மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்
“மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்!”
என்பது பழமொழி.
தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில் முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன.
மாம்பழம் ‘கடவுளின் கனி’ என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிய சுவையுடன் உள்ள இக்கனியில், பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன.