Thursday, May 21, 2015

மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்

        மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்


   “மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்!”
       என்பது பழமொழி.
     தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில் முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன.

  மாம்பழம் ‘கடவுளின் கனி’ என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிய சுவையுடன் உள்ள இக்கனியில், பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன.

Wednesday, May 20, 2015

மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்து  உருளைக்கிழங்கு சாறு


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

கருவளையம் வந்த பின் அவற்றை போக்க

             கருவளையம் வந்த பின் அவற்றை போக்க


  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. அத்தகைய முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு… சொல்லவே வேண்டாம். இந்த முகப்பொலிவை கெடுக்கும் காரணங்களுள் முக்கியமானது ‘கருவளையம்’. ஆண், பெண், சிறுவர், நடுத்தர வயதினர், பெரியவர் ஆகிய அனைவருக்கும் பாகுபாடின்றி நம்மில் 90 சதவீத பேருக்கு இந்த பிரச்சனை உள்ளது.

Tuesday, May 19, 2015

இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்

    இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைய கேரட்


பார்ப்பதற்கு பளபளப்பாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும் காய்கறிகளில் முக்கியமானது காரட். உணவில் தவிர்க்க முடியாத காய்கறிகளில் முக்கியமானதும், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடியதுமான கேரட் பற்றி நாம் காண்போம்.

 இது குளிர் மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் சிறு செடி வகையைச் சார்ந்தது. இலைகள் மிகச் சிறியதாகவும், கொத்தாகவும் ப+மிக்கு வெளியில் காணப்படும். பூமிக்கு அடியில் வேர்ப்பகுதியில் நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருள் இருக்கும்.

கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்

 கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்



  அறுகம்புல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய அறுகம்புல் சிறந்த மருத்தவ குணங்களைக் கொண்டது. இது ஓர் அற்புத மூலிகை..

  விநாயக சதுர்த்தி அன்று இதனை விநாயகருக்குச் சாற்றும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இப்புல்லின் மேல் பாகம் வெயிலால் காய்ந்தது போல் தோன்றினாலும், இதன் வேர்கள் சாவதில்லை. அதனால்தான் நாம் ஒருவரை வாழ்த்தும் போது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடிப் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்துகிறோம்.

Saturday, May 16, 2015

ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு

         ஊளைச் சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு


முன்பு  இன்றைய உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு லைட்டா தொப்பை எட்டிப் பார்க்கும். 

 அப்போதைக்கு அதை பற்றி ஃபீல் பண்ணாமல் அப்படியே விட்டு விடுவார்கள். அப்படியே ஒரு 5 ஆண்டுகள் கழித்து பார்த்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.

இயற்கை முறையில் பயனள்ள வைத்திய குறிப்புகள்

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. ¼  தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலலையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து  எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்

   அழகான சருமம் பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள் 


 
1. இரண்டாக வெட்டிய ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் இளமையுடனும் இருக்கும்.

2. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி தடைபட்டு முகம் அழகு பெறும்.

3. குண்டாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

Friday, May 15, 2015

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

     முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்



  முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும்.

  தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லை புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்

    உடல் எடையை குறைக்க எளிமையான 8 வழிகள்


 நம் அன்றாட வேலைகளை செய்யும் உடல் உறுப்புகள் இயங்கவும் நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.  இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்ல அதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை காரணமாகும்.  சிலருக்கு மட்டும் ஆர்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன. 

 கீழே தரப்பட்டுள்ளபடி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால் குறைந்தது மாதம் 4 கிலோ எடை குறைவது மிக உறுதி.

Thursday, May 14, 2015

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி

வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய அவுரி


 12 ராசிகளில் கன்னி ராசிக்கு உரிய மூலிகை அவுரி. இது அஷ்ட கன்மங்களில் தம்பளத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. நீலி என்றும் அழைக்கப்படும் அவுரியின் மருத்துவக் குணங்கள் பற்றி பார்க்கலாம்.

Wednesday, May 13, 2015

பித்தம் குறைக்கும் மாதுளம் பூ

        பித்தம் குறைக்கும்  மாதுளம் பூ 


மாதுளை என்பது கனிவகைகளில் ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலும் மாதுளம் பழத்தை உண்பதற்கு பயன்படுத்தி வரக்கூடிய நாம், மாதுளையின் பூக்களிலே அதிக மருத்துவ குணம் உண்டு 

மருத்துவப் பயன்

  மாதுளம்பூவினை எடுத்து, நிழலில் உலர்த்தி, நன்கு பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தேனிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து தினசரி காலை-மாலை என இருவேளையும் அருந்தி வரலாம். இதனால் பசி நன்கு தூண்டப்பட்டு, உண்ட உணவு நன்கு சீரணமாகும். நோய் எதிர்ப்பாற்றல் நன்கு வளரும். இதனால் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். உடலும் வன்மை பெறும்.

பல் பராமரிப்பு வழிகள்

பல் பராமரிப்பு வழிகள்



  • கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிடுங்கள். எல்லா வயதினருக்கும் கேரட் சிறந்த பல்பாதுகாப்பு உணவாகும்.
  • பல் மஞ்சள் நிறம் மாற எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உப்பைச் சேர்த்து வாருங்கள். ஒரு வாரத்தில் பல்லின் மஞ்சள் நிறம் மாறும்.
  • மாதத்திற்கு ஒரு தடவையேனும் கரும்புத் துண்டுகளை மென்று துப்புங்கள். அதனால் பற்கள் சுத்தமாவதுடன் பற்கள் நல்ல பலமடைகின்றன.

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள்

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள் 


 உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப்  பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான, அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துப முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல் வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோயின்றி வாழ பிரண்டை

         நோயின்றி வாழ பிரண்டை 


    சித்தர்கள் நாம் நோயின்றி வாழ பல முறைகளை வகுத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான்  மூலிகை கற்ப வகைகளுள் சிறப்பானதாக கூறப்பட்ட “பிரண்டை” என்னும் மூலிகை பற்றி  பார்க்கலாம்.

     உணவே மருந்து,மருந்தே உணவு” என்பதற்கிணங்க பிரண்டை என்னும் இந்த மூலிகை வீட்டு உபயோகத்தில் துவையல், ஊறுகாய், அடை போன்றவையாகவும் மருத்துவத்தில் வயிறு எரிச்சல், வயிற்று வலி (அல்சர்) போன்றவற்றிற்காகவும் பன்னெடுங்காலமாக நம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “வச்சிரவல்லி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.

Tuesday, May 12, 2015

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்


சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

வாழையிலையின் பயன்கள்

வாழையிலையின் பயன்கள் 


தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Monday, May 11, 2015

டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும் பப்பாளி இலை

                       டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும்  பப்பாளி இலை


தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது.

சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை

 சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை


குப்பைமேனி கீரை மலம் இளக்கியாகும். சொறி, சிரங்கு,உடல் அரிப்புக்கு மேற்ச்சாகவும் பயன்படுகிறது. இலைச் சாறு பாம்புக்கடி நச்சினை முறிக்கவும் பயன்படுகிறது. நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது. இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது. குப்பைமேனி இலையால் பல்நோய்,தீச்சுட்டப் புண் பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, மூலம், நமைச்சல், குத்தல்,இரைப்பு, மூக்குநீர் பாய்தல்,கோழை போன்றவை தீரும்.

Tuesday, May 5, 2015

அபரிமிதமான விட்டமின்களை கொண்ட முளைவிட்ட தானியம்

அபரிமிதமான விட்டமின்களை கொண்ட முளைவிட்ட தானியம் 


இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு, கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான், முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும். 

நாம் பயன்படுத்தும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்

நாம் பயன்படுத்தும் எண்ணெய்களின் மருத்துவ குணங்கள்


* எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணை உணவுப் பொருளாகவும், மருந்து பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. இதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழும். மேலும் சரு ஈரப்பதத்தை சமப்படுத்தி, உடல் வெப்பத்தை தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ட்ரை ஸ்கின் கொண்டவர்கள் அடிக்கடி தேய்த்து குளிப்பது நல்லது. 

உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொருட்கள்

இரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொருட்கள்



பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்


சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம்.சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறு நீரைப் பெருக்கக் கூடிய சிறந்த உணவுப் பொருள். இதை உணவாகக் கொள்ளும்போது உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. 

சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்

சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது வெந்தயம்


* வெந்தயத்தில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் நீணட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். இதனால் பசியெடுப்பது குறைகிறது. உணவு உட்கொள்ளும் அளவும் குறைவதால் உடல் எடை குறைய ஏதுவாகிறது. 

* வெந்தயம் சிறுநீரகக் கற்களைக் கரைக்க கூடியது. அல்லது கற்கள் வராமல் தடுக்க கூடியது. சிறுநீரைப் பெருக்கி கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

சர்க்கரை நோயில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்ற உன்னதமான உணவு வெள்ளரிக்காய்

சர்க்கரை நோயில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கின்ற உன்னதமான உணவு வெள்ளரிக்காய்


வெள்ளரியில் அதிக அளவிலான விட்டமின் கே சத்து அடங்கியிருக்கின்றது. இது எலும்புகளை பலப்படுத்த மிகவும் உதவுகின்றது. விட்டமின் கே அல்ஸைமர் என்னும் மறதி நோய் வராத வண்ணம் மூளை நரம்புகளுக்கு ஊட்டசத்தாகவும் விளங்குகின்றது. 

அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்

அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்


உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ... 

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும். 

ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல் செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து விடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதே நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும். 

மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள  ‘கேப்சைசின்’, உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். 

கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும். 

பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் ‘ஸ்லிம்’ ஆக மாற்றும். 

கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய்களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 

முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறுவிதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும். 

தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க  வேண்டும். 

மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்.