Wednesday, January 25, 2017

சோயா வடை

சோயா வடை



தேவையான பொருட்கள்:-


  • கடலை பருப்பு - ½ கப்
  • சோயா - 1 கப்
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • இஞ்சி - சிறிது அளவு
  • பச்சை மிளகாய் - 1
  • வெங்காயம் - 1 பெரியது
  • எண்ணெய் - பொரிக்க 


செய்முறை:-


கடலை பருப்பை 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு சோயாவை சூடான தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை சோயாவில் இருந்து அழுத்தி எடுத்துவிடவும். பின்பு வெங்காயத்தை கட் பண்ணிக்கவும். கடலை பருப்புடன் சோயா மற்றும் இஞ்சி மற்றும் பச்சைமிளகாய் உப்பு இவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வடை தட்டி எண்ணெய் போட்டு எடுக்கவும். சுவையான சோயா வடை ரெடி.

குறிப்பு: இதனுடன் புதினாவை சேர்த்து செய்யலாம்.




Wednesday, January 11, 2017

வெஜ் கிரேவி

வெஜ் கிரேவி

தேவையான பொருட்கள்:-

எண்ணெய்
வெங்காயம்
கடுகு
கேரட்
ப. மிளகாய்
கரமசாலா
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குடை மிளகாய்
தக்காளி
உப்பு

செய்முறை:

வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போடவும் கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் கேரட் சேர்க்கவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். எண்ணெயில் தான் கேரட் வதங்கவேண்டும். தூள் வகைகளை சேர்த்து வதக்கவும். பின்பு குடை மிளகாய் சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சுவையான வெஜ் கிரேவி ரெடி.
(எல்லா காய்களிலும் (முருங்கை தவிர) வெஜ் கிரேவி செய்யலாம்.


Monday, January 9, 2017

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்



தேவையான பொருட்கள்:-

  • உருளைக்கிழங்கு – 2
  • உப்பு – தேவையான அளவு
  • பெருஞ்சீரகம் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • பூண்டு – 5 பல்
  • கறிவேப்பிலை – சிறிது
  • வெங்காயம் - 1 பெரியது


செய்முறை:-

முதலில் உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் அவற்றை எடுத்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அவற்றை வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்து சிறிது உப்பு பெருஞ்சீரகம் தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக டாஸ் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கப்பட்ட பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் நன்றாக ரோஸ்ட் செய்யவும். செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி


ஐந்து அரிசி பணியாரம்

ஐந்து அரிசி பணியாரம்



தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி - 4 பங்கு
  • புழுங்கல் அரிசி - 1 பங்கு
  • உளுந்து - 50 கிராம்
  • சிறு பருப்பு – 50 கிராம்
  • வெல்லம் - சுவைக்கேற்ப
  • ஏலக்காய் - 3
  • உப்பு – 1 சிட்டிகை
  • எண்ணெய் - பொரித்து எடுக்க 


செய்முறை:-

பருப்பு மற்றும் அரிசி வகைகளை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். அதனுடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் வைக்கவும். பின்பு எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ந்ததும். கரண்டியில் எடுத்து ஊற்றவும். வெந்தவுடன் எடுக்கவும். சுவையான பணியாரம் ரெடி.

செட்டிநாடு இறால் தொக்கு

செட்டிநாடு இறால் தொக்கு



அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-

  • மிளகு - 1 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • பட்டை – 3
  • கிராம் - 4
  • ஏலக்காய் - 2
  • பூண்டு – 10
  • இஞ்சி – அரை துண்டு
  • பச்சை மிளகாய் - 1
  • காய்ந்த மிளகாய் - 1


தேவையான பொருட்கள்:

  • இறால் -250 கிராம்
  • வெங்காயம் - 2 சின்னதாக
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
  • தனியா தூள் - ½ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • புளி கரைசல் - 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு


செய்முறை:-

முதலில் அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும். அதன்பின்பு எண்ணெய் வாணலில் ஊற்றவும். பின்பு எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு கிளறவும். பின்பு அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அதனுடன் இறால் சேர்த்து கிளறவும். பின்பு தூள் வகைகளை சேர்த்து பச்சைவாசம் போகும் வரை கிளறவும். தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். இறால் வேகுவதற்காக கொஞ்சம்  தண்ணீர் சேர்த்து கிளறவும். சுவையான செட்டிநாடு இறால் தொக்கு ரெடி.

Saturday, January 7, 2017

பீன்ஸ் குருமா (அ) பீன்ஸ் கறி

பீன்ஸ் குருமா (அ) பீன்ஸ் கறி



அரைக்க தேவையான பொருட்கள்:


  • தேங்காய் - அரை முடி
  • இஞ்சி – 1 துண்டு
  • வெங்காயம் - 2 சிறியதாக 
  • பூண்டு – 10 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • கிராம்பு - 4
  • பட்டை – 2
  • ஏலக்காய் - 3


தேவையான பொருட்கள்:-

  • பச்சை பீன்ஸ் - 100 கிராம்
  • வெங்காயம் - 1 பெரியதாக
  • உப்பு – தேவையான அளவு
  • கரமசாலா – 2 ஸ்பூன்
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • மஞ்சள் - 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி


செய்முறை :-

முதலில் வாணலில் எண்ணெய் விட்டு அரைக்க வேண்டிய பொருட்களில் (தேங்காயை தவிர) மற்றவையை வதக்கி அரைத்துக்கொள்ளவும். பின்பு குக்கரில் பீன்ஸ் உப்பு மஞ்சள் இவற்றை சேர்த்து 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும். பின்பு வாணலி;ல் எண்ணெய் விட்டு சோம்பு பொறிந்தவுடன் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். பின்பு கரமாசாலாவை சேர்க்கவும். பின்பு வேகவைத்த பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான பீன்ஸ் குருமாவை சப்பாத்தி மற்றும் சோறுவுடன் சேர்த்து சாப்பிடலாம்

பஞ்சரத்தினா மலாய் கறி (பச்சை பட்டாணி மலாய் கறி)

பஞ்சரத்தினா மலாய் கறி 



அரைப்பதற்கு:-

  • ப.மிளகாய் - 3
  • கொத்தமல்லி
  • முந்திரி பருப்பு – 20 அரை மணிநேரம் ஊறவைத்தவை


தேவையான பொருட்கள்

  • பன்னீர் - 4 துண்டு 
  • நெய் - 4 ஸ்பூன்
  • ஏலக்காய் - 4
  • சீரகம்
  • பச்சை மிளகாய் - 1
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கராமசாலா தூள்
  • உப்பு
  • சர்க்கரை
  • 15 பாதாம்
  • 2 ஸ்பூன் பிஸ்தா
  • பச்சை பட்டாணி
  • மக்காச்சோளம்
  • 75ஆட கிரீம்


செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவையை நன்றாக மைய தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும. பின்பு அடுப்பில் வாணலை வைத்து சூடான உடன் நெய் 4 ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடான உடன் ஏலக்காய் சீரகம் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். தூள் வகைகளை சேர்த்து சிறிது நேரம்  வதக்கியவுடன் அதில் அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும். கறுகமால் இருக்க சிறிது அளவு  தண்ணீரை மற்றும்  பின்பு உப்பு தேவையான அளவு சேர்க்கவும் அதனுடன் 1 சிட்டிகை சர்க்கரையும்  
சேர்க்கவும் அவற்றுடன் பாதாம் பிஸ்தா பச்சை பட்டாணி மக்காச்சோளம் சேர்த்து நன்கு கிளறவும்.  அதனுடன் குசநளா  கீரிம் சேர்த்து நன்றாக கிளறவும் . சுவையான பஞ்சரத்தினா மலாய் கறி ரெடி

டிங்ளிக் பாத் (கோவைக்காய் பாத்)

டிங்ளிக் பாத் (கோவைக்காய் பாத்)



அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-


  • சீரகம் - அரை ஸ்பூன்
  • தனியா – 1டேபில் ஸ்பூன்
  • லவங்கம் - 4
  • பட்டை - 2
  • வெ.எள் - 1 ஸ்பூன்
  • கொப்பரை தேங்காய் - 4 பல்
  • பெருங்காயத்தூள்


தேவையான பொருட்கள்:-


  • நெய்  - 6 ஸ்பூன்
  • பச்சை மிளகாய்
  • கோவைக்காய் - 100
  • கடுகு
  • சீரகம்
  • லவங்கம்
  • பட்டை
  • கறிவேப்பிலை
  • பிரியாணி அரிசி -1 கப்
  • துருவிய தேங்காய்
  • உப்பு
  • கொத்தமல்லி


செய்முறை:-

முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்களை வாணலில் போட்டு வறுத்து அரைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் குக்கரை வைத்து நெய்யை 4 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் கடுகு சீரகம் லவங்கம் பட்டை இவற்றை போட்டு பொறிந்தவுடன் பச்சை மிளகாயை மற்றும் கோவைக்காயை சேர்க்கவும் அதனுடன் ஊறவைத்த 1கப் பிரியாணி அரிசி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கிளறவும். அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும் தேவையான உப்பு மற்றும் அரைத்த கலவையை சேர்த்து கிளறவும். பின்பு 1கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து கிளறியவுடன் குக்கரில் 3 விசில் போடவும். சுவையான டிங்ளிக் பாத் ரெடி

பன்னீர் கட்லெட்

பன்னீர் கட்லெட்



தேவையான பொருட்கள்:-


  • எண்ணெய்
  • குடமிளகாய் - 3 கலர்
  • சீரகம்
  • ப.மிளகாய்
  • கறிவேப்பிலை
  • மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள்
  • கரமசாலா தூள்
  • பன்னீர்
  • சாதம்
  • கொத்தமல்லி
  • மைதா
  • பிராட் தூள்


செய்முறை:-

வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறுசாக கட்பண்ண மூன்று வகையான குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு தூள் வகைகளை தேவையான அளவு சேர்த்து வதக்கவும். அதனுடன் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். (கெட்டியாக வரும் வரை கலக்கக்கூடாது) பின்பு சாதம் நன்றாக மசித்து சேர்த்து கலக்கி வேறு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து மசித்து கொள்ளவும். பின்பு மைதாவை கரைத்துக்கொள்ளவும் தண்ணீராக வைத்துக்கொள்ளவும். பின்பு பிராட் தூளை எடுத்துக்கொள்ளவும். மசித்த கலவையை உருண்டையாக உருட்டவும். பின்பு கட்லெட் போல் செய்துக்கொள்ளவும். மைதா கலவையில் போட்டு பின்பு பிராட் தூளில் போட்டு கட்லெட்டை சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் ரெடி

குஜராத் கறி

குஜராத் கறி




தேவையா பொருட்கள்


  • நெய் - 3 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பெருங்காயதூள்
  • சீரகம்
  • கடுகு
  • கடலை மாவு – 3 ஸ்பூன்
  • தயிர் - 6 ஸ்பூன்
  • ப. மிளகாய் - 1 
  • தக்காளி – 1
  • கொ.மல்லி

செய்முறை:

முதலில் கடலைமாவு 3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கிக்கொள்ளவும். பின்பு வணலில் நெய் ஊற்றி நெய் சூடானதும் கடுகு சீரகம் போட்டு பொறிந்தவுடன் பச்சைமிளகாயை சிறிதாக கட் செய்து அதில் போட்டு கிளறவும் பின்பு பேஸ்ட்டை சேர்த்து தேவையான 
அளவு உப்பு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பின்பு  தக்காளியை நான்காக வெட்டி அதில் போட்டு கிளறவும். அந்த சூட்டில் தக்காளி வெந்தவுடன் இறக்கி சப்பாத்தி மற்றும் நாண் இவற்றுடன் குஜராத் கடியை சேர்த்துக்கொள்ளலாம்

Friday, January 6, 2017

சீரக நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உண்டாகும் பலன்கள்

சீரக நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உண்டாகும் பலன்கள்



சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உண்டாகும் பலன்களைப் பற்றி கூறுகிறார் 

பால் சுரக்க உதவும் : 

சில தாய்மார்களுக்கு குழ்னதை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அவர்கள் தொடர்ச்சியாக சீரக நீரை குடித்து வந்தால் பால் சுரப்பது நீடிக்கும். அதிகமாகும்

சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் : 

தினமும் வெறும் வயிற்றில் சர்கரை வியாதி உள்ளவர்கள் குடித்து வந்தால் சர்க்கரையில் அளவு ரத்தத்தில் கட்டுக்குள் வரும்.

சுவாசப்பாதையை சீராக்கும் : 

குளிர்காலத்தில் சுவாசப்பாதையில் மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடும். சுவாசத்தை சீராக்கும்.

கல்லீரல் நச்சை வெளியேற்ற : 

கல்லீரலில் குடிவும் அதிகப்படியான நச்சை வெளியேற்றும். இதனால் கல்லீரலில் வேலை குறைவதோடு அதன் ஆரோக்கியமும் அதிகமாகும்.

மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிகளின் ஃபால்ஸ் வலி : 

மாதவிடாயின் போது உண்டாகும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை போக்க சீரக நீர் உகந்தது.

முதுமையை தடுக்கும் : 

சீரகத்தில் அதிகமாக விட்டமின் ஈ இருப்பதால் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கிறது. இது செல்ல்லிறப்பை தடுத்து முதுமையை தடுக்கிறது. முக்கியமாய் நரை முடியை தடுக்கும். நல்ல சருமத்தை தரும். சுருக்களின்றி இளமையான சருமத்தை தரும்.



Thursday, January 5, 2017

இறால் முட்டை தொக்கு

இறால் முட்டை தொக்கு




தேவையான பொருட்கள்:

  • இறால் 250 கிராம்
  • முட்டை - 1
  • எண்ணெய் 
  • ப. மிளகாய்  - 2
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு விழுது
  • தக்காளி - 1
  • உப்பு
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள்
  • தனியா தூள்
  • பெருங்காயம்


செய்முறை:

முதலில் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் இவற்றை சிறுசாக வெட்டிக்கொள்ளவும். பின்பு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். அதன் பின்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் அதன் பின்பு தக்காளியை சேர்த்து வதக்கவும் அதனுடன் தூள் வகைகளை சேர்த்து கிளறவும் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தூள் வாசம் போகும் வரை கிளறவும். பின்பு இறால் போட்டு கிளறவும் இறால் வெந்தவுடன். முட்டையை வேறு ஒரு பேனில் ஊற்றி அதற்கு தேவையான உப்பு பெருங்காயம் சேர்த்து கிளறவும். முட்டை கலவையை இறால் உடன் சேர்த்துக் கலக்கவும். சுவையான இறால் முட்டை தொக்கு ரெடி.

குறிப்பு: முட்டையை இறாலில் ஊற்றினால் முட்டை வாசத்தால் இறால் தொக்கு நன்றாக இருக்காது.

Wednesday, January 4, 2017

கிராமத்து மீன் குழம்பு

கிராமத்து மீன் குழம்பு




தேவையான பொருட்கள்


  • மீன் - அரை கிலோ
  • கடுகு - தேவையான அளவு
  • சீரகம் - தேவையான அளவு
  • வடகம் - தேவையான அளவு
  • உளுந்து – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் - 10
  • மிளகு - 10
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் (தாளிக்க) 
  • புளி – நெல்லிக்காய் அளவு


அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-


  • கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  • வெந்தயம் - 1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு - 7 பல்
  • தனியா - 1 ஸ்பூன்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • பச்சரிசி - 1 ஸ்பூன்
  • தக்காளி – 2


செய்முறை:-


முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்துப்பொருட்களையும் ஒன்றான் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். அதனுடன் தக்காளியை வதக்க வேண்டாம். வதக்கிய அரைத்தவுடன் அதனுடன் தக்காளியை போட்டு அரைக்கவும். பின்பு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி கடுகு, சீரகம், மிளகு, வடகம் ,வெங்காயம், கறிவேப்பிலை இவற்றை தாளித்து அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். அதனுடன் புளி கரைசலை சேர்த்துஅதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு கழுவி வைத்துள்ள மீனையை சேர்த்து கொதிக்க விடவும்.மீன் வெந்தவுடன் இறக்கவும். மீன் போட்டவுடன் கிளறவும். அதன் பின்பு கரண்டியை போடக் கூடாது மீன் உடைந்து விடும்.

சளியை விரட்ட கிராமத்து மிளகு குழம்பு


(குறிப்பு: மீன் குழம்புடன் அரிசி சேர்த்தால் தீக்காக வரும். மீன் குழம்பை இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.)