Wednesday, November 26, 2014

உடலில் ஏற்படும் சீர்கேடுகளை போக்க மூலிகை மருத்துவ குறிப்புகள்

பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம். 


சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது. 

மிளகு: சளி, பசியின்மையைப் போக்குகிறது. திடீர் அரிப்பு, தடிப்புக்கு, ஆஸ்துமா, சைனஸ் (நீர்கோவையுடன் மூக்கடைப்பு) சிறந்த நிவாரணமாகிறது. 

Friday, November 21, 2014

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மெண்ட்... 
கேரட் சாறு-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன்... 
இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வரவேண்டும். 
உங்கள் முகத்தை மெருகூட்ட ஒரு `பளிச்' பேக் இருக்கிறது. 
முல்தானிமட்டி-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன்... 
இரண்டையும் கலந்து முகத்துக்கு `பேக்' போடுங்கள். வாரம் ஒருமுறை இந்த `பேக்' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணையை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கிவிடும். 
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு அசத்தல் `பேக்' இருக்கிறது. 
உருளைக்கிழங்கு ஜுஸ்-1 டீஸ்பூன், 
தேங்காய் பால்-1 டீஸ்பூன், 
பயத்த மாவு-1 டீஸ்பூன்... 
மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு`பேக்' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த `பேக்' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

Monday, November 17, 2014

நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில வழிமுறைகள்


இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கலாம் என்ற நிலை உருவாகி வருகிறது. முதுமை அடைந்தால்தான் வரும் என்ற நிலைமை மாறி, இளம் வயதிலேயே இந்தத் தொற்றாத நோய் பெருக ஆரம்பித்துவிட்டது.


உடல் இயக்கம் இல்லாமை, கொழுப்பு-சர்க்கரை கொண்ட உணவை அதிகம் உட்கொள்ளுதல், மன அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுவதும், உடல் ஊதுவதும்தான் இதற்குக் காரணங்கள்.


நீரிழிவு நோயின் அடிப்படைகளை முழுமையாக அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இந்நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

தியானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.


நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Thursday, November 13, 2014

குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு, ஷாம்புக்கு குட்பை சொல்லுங்கள்

முதல் வேலையாக குளிர்காலம் முடியும் வரை சோப்புக்கு நீங்கள் குட்பை சொல்லுங்கள். கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு, ஆரஞ்சு பழத்தோல் மூன்றையும் சம அளவு எடுத்துக் காய வைத்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். 

அதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள், கடலை மாவு, பயத்தமாவுடன், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற ரெடிமேட் ஆரஞ்சு பழத்தோல் பொடியை வாங்கிக் கலந்து கொள்ளலாம். குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் சோப்புக்கு பதில் இந்தப் பொடியை மட்டுமே உபயோகிக்கவும். 

Wednesday, November 12, 2014

எளிய மருத்துவக் குறிப்புகள்


1. கண்ணைச் சுற்றிக் கருவளையம்:

பாலை நன்றாகக் காய்ச்சி ஆற விட்டு வடிகட்டி வைக்கவும். ஒரு கரண்டியில் அந்தப் பாலை எடுத்துக்கொண்டு, சுத்தமான வெள்ளைத் துணி அல்லது பஞ்சை எடுத்து அந்தப் பாலில் தோய்த்து, கண்களின் மீது வைத்துக்கொண்டு 15 நிமிடம் படுத்துக்கொள்ளவும். இப்படிச் செய்துவந்தால் கண் சோர்வு நீங்குவதுடன் கருவளையமும் மறைந்துவிடும். கண்கள் பொலிவுடன் இருக்கும். வெயில் காலத்தில் இது கண்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

2. இளநரை, கண் எரிச்சல், பித்தம்:

அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் பவனமுக்தாசனம்

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. (பவன – வாயு, முக்தி – விடுதலை).


செய்முறை

# மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும்.

# உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம்.

# கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கும் பயறு

உடலுக்குச் சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு. ஒவ்வொரு தானியத்துக்குக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அவற்றைத் தெரிந்துகொண்டு சாப்பிட்டு உடலை வலுப்படுத்தலாம்.


சோளம்: உடலுக்கு உறுதியை அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண், வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

கோதுமை: நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு. மலச்சிக்கல் உண்டாகாது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்.

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைக்கும் வீரபத்ராசனம்

வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.

முதல் நிலை:

# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.

# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.

மரீச்யாசனம்


செய்முறை

# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.

# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.

# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.

# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.

தலைவலிக்கு சிறந்த கை மருந்துகள்

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் மிக அதிகம். ரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.


இந்தத் தலைவலி சில மணி நேரமோ, சில நாட்களுக்கோ காணப்படும். இருட்டில் போய் அமர வேண்டும் என்று தோன்றும். கண்களில் ஒளிவட்டங்கள் தெரியும். கை மரத்துப் போகலாம். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கட்டுப்படாமல் போகலாம். மலச்சிக்கல், மனச்சோர்வு, உணவில் அதிக நாட்டம், கழுத்து வலி, கொட்டாவி விடுதல் போன்றவை இதில் காணப்படும்.