Thursday, July 31, 2014

ஏகாதசி தினத்தன்று சாப்பிடாமல் விரதம் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக ஒரு காரணம்

ஏகாதசி தினத்தன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஒரு காரணம் உள்ளது. நமது உடல் நலனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் இந்த விரததினத்தை குறிப்பிட்டு வரையறுத்துள்ளதாக தெரிகிறது.


ஏகாதசி தினத்தன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் பூமியிலுள்ள ஜல வர்க்கத்தின் மீதும் பாதிப்பு உண்டாக தொடங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருப்பதால் ஏகாதசி தினத்தன்று மனித உடலிலும் சந்திரனின் சக்தியால் பாதிக்கப்படும்.