நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும்
தவிர்க்க வேண்டிய உணவுகள்
இன்றைய
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்... நோய்கள்... துன்பங்கள்!
நாம்சாப்பிடும்
உணவு வாய்க்கு ருசியாக இருந்தால்
மட்டும் போதுமா... உடலுக்கு ஆரோக்கியமானதுதானா
என்று யோசித்திருக்கிறோமா?
'தினமும்
சத்தான உணவுதான் உண்கிறோம்’ என்று சொன்னாலும், பாக்கெட்டில்
அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள்,
ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து
இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு
சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத்
தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே
மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத்
தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும்
ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும். மூலிகைத்
தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை
உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால்
மட்டுமே, நாம் வாழும் காலம்
வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.