Wednesday, October 30, 2013

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.


•தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செறிக்கும் . மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்.



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

பாட்டி வைத்தியம்

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.


* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

சிரங்கை ஒழிக்கும் பாகற்காய் இலை



பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்கு இயற்கை வைத்தியம்

வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள்  வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்  அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று  வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி  அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்

முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது செழுமையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

இளமையைக் காப்பதில் நவ்காசனம்

மனிதனின் உடலும் உள்ளமும் சீராக இருந்தால்தான் நீண்ட ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

இன்றைய நவீன சூழலில் மன அழுத்தம், கோபம், பயம், எதிர்கால நம்பிக்கையின்மை, பொறுமையின்மை, குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பு என பல வகையில் இளைய தலை முறையினர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

இவர்கள்,  தாங்கள் சாம்பாதிக்கும் பணம் வாழ்வின் அனைத்து சந்தோஷத்தையும் கொடுத்துவிடும் என்று எண்ணி இரவைப் பகலாக்கி உழைக்கின்றனர்.

வாயில் ஊறும் உமிழ்நீர் உபயோகமான தகவல்

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.


உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அஞ்சறைப் பெட்டி - விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்

 வாசனைப் பொருட்கள் பலவும் உணவிற்கு சுவை> மணம் அளிப்பதோடு இயற்கை மருந்தாகவும் பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு வாசனைப் பொருள் வெந்தயம்.

அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்:

வெந்தய விதையில் புரதம்> சுண்ணாம்புச் சத்து> பாஸ்பரஸ்>பொட்டாசியம்> சோடியம்> இரும்புச் சத்து > வைட்டமின ஏ> தையாமின்> ரிபோபிளேவின்> நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.

கீரை மருத்துவம் - கொத்தமல்லியின் மருத்துவக் குணம் பாட்டி வைத்தியம்:

siddhaandherbal.blogspot.in


கொத்தமல்லியில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து. தாது உப்புகள் உள்ளன. மேலும் சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து, இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம், தயாமின, ரைபோ பிளேவின், நிகோடின் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

மளிகைப் பொருள் மகத்துவம்


சாதாரணமாக நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடையில் கிடைக்கும் பொருட்களில் கூட ஏகப்பட்ட பலன்;கள் உணடு. நமது முன்னோர்களின் மருத்துவப் பயனாக விளங்கிய சில பொருட்களின் மகத்துவத்தை அறிவோம்.

Sunday, October 27, 2013

மூலிகை மருத்துவம் - அருள் தரும் அரசமரம் மருத்துவப் பயன்கள்


வேம்பிற்கு அடுத்தபடியாக நம் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுவது அரச மரம். இந்த மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் விநாயகப் பெருமாள் குடி கொண்டிருப்பதைக் காணலாம். 

செய்கை -விதை -மலம் இளக்கி,
 இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் 

மூலிகை மருத்துவம் - வசம்பின் மருத்துவ குணம்

நமது தமிழ்நாட்டில் மருந்துப் பொருளான வசம்பை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள் குழந்தைகள் நோய்க்கு சஞ்சீவியாகத் துணை நிற்பது இதுவே. அதனை பிள்ளை வளர்ப்பான் என்றே செல்லப் பெயரிட்டு அழைப்பர் மக்கள்.

முனிவர்கள் சித்தர்களும் பெயரைச் சொல்லாமல் இம்மருந்தை வழங்குவார்கள் பாட்டி வைத்தியத்தில் இதன் பெயரே பேர் சொல்லாதது ஆகும். இது பிறந்த குழந்மைக்கு உரை மருந்து என்பதால் திருஷ்டி காரணமாகவும், பெயர் சொன்னால் மருந்து வேலை செய்யாது என்ற மரபு உள்ளதாலும் இதைப் பெயர் சொல்லி வழங்கக்கூடாது.

பழங்களின் மருத்துவம் - எலுமிச்சைப் பழத்தினால் விலகும் நோய்கள்

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்பin; போல எலுமிச்சைப்பழம் உலகெங்கும் நிறைந்திருப்பதோடு மக்களுக்கு அன்றாடம் உணவுப் பொருளாhகப் பயன்படுகிறது. குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிரம்பி மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக உதவுகிறது.

தெய்வ வழ்ப்பாட்டில் அம்மனுக்கு எலுமிச்சைப்பழ மாலை சாத்தி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

Saturday, October 26, 2013

உடல் குளுமைக்கு ஒர் அழகான யோசனை



  • சிறிதளவு துளவி இலைகளை எடுத்து எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து முகப்பரு மேல் போட்டு வர பருக்கள் மாறும்.
  • ஒரு ஜாதிக்காய் எடுத்து உரைத்து குழந்தைகளின் நெஞ்சில் பற்றுப்போட சளி தீரும்

பல்வகைப் பொருள்களின் மருத்துவ குணங்கள்



  • தங்கத்தில் நெருப்பில் ஆழமாக வைத்து பல தடவை நீரில் அமிழ்த்தி அந்த நீரைப் பருகினால் வெகு நாட்களாக உள்ள அஜீரணம் குணமாகும்.
  • விளாம்பூ, எலி கடித்த விஷத்தைப் போக்கும். இலுப்பைப் பூ குளிர்ச்சியுடையது: காமத்தைப் பெருக்கும்

விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்


நாம் அனைவரும் அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருள் வெந்தயம் வெந்தயத்தின் இலைகளை தான் வெந்தயக் கீரை இவை இரண்டுமே சிறிது கசப்பு சுவை கொண்டவை. மேலும், சமையலில் வாசனையை அதிகப் படுத்துவதற்காக வெந்தயத்தை நாம் உபயோகிக்கிறோம். அனைத்து வகையான கார குழம்புகளிலும், காய்கறி பொரியல்களிலும் மற்றும் இட்லி, தோசை மாவு அரைக்க ஊற வைக்கும் அரிசி மற்றும் உளுந்தில் வெந்தயத்தை சேர்க்கிறோம்.

தைராய்டு நீங்க சௌசௌ


நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று சௌசௌ. இதன் பயன்பாடுகளைப் பற்றி இந்த இதழில் காண்போம்.

கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் பௌர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.

Friday, October 25, 2013

பழங்களின் மருத்துவம் - பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் இது.

காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டிய பயிற்சி

பஞ்சபூதக் கூட்டால் ஆகிய மனித உடலில் ரத்தம், வெப்பம், காற்று, உயிர் ஆகிய நான்கும் உடல் முழுதும் சுழன்று ஓடி இயங்குகின்றன. மூன்று ஓட்டங்களும் சீராக இயங்க சில எளிய முறைப்பயிற்சி


  • தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
  • தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து அசைத்து மூடவும்.

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஏன்? எதற்கு? எப்போது என்பதை காண்போம்

குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்

 குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி?
நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளோடு பயன்படுத்த வேண்டும்? நோய்த் தொற்றல் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைத் தடுக்கவேண்டியதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்

சேலம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் ப.அருள் மற்றும் மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் குணா.

தினமும் தானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்


அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என பலவகைகள் உள்ளன.. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதை அப்படியே  பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து இடித்து பெறுவது புழுங்கலரிசி. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது, கொழுப்பு சத்தை அதிகமாக்கும்  தன்மை கொண்டது. இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள்  பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

Thursday, October 24, 2013

கீரை மருத்துவம் - நமது உடலையும் பொன்னாக மாற்றும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு உண்டு


பொன்னைக் கொடுத்து பொன்னாங்கண்ணி வாங்கு என்பது கிராமத்துப் பழமொழி, பகலில் விண்மீன்களை பார்க்கமுடியுமா? என்றால் முடியும் என்கிறது இக்கீரை. இக்கீரையை ஒரு மண்டலம் (48நாட்கள்) சமையல் செய்தோ, பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்கள் பார்க்கலாம்.

கிராமத்தில் 90 வயதில்கூட கண்ணாடி அணியாமல் உலாவுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இக்கீரையே. கண்ணுக்கு ஒளியை தெளிவான பார்வையை இதற்கு இணையாகத் தரக்கூடிய கீரை வேறொன்றும் இல்லை.

Wednesday, October 23, 2013

நாம் அலட்சியப்படுத்தும் கீரைகளின் மருத்துவக்குணங்கள்



கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

புதினா:- நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

கணினியைப் பார்க்கும் கண்களுக்கு சில டிப்ஸ்



எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகள்



நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தாய்ப்பால் நிகராய் குழந்தைக்கு ஏதுமில்லை

ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், தடுக்கு முறைகளில் வீட்டு மருத்துவம் கைகொடுக்கும்

டெங்கு காய்ச்சலுக்கு பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை பற்றி ஊடகங்களில் கூறப்படும் செய்திகளால் மிரண்டு கிடக்கின்றன தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள். சிக்குன் குனியா வந்தாச்சு, பன்றிக்காய்ச்சலை பார்த்தாச்சு டெங்கு காய்ச்சல் எம்மாத்திரம் என்று எகத்தாளமாய் நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இந்த காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கிடையாது என்பதுதான். அதிர்ச்சியாகிவிட்டீர்களா? வந்த பின் தவிப்பதை விட டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் என்கின்றனர் மருத்துவர்கள்.

Monday, October 21, 2013

காய்கறிகளின் மருத்துவம் - நோய் எதிர்ப்பு சக்திக்கு முள்ளங்கி

கறிக்குழம்பின் சுவையை மேலும் அதிகரிப்பதில் இதன் பங்களிப்பு மிகச் சிறந்தது. ஆனால் சிலர் இதன் மணத்தை விரும்பாத காரணத்தினால் உணவில் இதை தவிர்த்து விடுகின்றனர். நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகளில் முக்கியமானது இந்த முள்ளங்கி. மனித உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை தாராளமாக பயன்படு;த்தி வல உடல் நலக் குறைவினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறைக்கலாம்.
முள்ளங்கியில் வெள்ளை மற்றும் சிவப்பு முள்ளங்கி என இரண்டு வகைகள் உள்ளன.

Saturday, October 19, 2013

மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா? ஆச்சர்யம்! ஆச்சர்யம்!!

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.

2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.

பித்தத்திலிருந்து விடுதலை பெற:


1. இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

2. இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பால் கலக்காத இயற்கை பானம்

உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

மூலிகை மருத்துவம் - ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்


இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது.
Cellry -seed

ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும்.

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.

காய்கறிகளின் மருத்துவம் - பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் றிநம் இருக்கும் இதன் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் உடலுக்குத் தேவையா ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜீஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல, தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமாக உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்

பிஸ்தா என்பது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளாவது நிறைந்துள்ளது.


உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கினறது.

ஒரு வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஜீஸ்கள்

தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜீஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது ஜீஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.
குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமானால்ஈ முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும. இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம்.

காய்கறிகளின் மருத்துவம் - வெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:

பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். பொதுவாக வெள்ளரிக்காய பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும்.முக்கியமாக வெப்பத்தை தணிக்க உபயோகிக்கப்படும் வெள்ளரிக்காய் வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவை அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

உடல் எடை அதிகரிக்க உணவுகள்

பொதுவாக உடல் எடை குறைப்புக்கு தான் பல பரிந்துரைகளும்இ டிப்ஸ்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடல் எடை அதிகரிப்பு பற்றி அதிக அளவில் கதவல் இருப்பதில்லை. அதனால் என்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கும். உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சாவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது. போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள். புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால் உடல் தசைகள் பெரிதாக உடல் எடையும் அதிகரிக்கும். அப்படி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ள உணவுகள் என்னவென்று தெரிய வேண்டுமா? இதோ! தொடர்ந்து படியுங்கள்.

Wednesday, October 16, 2013

ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்

பா‌லி‌ல் தா‌ய்‌ப்பால‌், பசு‌ம்பா‌ல், எரு‌மை‌ப்பா‌ல், ஆ‌ட்டு‌ப்பா‌ல் என ‌சில வகைக‌க‌ள் உ‌ண்டு. ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ஒ‌வ்வொரு குண‌ம் உ‌ள்ளது.

தா‌ய்‌ப்பா‌ல் எ‌ன்பது ஒ‌வ்வொரு குழ‌ந்தை‌க்கு‌ம், தா‌யிட‌ம் இரு‌ந்து ‌கிடை‌க்கு‌ம் முத‌ல் ம‌ற்று‌ம் ஈடு இணைய‌ற்ற உணவாகு‌ம்.

அடு‌‌த்து பசு‌ம்பா‌ல் எ‌ன்பது இயல்பாகவே இனிப்பானது, உடலு‌க்கு குளிர்ச்சி தருவது. ஆனா‌ல் எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகாது. எருமை‌ப் பா‌ல் அ‌திக‌க் கொழு‌ப்பு ‌நிறை‌ந்தது. உடலு‌க்கு ந‌ல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

ஆ‌ட்டு‌ப் பா‌‌லி‌ல் ம‌னித உடலு‌க்கு‌த் தேவையான ‌‌நிறைய ச‌த்து‌க்க‌ள் உ‌ள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

இப்படி மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம் என்கின்றனர் டெல்லிவாசிகள்.

 பா‌ல் குடி‌த்தது‌ம் புத்துணர்வு தர‌க் கூடியது. பசு‌ம்பா‌ல் குடி‌த்து வ‌ந்தா‌ல் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலா‌ம். சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மரு‌ந்தாக உ‌ள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கு‌ம் ஏ‌ற்ற உணவாக பா‌ல் உ‌ள்ளது.


இதில் பிரதானமானது பசும் பால். பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது!

பால், மா‌ட்டி‌ன் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது — 

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகை

உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. புரதச் சத்து மிகுதியாக இருப்பதால், பயறு வகைகள் அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகின்றன. 


பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவை தான். ஆனாலும், நன்றாக முதிர்ந்தப் பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். முளைவிட்டப் பயறு வகைகளில் அதிக அளவு நீர்ச் சத்தும், வைட்டமின் சத்துக்களும் இருப்பதால் பூஞ்சைக் காளான் வளர ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

'ஏசி' அறையில் அமர்ந்திருப்பதால் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு

எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.

* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.

* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.

* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.

* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.

* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

உயிர்ச்சத்து உள்ள வைட்டமின் ‘C’ யினால் உண்டாகும் நன்மைகள்

உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்கு அவசியத் தேவையாகும். வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் சரிவிகிதத்தில் உடலில் சேர்ந்தால்தான் உடல் நோய் நொடிகளின் தாக்குதலிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இவை உடலுக்கு உணவின் மூலமே கிடைக்கிறது. இந்த வைட்டமின் சி உடலில் சேமித்து வைக்கப் படுவதில்லை. தேவைக்கு அதிகமானால் அவை சிறுநீரின் வழியாக வெளியேறிவிடும். இதனால் இந்த உயிர்ச்சத்து தினமும் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த தேவை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. வைட்டமின் ‘சி’ சத்தானது உடலில் குறைந்தால் ஸ்கர்வி (Scurvy) என்ற நோய் ஏற்படுகிறது.

வைட்டமின் ‘ஏ’-யின் குணங்கள் என்ன? நம் உடலின் நலத்திற்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது?



  •  பார்வைக் குறைபாட்டைப் போக்கி கண் பார்வையை தெளிவுபடுத்தும்.
  • மாலைக் கண் நோயைப் போக்கும் அல்லது வராமல் தடுக்கும்.
  • வண்ணங்களைப் பிரித்தறிவதற்கு ‘ஏ’-வைட்டமின் உதவுகிறது
  • எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் ‘ஏ’ உதவுகிறது.

சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்து உணவுமுறை

இன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.

1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இந்த வகை சர்க்கரை நோய்க்கு IDDM (Insulin dependent diabetes mellitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது.

ஆயுளையும் நீடிக்கச் செய்யும் முக்கனிகள்

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். நாம் தினமும் காய்கறிகள் கீரைகள்போன்றவற்றை சமைத்துதான் சாப்பிடுகிறோம். இவற்றில் சில சத்துக்கள்சமைக்கும்போது அழிந்து விடுகின்றன. ஆனால் சமைக்காத பொருளான பழங்களில்உள்ள அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கிறது. வளரும்குழந்தைகள் கர்ப்பிணிகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவதுபழங்கள் தான்.

பழங்களில் தான் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

இத்தகைய பழங்களில் முக்கனிகள் என்று அழைக்கப்படும் மா, பலா, வாழையின் மருத்துவ பயன்களை அறிவோம்.

இந்த முக்கனிகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும். இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும்.

வைட்டமின் இ-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்

மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான. உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தபதினமூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபோயகப்படுத்தப்பட்டு, மீதமூள்ளவை கொழுப்பு பொருட்களாக கலலீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம்வெளியேற்றப்படுகிறது.

Tuesday, October 15, 2013

சளித் தெல்லைக்கான மூலிகை மருத்துவம்


  • இருமல், இளைப்பு, ஆஸ்துமா குணமாக ஆகாயத் தாமரை
  • ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெய்யில் போட்டுக்காய்ச்சி, அந்த எண்ணெய் யைத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக் கட்டு, தலைவலி குணமாகும்.

மூலிகை மருத்துவம் - மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்

தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய  தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான  ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது.  தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம்  போன்றவை  நிறைந்துள்ளது.

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் முயற்சி செய்து பாருங்களேன். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கலும்.


  • வரக்கொத்தமல்லி - அரைகிலோ
  • வெந்தயம் - கால் கிலோ


தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

பழங்களின் மருத்துவம் - தாய்ப்பால் சுரக்க முலாம் பழம்

குளிர்ச்சியைத்தரும் பழங்கள் முலாம் பழம் 

பழங்கள் நேரடியாக சத்துக்கள் உடலுக்குக் கொடுக்கக்கூடியது உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களை கொடுப்பது பழங்களே, முலாம் பழத்தின் மருத்துவத் தன்மை பற்றி அறிந்து கொள்வோம். முலாம் பழம் சிறிய பூசணிக்காய போல் பழுப்பு நிறத்துடன் இருக்கும். கோடைக் காலத்தில் அபரிமிதமாக அப்பழம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் பழங்களில் இதுவும் ஒன்று. அதில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து உள்ளன. அவை வெள்ளரி இனத்தைச் சார்ந்தது.

தானியத்தின் மகத்துவம் - இரத்த சோகை நீங்க எள்

 எள்ளின் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்.
Botanical name - Sesamum indicum

எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.

எள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.

இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

பழங்களின் மருத்துவம் - சிறுநீரக கல்லடைப்பு நீங்க பேரிக்காயின் மருத்துவக் குணம்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

தானியத்தின் மகத்துவம் - தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு



இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு

பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு

என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியா முழுதும் பரவிக் காணப்படும் குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.

வயிற்றுப் புண் உள்ளவர்களா இதோ உங்களுக்காக

வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை

  • உணவு முறை
  • மனஅழுத்தம்
உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான். நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது.
அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள் வயிற்றில் உள்ள அபான வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப் புண்ணை உண்டாக்குகிறது.