலாம். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் ஒரு பத்து, இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது.


  • முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது. இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக வளரும்.   

கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க கருப்பட்டி

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலிமை அடைவதுடன், கர்ப்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். 


சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும். 

தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்

சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம். 


'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக்குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி’ என்பர்.

உருளைக்கிழங்கு குளியல் பவுடர்

சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காய வைத்து, பவுடராக்கிக் கொள்ளுங்கள். 



இந்த உருளை ஸ்டார்ச் பவுடர், ஒரு அற்புதமான அழகுக் கலை நிபுணர்! உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், தோலை மிருதுவாக்கி, கூந்தலை பளபளப்பாக்கும். 

40 வயதில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை


40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்துமுதுமைத்தோற்றம் தெரிகிறது.

எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும். 50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும்.

பைரவ முத்திரை

தந்திர முறையில் முக்கியமானதாகக் கருதப்படும் பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கலவி முறை. 



செய்முறை :

வலது கையை இடது கையின் மேல் அடிவயிற்றுக்கு நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். இது சிவ அம்சமாகவும்.

சிறிய மருத்துவ சிறந்த பயன்கள்


சோற்றுக் கற்றாழை நம் நாட்டின் பொக்கிஷங்களுள் ஒன்று. சிறு காயம், சிறு வெட்டுபட்ட இடத்தில் இதன் இலையை உரித்து பசைப் பகுதியினைத் தடவ காயம் எந்த வித கிருமி தாக்குதலும் இல்லாமல் மாயமாய் மறையும். முகப் பருவக்களின் மீது இதனை தடவ அவை மறைகின்றன. வயது கூடுதலின் காரணமாக கைகளில் ஏற்படும் பழுப்பு புள்ளிகள் இதனைத் தடவி வர மங்கலாகின்றன. 

வறண்ட சருமத்தினால் தவிப்போருக்கு இந்த ஜெல் அதாவது சோற்று கற்றாழையின் கூழ் தடவ சருமம் ஆரோக்கியமாகின்றது. சோரியாஸிஸ் பாதிப்பில் இந்த பசை அதிக முன்னேற்றத்தை தருகின்றது. வெப்பத்தாக்குதலுக்கு இது சிறந்த நிவாரணி தொடர்ந்து தடவ சுருக்கங்கள் நீங்குகின்றன. இதன் ஜுசை தலையில் தடவி சிறிது நேரம் தடவி கழுவி விட முடி வறட்சி நீங்கும். சிலருக்கு சளி பிடிக்கின்றது. 10 நிமிடங்களிலேயே தலையை அலசி விடவும். 

Tuesday, July 15, 2014

முகத்தில் முடிகளை நீக்க

சிறுசிறு முடிகள் முகத்தில் தோன்றி, முகத்தின் அழகை கெடுக்கும். இத்தகைய முடிகளை அகற்ற இக்காலத்தில் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகம்.குறிப்பாக முடிகளை நீக்க ப்ளீசீங் முறையைப் பயன்படுத்துகின்றனர். ப்ளீச்சிங் முறையில் முடிகளை அகற்றுவது சிறந்தென்றாலும், இதனால் சருமம் உலர்ந்து வறட்சித் தன்மை ஏற்படும். வறட்சியான தோலில் பருக்கள், வெடிப்புகள் தோன்றும்.ஆனால் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி ப்ளீச்சிங் செய்யலாம். இதனால் முகத்திலுள்ள அழுக்குகள், தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, நல்ல ஆரோக்கியமான அழகையும் பெற முடியும்.

இயற்கையாக ஸ்கரப்கள் தயார் செய்வது எப்படி? 

கண்களில் அதிக கவனம் தேவை

மனித உறுப்புகளில் மிக மென்மையானவை, மிக நுட்பமானவை கண்கள். அதனால் கோடை உஷ்ணம் அதிகமாகும்போது கண்கள் பாதிக்கப்படும். கண்களை சரியாக பாதுகாக்கா விட்டால், உஷ்ணத்தால் கண்களில் சொறி, அலர்ஜி, கண் சிவந்து போகுதல், சீழ்கட்டி ஏற்படுதல், கண்கள் உலர்ந்து போகுதல், கார்ணியல் அல்சர் போன்ற நோய்கள் வரக்கூடும். கோடையில் என்னென்ன மாதிரியான கண்நோய்கள் வரும்? அவைகளை எப்படி தவிர்க்கலாம்? என்று பார்ப்போம்.. 


அல்ட்ரா வயலெட் ஆபத்து:  

கோடையில் வெயில் அதிகமாக இருப்பதால், சூரியனில் இருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்களை பாதிக்கும். தொடர்ந்து அவை தாக்கும்போது, நடுத்தர வயதை கடந்த பின்பு வரக்கூடிய கண்புரை நோய், அதற்கு முன்பே வந்து விடும். அல்ட்ரா வயலெட் கதிர்கள் பார்வை படலமான ரெட்டினாவையும் தாக்கி பாதிக்கச் செய்யும். 

Monday, July 14, 2014

ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக

ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக


  • கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.

  • எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்

  • கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்

  • கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்,கீரைகள்,பழங்கள்

இன்று உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

முக வசீகரம் பெற

குங்குமப்பூ - 10 கிராம்

ரவை - 30 கிராம்


வாதுமை பிசின் - 25 கிராம்

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பசும்பாலில் கரைத்து சிறிய சிறிய வில்லைகளாக அதாவது 2 கிராம் அளவு எடுத்து தட்டி உலரவைத்து தேவையானபோது அந்த வில்லைகளை எடுத்து பால் ஏடு அல்லது தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் முகம் வசீகரமாகும்

வயிற்றுக் கடுப்பு நீங்க இலவங்கப் பட்டை

சமையல் அறையில் நம் முன்னோர்கள் ஒரு வைத்திய சாலையையே வைத்திருந்தார்கள். அஞ்சறைப் பெட்டி அருமருந்துகளின் பெட்டகமாகவே இருந்துள்ளது.


சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு, மிளகு, இலவங்கப்பட்டை, கசகசா என பல மருத்துவப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்தான் நம் முன்னோர்கள்.

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.



சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.