Friday, October 4, 2013

சுவாச நோய்களின் மூலிகை மருந்துகள் கண்டங்கத்திரி

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் முக்கியமானது சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இருமல், சளி, மூக்கடைப்பு, தொண்டைகட்டு, சுரம் என்று பற்பல விதங்களில் கப நோய்கள் பாதிக்கின்றன.

இவை அனைத்திற்கும் மூலிகை மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்கின்றன. பக்க விளைவுகள் இல்லாமலும், அதே நேரம் உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய மூலிகைகளில் முக்கியமான மூலிகை கண்டங்கத்திரி.

அஞ்சறைப் பெட்டி - மருத்துவம் சீரகம்

  சீரகம் மருத்துவம் :

சீர் + அகம் ஸ்ரீ சீரகம். உள் உறுப்புகளின் சீரற்ற தன்மையை சரி செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. சீரகம் நம் சமையலில் மணம் சேர்க்கும் பொருளாக பண்டைக் காலத்திலிருந்து இருந்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள் சீரகத்தை ஆய்வு செய்ததில் பலன்தரத்தக்க செய்திகளை கூறியுள்ளனர்.
cumin

சீரகம் கணையத்தை தூண்டி சீரணத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்கிறது. இந்த நொதிகள் சீரண உறுப்புகளை தூண்டி அதன் வேலையை செய்ய வைக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு, வயிறு உப்பிசம், தலைச்சுற்றல், மயக்கம்,வாந்தி போன்றவை வர விடாமல் தடுத்து விடுகிறது.

பசியைத் தூண்டிவிடக்கூடிய சக்தியை சீரகம் இருப்பதால் நிறைய ஆயுர்வேத சித்த மருந்துகளில் மிக முக்கிய இடம் பெறுகிறது.

நரம்பு பலத்திற்கும், உடல் அசதி தீருவதற்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடைய வைக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு.

அதோமுக சுவானாசனம்


நாம் ஒவ்வொருவரும் நம் உடல் நலனையும் மன நலனையும் பேணிப் பாதுகாக்க பல்வேறு செயல்களையும். உணவு முறைகளையும் மருத்துவ முறைகளையும் பேணி வருகிறோம். அவ்வகையல் நம் உடலுக்கும், மனதுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. தெளிவான மனம் வேண்டுமென்றால் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் கூறியுள்ளார். நம் உடல் நலனை நாமே காத்துக் கொள்ள சித்தர்கள் கூறும் உளிய வழி பயிற்சிதான் யோகாசனம் ஆகும்.


அதோமுக சுவானாசனம் 
அதோமுகம் என்றால் கீழ்நோக்கும் முகம் என்று பொருள். சுவானம் என்றால் நாய். இந்த ஆசனம் நாய் சோம்பலை முறிப்பதற்காக முதுமை நன்றாக நீட்டுவது போல் இருப்பதால் இதற்கு அதோமுக சுவானாசனம் என்று பெயர்.

வாத,பித்தம் குறைக்கும் மாதுளை பூ

பொதுவாக மாதுளை என்றால் எல்லோருக்கும் மாதுளம் பழம்தான் ஞாபகம் வரும். அந்த மாதுளைப் பழத்தில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் இருப்பது போல் மாதுளை பூவிற்கும் மருத்துவக் குணங்கள் உண்டு.
மாதுளையை தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம், கழுமுள் என்ற பெயர்களில் அழைக்கினறனர்.
Punica granatum


 மாதுளைப் பழத்தைப் பற்றி முன்பே அறிந்தோம். மாதுளம் பூ பற்றி  இங்கு அறிந்துகொள்வோம்.

நாளும் நலம் தரும் நெய்:

Ghee
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெயயின் பங்கு அதிகம். நெய்களுள் பசுநெய் மிகவும் சிறந்தது.  தற்போது பசுநெய் கிடைப்பது அரிது.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. மருத்துவக்குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களில் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில முளைக் கீரை

 சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கு ஏற்ற கீரை முளைக்கீரை மட்டுமே.
Amaranthus blitum

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் இந்தக் கீரை முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.  அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய்களைக்கூட குணப்படு;த்தக்கூடியது. இதன் சுபாவம் குளிர்ச்சியானது.

சித்தர் பாடல்:

           தளர்ந்த வர்க்கும் பாலருக்கும் தக்கவய தோர்க்கும்
          இளங்கீரை நாவுக் கிதமாம் - கிளம்பு
                                                                   சுரகாசம் போக்கு தொடர்பசி யுண்டாக்கும்
                                                                   பிரகாச மாயெடுத்துப் பேசு               (அகத்தியர் குணபாடம்)

பல வியாதிகளைப் போக்ககும் சக்தி கொண்ட அரைக்கீரை

பெயருக்குத்தான் இது அரைக்கீரையை தவிர இக்கீரை எல்லா சத்துக்களும் கொண்ட முழுக்கீரை ஆகும். எல்லா மக்களுக்கும் ஏற்ற கீரை இது.


Amaranthus aristis
தென்னிந்தியாவில் தோட்டக்கால்களில் பயிரிடப்படும் அருமையான கீரை.எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான- உன்னதமான கீரை இது. பல வியாதிகளைப் போக்கக்கூடிய சக்தி கொண்டது எந்த வியாதி கொண்டவர்களும் தாராளமாக தைரியமாக இக்கீரையை சாப்பிடலாம்.
அரைக்கீரையை தினம் தினம் சாப்பிட்டு வந்தால் தேகத்தில் வெப்பம் ஏறும் என்பார் சிலர். இக்கீரை வெப்பத்தை சமன்படுத்தும் குணம் கொண்டது. அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பார்கள். இந்த மாவு, பல வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது அரைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலம் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயல்பு கொண்டது.

தாய்ப்பால் சுரக்க--அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி
Euphorbia pilulifera

என்ன வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா!

அது கொடி வகையைச் சேர்ந்தது.  கீரை வகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக்குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச் சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு.  இதன் கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாக படர்ந்து காணப்படும்.
இந்த இரண்டு கொடிகளின் மருத்துவ குணம் ஒன்றுதான். இதனை அம்மான் பச்சரிசிச்கொடி இலை என்றும். எம்பெருமான் பச்சரிசி என்றும் அழைப்பார்கள்.