Thursday, November 21, 2013

குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்


'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும்.

குழந்தைகளின் வாந்தி நிற்க..

வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும்.

கருத்தரிக்க உதவும் அதிமதுரம்


அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

மூலிகை மருந்து: எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்:



ஆஸ்துமா குணமடையும்

வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.

மஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.


  • விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

மூலிகை மருந்து:தோல்வியாதிகளுக்கு தொட்டாற்சுருங்கி

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள்

அதிக உடல் எடை தான் இன்று பலரையும் படுத்தி எடுக்கும் விஷயமாக இருக்கிறது. 'எப்படித்தான் உடல் எடையைக் குறைப்பது?' என்று திணறித் தவித்துப் போகிறார்கள். அவர்களுக்கு உதவும், எளிய முறையில் உடல் பருமனைக் குறைக்கும் வழிகள் இவை...

மூலிகை மருந்து:மன அழுத்தம் நீக்கும் மருதாணி

மருதாணி இலையைப் பற்றி அறியாத பெண்களே இருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. மருதாணியில் பல மருத்துவக் குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். சிலர் வீடுகளின் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர். மணமகளை அழகுபடுத்தவும், திருவிழாக் காலங்களிலும் இந்தியப் பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர்

உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய கருப்பு கண் பீன்ஸ்


கருப்பு கண் பீன்ஸ் விதை பேருக்கு ஏற்றார் போல வெள்ளை நிறத்தில் சிறிய கண் போன்ற கருப்பு நிற புள்ளியை பெற்றுள்ளது. பொதுவாக பீன்ஸை  சமையலுக்கு பயன்படுத்துவோம் அதிலும் கருப்பு நிற புள்ளிகளைக் கொண்ட பீன்ஸ் கூடுதலான ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. வெள்ளை நிற  அவரை விதை உடலுக்கு ஆரோக்கிய பலன்களை தரக்கூடிய நார்சத்து, புரதம், இரும்பு சத்துகளை பெற்றுள்ளது.

இதயத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டியவை

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும்  கொழுப்பை  குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது.  நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை  அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.

தும்மல்,மூக்கடைப்பு,தலைவலி சித்தர் மூலிகை மருத்துவம்

சைனஸ் தொந்தரவில் பல வகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது.  சைனஸ் பிரச்னையில் மூக்கிற்கு அருகே உள்ள காற்றறையான சைனஸ் என்ற இடைவெளியில் நீர் கோர்த்து சளியாக மாறி அடைப்பதால்  வருகிறது. சைனஸ் தொந்தரவின் முக்கிய குறிகுணம் மூக்கடைப்பு ஆகும்.

கடும் சளியை முடிவுக்குக் கொண்டுவரும் சுக்கு


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:
இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப் பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.