Thursday, March 6, 2014

உடம்பின் கால அட்டவணை



நம் உடலுக்கு கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாக பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை. இதோ கால அட்டவணை

1. விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம் இந்த நேரத்தில் தியானம்.மூச்சுப்பயிற்சி செய்தால் ஆயள் நீடிக்கும்.

2. காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில்  காலைக் கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.


3. காலை 7 முதல் 9 வரை வயிற்றி;ன் நேரம்; இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

4. காலை  9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம் வயிற்றில் விழும் உணவைச செரிக்கச் செய்யும் நேரம் இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

5. காலை 11 முதல் 1 வரை இதயத்திக் நேரம் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் சத்தமாகப் பேசுதல் படபடத்தல் கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

6. பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். முpதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

7. பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

8. மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம் தியானம். இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

9. இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம் பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

10. இரவு 9 முதல் 11 வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம் அமைதியாக உறங்கலாம்.

11. இரவு 11 முதல் 1 வரை பித்தப்பை நேரம் அவசியம் உறங்க வேண்டும்.

12. இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம் ரத்தத்தை கல்லீரல் சுத்தப் படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.