Friday, November 22, 2013

மூலிகை மருத்துவம் - இருமலுடன் கூடிய சளிக்கு கை கண்ட மருந்து கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .


கற்பூரவள்ளி (கோலியஸ் ஆறோமத்திக்குச்) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

உடலுக்கு அவசியமான அறுசுவைகள்

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.


நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம் உண்கிறோம்.

கீரை மருத்துவம் - கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய கரிசலாங்கண்ணி

 இக்கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும் இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றது வெள்ளைக் கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணியில் மஞ்சள் பூ பூக்கும். மஞ்சள் கரிசலாங்கண்ணியின் கசப்புத்தன்மை குறைவு, வெள்ளையில் கசப்புத்தன்மை அதிகம்

மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் மிகவும் விசேஷமானது. இரண்டையும்  சமைத்துச் சாப்பிடலாம். இதுதான் சமையலுக்கு ஏற்றது. நாட்டு வைத்தியத்தில் பெரும் பயனைத் தருவது இக்கீரை மஞ்சள் காமாலையைப் போக்குவதில் பெரும் பங்காற்றுகிறது. கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

கீரை மருத்துவம் - ஆரம்ப நிலை காச நோய் குணமாக்கும் புளிச்சக் கீரை

இக்கீரையின் பெயரைக் கேட்டதும் புளியேப்பம் வருகிறதா? பெயர்தான் புளிக்கிறதே தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கு பெருமளவு உதவுகிற கீரை இது.

இக்கீரை உணவுக்காக மட்டுமின்றி நார் எடுக்கவும் பயன்படுகிறது. வேறெந்தக் கீரையிலும் அத்தன்மை கிடையாது.

கீரை மருத்துவம் - பல நோய்களுக்கு நோய் நிவாரணியாக பயன்படுகிறது தூதுவளை

கோடி வகையைச் சேர்ந்தது இது. இலைகளின் பின்பக்கம் முள்கள் இருக்கும். தூது வளைக்கு கபநோய்களைத் தீர்க்கும் குணம் உண்டு. இருமல், பெருவயிறு, ஆண்மைக் குறைபாடு போன்றவற்றுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகும்.
Solanum trilobatum

நாட்டு வைத்தியத்திலும், சித்த வைத்தியத்திலும் தூதுவளை நன்கு பயன்படுகிறது இதன் மருத்துவகுணம் தெரிந்தவளைத் தவிர மற்றவர்கள் இதை உணவுப் பொருளாகக் கொள்ளமாட்டார்கள். இக்கீரையை கலவைக்கீரையோடு கலந்துதான் சமைப்பார்கள்

மூலிகை மருந்து: ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும் சிறியா நங்கை, பெரியா நங்கை


சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும்.

காய்கறிகள் மருத்துவம் - ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் உடல்நல நன்மைகள்:-

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்..

கீரை மருத்துவ: பலநோய்களை குணப்படுத்து பொடுதலை கீரை

Phula nodiflora

இதன் சுபாவம் சூடு. அதிகமாய் உணடால் சூட்டை கிளப்பிவிடும். அளவோடு உண்டால மருந்தாக நமக்கு உதவும். கிராமங்களில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். சத்துக்கள் அதிகமில்லாவிட்டாலும் பலநோய்களை இக்கீரை குணப்படுத்துகிறது.