அம்மான் பச்சரிசி
Euphorbia pilulifera |
என்ன வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா!
அது கொடி வகையைச் சேர்ந்தது. கீரை வகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக்குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச் சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன் கொடி மூன்று அங்குலம் நீளமாக தரையோடு தரையாக படர்ந்து காணப்படும்.
இந்த இரண்டு கொடிகளின் மருத்துவ குணம் ஒன்றுதான். இதனை அம்மான் பச்சரிசிச்கொடி இலை என்றும். எம்பெருமான் பச்சரிசி என்றும் அழைப்பார்கள்.
சித்தர் பாடல்:
காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம் விட்டுப் - பேர்ந்தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குன்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்தகண்ணாய்! கூறு. (அகத்தியர் குணபாடல்)
அம்மான் பச்சரிசிக் கீரையின் மருத்துவப் பயன்கள்:
1. அம்மான் பச்சரிசிக் கீரையை அரைத்து தினமும் எலுமிச்கை அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குணமாகும்.
2. அம்மான் பச்சரிசிக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் மலக்கட்டு உடையும்.
3. அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சிறிது மஞ்சள், ஒமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.
4.அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கடுக்காய் கொடி கலந்து சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும். உடல் வலிமை பெறும்.
5. அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மிளகு (3)ஈ வேப்பிலை (3) இரண்டையும் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.
6. அம்மான் பச்சரிசிக் கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.
7. விந்து கழிதல் நீங்க:
அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சீழாநெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை, மாலை இருவேளை என தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.
8. தாய்ப்பால் சுரக்க:
சில தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைக்குத் தேவையான பால் சுரப்பதில்லை. இதன் காரணமாக தாய்மார்கள் மிகவும் சிலமப்படுவார்கள். குழந்தைக்க தேவையான பால் சுரப்பில்லை என்பதால் புட்டிப்பாலுக்கு தாவுவார்கள். புட்டிப்பால் எவ்வளவு கொடுத்தாலும் குழந்தை சோனியாகவே பலமற்றுதான் வளரும்.
தாய்ப்பால் சுரப்பில்லாத பெண்கள் புட்டிப்பாலுக்கு மாறுவதைவிட, பால் சுரப்புக்கு வழி தேட வேண்டும். இதற்கு தாயைப்போல் உதவுகிறது அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பின் அதை பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகிவந்தால் பத்து நாளில் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
⦁ தாதுவை பெருக்கி, கெட்டிப்படுத்தும்
⦁ மலச்சிக்கலைப் போக்கும்
⦁ ரணங்களை ஆற்றும்
⦁ உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும்.
⦁ இக்கீரையை மட்டும் தனியே கூட்டு பொரியல் வைத்து சாப்பிடலாம். உடலுக்கு நன்மையை தரும்.
⦁ பால்சத்து இதில் நிரம்பியிருப்பதால் இதற்கு 'சித்திரப் பாலாடை என்ற பெயர் பெறுகிறது என்று கூறுகிறது மூலிகை அகராதி
9. தாதுவிருத்தியாக:
அம்மான் பச்சரிசி ஒரு பங்கு, அதே அளவு தூதுவளைக் கீரை, இரண்டையும் சுத்தப்படுத்தி, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு இவைகளைப் போட்ட கூட்டுவைத்து கடைசியாக தேங்காய் துருவல், நெய்யையும் கலந்து சாப்பிட்டு வ்நதால் தாது கெட்டிப்படும்.
மேற்கண்டவைகளை துவையலாக அரைத்தும் உண்ணலாம். துவையலாக சாப்பிட விருப்பமாயின் அனைத்தையும் வறுக்கவேண்டும். கீரைகளை வதக்கவேண்டும் அவ்வளவுதான்
10. மரு, பாலுண்ணி மறைய:
முகத்தில் உருவாகும் பரு, உடலில் உருவாகும் பாலுண்ணி போன்றவற்றுக்கு, அம்மான் பச்சரிச் செடியில் இலையை ஒடிக்கும் போது வெளியாகும் பாலைத் தடவினால் குணம் பெறலாம். வாய்ப்புண், நாக்குப்புண்ஈ உதடு வெடிப்பு போன்றவற்றுக்கும் இந்தச் செடியின் பால் நல்ல பலன் தரும்.
11. வெண்குஷ்டம் மறைய:
அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து, 6 மாதங்களுக்குத் தினமும் காலை, மாலை இருவேளையும் 15 கிராம் அளவு சாப்பிட்டால் வெண் குஷ்டம் குணமாகும்.
நம் கால்களில் மிதிபடும் இக்கீரையை பயன்படுத்தி பலன் காண்போம்.
in chennai where it is available? -- praveen
ReplyDelete