முகப்பரு வந்தவுடன் முகத்தின் அழகைக் கெடுப்பதாக நினைத்து அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணத்துடன் பருவைப் பலர் கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் அவ்விடத்தில் கரும்புள்ளிகள் நிலைத்து முகத்தின் அழகைக் கெடுக்கிறது. சில சமயம் பருக்களே உதிர்ந்து அவ்விடத்தில் தழும்பாக கரும்புள்ளிகளை உண்டாக்குகிறது.
இந்த கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. கடைகளில் கிடைக்கும் கிரீம்களால் பல நேரம் பக்க விளைவுகள் உண்டாகின்றன. பக்க விளைவுகள் அற்ற மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம்.