Wednesday, October 30, 2013

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே சில மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.


•தினமும் சாப்பாட்டிற்குப் பின் ஒரு தக்காளிப்பழம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி உண்டாகும். உண்ட உணவு எளிதில் செறிக்கும் . மேலும், வயிற்றில் உண்டாகும் வாயுத் தொல்லையும் கட்டுப்படும்.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்.



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

பாட்டி வைத்தியம்

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.


* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

சிரங்கை ஒழிக்கும் பாகற்காய் இலை



பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்கு இயற்கை வைத்தியம்

வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போதே இன்றைக்கு சாப்பாடு கார குழம்போ அல்லது சாம்பாரோ என நினைத்துக்கொண்டே வீட்டிற்கு வருபவர்கள்  வீட்டில் சிக்கனோ மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்  அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று  வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி  அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்

முகத்தின் அழகை இன்னும் அழகாக்குவது செழுமையான கன்னங்கள். ஆப்பிள் போல் கன்னங்கள் இருந்துவிட்டால் அழகோ அழகு. ஆப்பிள் கன்னங்கள் பெறுவதற்கு சில டிப்ஸ்.

தோலுக்குத் தேவையான எண!ணெய்ப் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண!டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

இளமையைக் காப்பதில் நவ்காசனம்

மனிதனின் உடலும் உள்ளமும் சீராக இருந்தால்தான் நீண்ட ஆரோக்கியத்தைப் பெற முடியும்.

இன்றைய நவீன சூழலில் மன அழுத்தம், கோபம், பயம், எதிர்கால நம்பிக்கையின்மை, பொறுமையின்மை, குறுக்கு வழியில் முன்னேறத் துடிப்பு என பல வகையில் இளைய தலை முறையினர் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர்.

இவர்கள்,  தாங்கள் சாம்பாதிக்கும் பணம் வாழ்வின் அனைத்து சந்தோஷத்தையும் கொடுத்துவிடும் என்று எண்ணி இரவைப் பகலாக்கி உழைக்கின்றனர்.

வாயில் ஊறும் உமிழ்நீர் உபயோகமான தகவல்

எச்சிலைத் துப்பாதீர் என்ற வாசகம் தாங்கிய பலகைகளை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.


உடல் என்னும் வீட்டில் இருக்கும் ஒன்பது வாசல்களில் வாயும் ஒன்று. இது உணவை உண்பதற்கும், பேசுவதற்கும் பயன்படுகிறது.

உமிழ்நீரை வெளியில் துப்புதல் ஆகாது என சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறுகின்றனர்.

புளிப்பு, இனிப்பு இவற்றின் சுவையை உணர்ந்தால் வாயில் உமிழ்நீர் தானாக ஊறும்.

அஞ்சறைப் பெட்டி - விந்துவின் வீரிய சக்திக்கு வெந்தயம்

 வாசனைப் பொருட்கள் பலவும் உணவிற்கு சுவை> மணம் அளிப்பதோடு இயற்கை மருந்தாகவும் பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமான ஒரு வாசனைப் பொருள் வெந்தயம்.

அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்:

வெந்தய விதையில் புரதம்> சுண்ணாம்புச் சத்து> பாஸ்பரஸ்>பொட்டாசியம்> சோடியம்> இரும்புச் சத்து > வைட்டமின ஏ> தையாமின்> ரிபோபிளேவின்> நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துப் பொருட்கள் கணிசமாக அடங்கியுள்ளன.

கீரை மருத்துவம் - கொத்தமல்லியின் மருத்துவக் குணம் பாட்டி வைத்தியம்:

siddhaandherbal.blogspot.in


கொத்தமல்லியில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து. தாது உப்புகள் உள்ளன. மேலும் சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து, இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம், தயாமின, ரைபோ பிளேவின், நிகோடின் அமிலம், வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.

மளிகைப் பொருள் மகத்துவம்


சாதாரணமாக நமது வீட்டுக்கு அருகில் இருக்கும் மளிகைக் கடையில் கிடைக்கும் பொருட்களில் கூட ஏகப்பட்ட பலன்;கள் உணடு. நமது முன்னோர்களின் மருத்துவப் பயனாக விளங்கிய சில பொருட்களின் மகத்துவத்தை அறிவோம்.