Saturday, July 12, 2014

சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்க

கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதம் முதல் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும். சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து குடிக்கலாம். 


பாலுடன் பூண்டை உரித்து போட்டு நன்கு வேகவைத்து கடைந்து இரவில் இதனை சாப்பிடலாம். கர்ப்பிணிபெண்கள் மாதுளம் பழம் ஜூஸ் குடிக்கலாம். தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது மட்டுமில்லாமல் ரத்தம் விருத்தியாகும். 

சுகப்பிரசவமாக தேன் சாப்பிடுங்க

கர்ப்பிணி பெண்கள் ஏழாவது மாதம் முதல் சாதம் கொதிப்பதில் முதல் கொதி வந்ததும் அந்த கொதிநீரை ஒரு டம்ளர் எடுத்து சிறிது பணங்கற்கண்டு சிறிது வெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும். சிறிது வெந்தயம் சிறிது பச்சரிசி 5 பல் பூண்டு மூன்றையும் குழைய வேகவைத்து கடைந்து குடிக்கலாம். 

பாலுடன் பூண்டை உரித்து போட்டு நன்கு வேகவைத்து கடைந்து இரவில் இதனை சாப்பிடலாம். கர்ப்பிணிபெண்கள் மாதுளம் பழம் ஜூஸ் குடிக்கலாம். தாய், சேய் இருவருக்கும் மிகவும் சிறந்தது மட்டுமில்லாமல் ரத்தம் விருத்தியாகும். 

கர்ப்பிணிபெண்கள் ஒன்பதாவது மாதம் முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாய் குருந்தோட்டி வேர் கஷாயம் சாப்பிடலாம். சோம்பை சிறிது வறுத்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து ஒன்பதாம் மாதம் முதல் குடிக்க வேண்டும்.

இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரை இடுப்பு கால்களுக்கு ஊற்றி கொள்ள வேண்டும். பிரசவவலி எடுத்தவுடன் தேனை எதுவும் கலக்காமல் நேரடியாக உள்ளுக்குள் சாப்பிடவேண்டும். மீதமுள்ள தேனை கருஞ்சீரகம் பொடி கலந்து வயிற்றைச் சுற்றித் தடவினால் எந்த வித சிரமமும் இன்றி சுகப்பிரசவம் ஏற்படும். 

இது தவிர நாடி சுத்தி பிராணயாமத்தையும் பக்தகோணாசனம் என்ற கர்ப்பஸ்திரீகள் செய்யக்கூடிய ஆசனத்தையும் விடாமல் செய்து வர வேண்டும். 

பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ள கர்ப்பமான பெண்ணின் தனத்தில் சுரக்கும் தாய்ப்பால் துளித்துளியாக சிறிதளவே வருமானால் ஆண்குழந்தை, கெட்டியாக பிசின் போல சிரமத்துடன் வருமானால் பெண்குழந்தை என்று தெரிந்துகொள்ளலாம்.

கர்ப்பிணிகள் இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இளநீரில் லாரிக் அசிட், ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இளநீரில் எலக்ரோலைட் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். 

கண்களுக்கான பொதுவான பாதுகாப்பு முறைகள்

நன்றாக வெயில் அடித்தாலும், வெயில் இல்லாமல் இருந்தாலும் பகல் நேர பயணங்களில் ‘சன் கிளாஸ்’ கண்ணாடிகள் பயன்படுத்துங்கள். அது, அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கும்.


 கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தயக்கமில்லாமல் தொப்பியோ, குடையோ எடுத்துச்செல்லுங்கள். கண்களை பாதுகாத்துக்கொள்ள அவைகளை பயன்படுத்துங்கள். கருப்பு நிற குடைகளைவிட, இளநிற குடைகளே அல்ட்ரா வயலெட்  கதிர்களை அதிகஅளவு தடுக்கும். 

 வெளியே செல்லும்போது கைபையில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குறைந்தது

ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

சருமத்தை வெள்ளையாக்குவதாக கூறும் ஃபேர்னஸ் கிரீம்களை வாங்கி தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், சருமம் அதன் ஆரோக்கியத்தை இழந்து விடும். ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்த நினைத்தால், அதனை பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பதை தெரிந்து கொண்டு பின் பயன்படுத்துங்கள். 

இங்கு கண்ட கண்ட ஃபேர்னஸ் கிரீம் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளை பார்க்கலாம்.. ஒரு சில ஃபேர்னஸ் கிரீம் மூலம் சிலருக்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதிலும் க்ரீம் பயன்படுத்திய சில நொடிகளிலேயே அரிப்புக்களானது ஏற்படும். 

வளர் இளம் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான உணவு

சத்தான உணவு இல்லாததால் ஒல்லியான தேகத்துடன் காணப்படுவோரையும், அளவுக்கு அதிகமாக சத்தான உணவுகளை சாப்பிட்டு குண்டாக இருப்போரையும் அழகானவர்கள் என்று சொல்லி விட முடியாது. இந்தியாவை பொறுத்தவரை வளர் இளம்பெண்கள் அதிக அளவில் சத்துக் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள். 

வளர் இளம் பெண்கள் எடையை குறைப்பதை பற்றியே கவலைப்படுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எடுத்துக்கொள்ள வேண்டிய சராசரி உணவின் அளவைவிட குறைவான அளவில் உணவை எடுத்துக்கொண்டால் இரும்புச்சத்து, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். அதாவது, மாதவிலக்கு சமயத்தில் இரும்புச்சத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். 

ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது மண் பாண்ட சமையல்

“மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.