Sunday, July 13, 2014

இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துகுடி

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.


பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு 

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். 

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

காசம் தீர்க்கும் கற்பூரவள்ளி


தற்போது மழைக்காலம் என்பதால் சாலையின் இரு பக்கங்களிலும், வீடு ஓரங்களிலும் பல செடி கொடிகள் நிறைந்து வளர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை கொஞ்சம் உற்று கவனித்துப் பாருங்கள்.  நீங்கள் படித்த மூலிகைகளில் சில அங்கு காணப்படும். மூலிகைகளைத் தேடி நாம் செல்ல வேண்டாம். அநேக மூலிகைகள் நம் அருகிலேயே இருக்கின்றன.


சிலர் வீடுகளில் அழகுக்காக பல செடிகொடிகளை வளர்ப்பார்கள். அவற்றில் துளசி, கற்பூரவள்ளி, சித்தரத்தை, சிறியாநங்கை என பல அடங்கும். சிலருக்குக்கு இவற்றின் மருத்துவக் குணங்கள் தெரிந்திருக்கும். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

ஐம்புலன்களில் ஒன்றான கண்களைக் காக்க

ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும். இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.  ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கண்ணில் சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும் பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதே இதன் வேலையாகும்.

முகம் அழகான தோற்றத்தைப் பெற

ஆரோக்கியமான உடல், அழகான முகம் இவை இரண்டையும் விரும்பாதவர் யாரேனும் உண்டா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழிக்கேற்ப, ஒருவரின் உடல் நிலையின் தன்மையும், மன நிலையின் தன்மையும் முகத்தில் தான் தெரியவரும். சில அழகு சாதனப் பொருட்கள் உடல் ஒவ்வாமை அதாவது அலர்ஜியை உண்டாக்கி தோலில் மாறுதல் ஏற்படச் செய்கின்றன. எனவே இயற்கை மூலிகைகளைக் கொண்டு எளிய முறையில் முகத்தின் அழகை மெருகூட்டச் செய்யலாம்.

நெல்லி வற்றலை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அந்த நீரில் முகம் கழுவி வரவேண்டும். அப்போது முகத்தில் உள்ள வெப்பக் கட்டிகள், பருக்கள், தழும்புகள் வடுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நாளடைவில் உங்கள் முகம் அழகான தோற்றத்தைப் பெறும்.

லோலாசனம் இடுப்பு, முதுகு வலிக்கு இது சிறந்த ஆசனம்


ஒவ்வொரு மனிதனும் புத்துணர்ச்சி பெற உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் அவசியம் தேவை. இந்த இரண்டு பயிற்சியும் ஒருங்கே அமையப் பெற்றதுதான் யோகப் பயிற்சி.

ஒவ்வொரு இதழிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்யத்தக்க ஆசனங்களை நாம் அறிந்து வருகிறோம்.

 லோலாசனத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். லோலா என்றால் ஊஞ்சல் என்று பொருள். 

இந்து கோவில்களில் கடவுளின் விக்கிரகங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். இதுபோல் சில வீடுகளில் ஊஞ்சல் இருப்பதை இன்றும் காணலாம். ஊஞ்சலில் ஆடுவதால் பல நன்மைகள் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கோவிலிலும், வீடுகளிலும் ஊஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர்.



கைகளுக்கு அதிக வலிமை தரக்கூடிய இவ்வாசனம் செய்யும் முறையைப் பார்ப்போம்.

முகத்தில் முகம் பார்க்கலாம்..! அழகு குறிப்பு


இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான்.  அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல.  உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும்.

அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்...

ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.

கர்ப்பவதிகளுக்கு கிருபானந்த வாரியாரின் அறிவுரை

தலைசிறந்த ஆன்மீகவாதியும் தன் தமிழ்ப் பேச்சால் உலகத் தமிழர்களைக் கவர்ந்த உன்னதமானவருமான திருமுருக கிருபானந்தவாரியார் தன்  ஆன்மீகச் சொற்பொழிவுகளில் மக்களின் அன்றாட நிகழ்வுகளை கலந்து சொல்வதில் அவருக்கு  நிகர் அவர்தான்.


ஆன்மீகம் மட்டுமே மனிதனை உயர்த்தாது, ஆரோக்கியமான உடலும் ஆன்மீகத்திற்கு முக்கியம் என்று கூறுவார். அவருடைய அறிவுரைகள் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்  இருக்கும்.

ஞாபக சக்தியைத் தூண்டும் ஆசனம் பிறையாசனம்

மனிதன் நோயின்றி வாழ யோக தியானம், உடற்பயிற்சி அவசியம் தேவை.  இன்றைய பொருளாதார போராட்டத்தில் இவை செய்ய நேரம் இருப்பதில்லை.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியா என்ற பழமொழிபோல் உடல் நன்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் பொருளாதாரத்தைத் தேட முடியும்.  அதற்காக தினமும் காலை மாலை நேரத்தில் அரை அணி நேரம் ஒதுக்கினால் போதும்.

அன்றாட வேலைப் பளுவில் உடலும் மனமும் சோர்ந்து போகும்.  அவர்கள் புத்துணர்வு பெற யோகப்  பயிற்சி மற்றும்  உடற்பயிற்சி தேவை.  அரை மணி நேரம் செய்தால் நல்லது.

நலம் தரும் சூப்

வாழைத்தண்டு சூப்

வாழை மரத்தின் இலை, பூ, காய், தண்டு, வேர்த்தண்டு அனைத்தும் பயன்படுகின்றது.  வீட்டு விசேஷங்களில் வாழை மரம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால்  கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.