Wednesday, May 13, 2015

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள்

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள் 


 உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப்  பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான, அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துப முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல் வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.


  உடலையும் மனதையும் காக்க வேண்டும் என்பதை திருமூலர் பெருமான் திருமந்திரத்தில் பின்வரும் பாடலை கூறுகிறார்.

  “உடம்பாற் அழியின் உயிராற் அழிவர்
   திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
   உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

உடலும் உயிரும் நோய் வராமல் நீண்ட நாள் நல்ல நிலையிலட வாழ வேண்டுமானால் யோகம் செய்ய வேண்டும். மனித உடல்தான் இறைவன் குடி கொண்டிருக்கும் கோயில், உடம்பிலேதான் பரம் பொருள் இருக்கிறான். உடல் அழிந்தால் உயிரும் அழிந்து விடும். அதனால் நிலையான மெய்ஞான சித்தியை பெற முடியாது. ஊடலை பாதுகாத்தால் தான் உயிரை பாதுகாக்க முடியும். அதற்கு யோகாசனமே நல்வழியாகும்.

பல்வேறு யோகசனங்களில் ஒன்றான ‘உஷ்ட்ராசனத்தை’ பற்றி நாம் பார்ப்போம்.

உஷ்ட்ராசனத்திற்கான பெயர் காரணம்:-

‘உஷ்ட்ரம்’ என்றால் ஒட்டகம். இவ்வாசனத்தை செய்யும் போது ஒட்டகத்தைப் போன்று தோற்றம் தருவதால் இதற்கு ‘உஷ்ட்ராசனம்’ என்று பெயர்.

உஷ்ட்ராசனம் செய்வதற்கான விதிகள்:-

1. ஆண், பெண் பாகுபாடின்றி வயது வேறுபாடின்றி இளையோர், பெரியோர் வரை அவர்களது உடல் அமைப்பிற்க்கு ஏற்றவாறு இவ்வாசனத்தை செய்யலாம்.
2. மலசலம் கழித்த பின்னரே செய்ய வேண்டும்.
3.உணவு உண்டபின் ஆசனம் செய்யலாகாது.
4. இவ்வாசனம் செய்யும் போது உடலில் வலி ஏற்பட்டால்          ஆசனம் செய்வதை நிறுத்தி விட வேண்டும்
5. எந்த ஒரு உறுப்பும் இறுக்கம் இன்றி தசைகள் தளர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
6. பயிற்சியின் போது வாயினால் மூச்சு விடக்கூடாது.
7. உடல் குறுகுதலை தவிர்க்க வேண்டும்.
8. ஆடைகள் தளர்ச்சியாக இருத்தல் நல்லது.
9. ஆசனம் நிதானமாகவும், மெதுவாகவும், படிப்படியாகவும் செய்ய வேண்டும்.

ஆசனம் செய்வதற்கான நேரம்:-

பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4 மணிமுதல் 6 மணி வரை செய்யலாம்.

ஆசனம் செய்ய ஏற்ற இடம்:-
  •   காற்றோட்டமான மேடு, பள்ளம் இல்லாத தூய்மையான சமதளத்தில் செய்ய வேண்டும்.
  •   பசுமை காடுகள், புல்வெளிகள், ஏரிக்கரையோரங்களில் அமர்ந்தும் செய்யலாம்.
ஆசனம் செய்ய பயன்படுத்தும் விரிப்புகள்:-
  •   வெண்ணிற கம்பளம்
  •   தூய்மையான கோரைப்பாய்
  •   மனதிற்கு பிடித்த நிறமுள்ள விரிப்புகள்
ஆசனம் செய்ய கூடாதவர்கள்:-
  •   இதள நோயாளிகள், அதிகுருதி அழுத்தம் உள்ளவர்கள் செய்யக்கூடாது.
  •  முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்யக்கூடாது.
  •   கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.


உஷ்ட்ராசனம் செய்யும் முறை:-

 1.முதலில் தரையில் முட்டி போட்டு நிற்கவும்.
 அதாவது முழங்கால்களும், கணுக்கால்களும் தரையில்படுமாறு நிற்கவும்.
3.இரு கால்பாதங்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
4.இரு கால்பாதங்களையும் ஒன்றோன்டொன்று சேர்த்து வைக்கவும்.
5.மெதுவாக மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொண்டே பின்பக்கமாக சாய வேண்டும்.
6.இடது உள்ளங்கையை இடது கால் பாதத்திலும், வலது உள்ளங்கையை வலது கால் பாதத்திலும் வைக்கவும்.
7.முதுகை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக வளைக்கவும்.
8.தலையை பின்பக்கமாக தொங்கவிட வேண்டும்.
9.தலையின் உச்சிப்பகுதி தரையை பார்த்தபடி இருத்தல் சிறப்பானது.
10.தொடைப்பகுதி உள்பக்கமாக சாய்ந்திருக்கக் கூடாது. தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும்.
11.இந்த நிலையில் சுமார் 30 விநாடிகள் இருந்த பின் சாதாரண நிலையில் மூச்சு விடவும்.
12.பிறகு கைகளை ஒவ்வொன்றாக மேலே எடுத்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

உஷ்ட்ராசனம் செய்வதால் ஏற்படும் பயன்கள்:-

1.முதுகு தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானது ஆகும்.
2.கல்லீரல், தண்டை உறுதி செய்வதில் மிக முக்கியமானது ஆகும்.
3.எளிதில் உணவுகளை சீரணிக்க செய்கிறது.
4.குடல் இறக்கத்தை சரிசெய்வது உணவு செரிமானத்தை சீராக்குகிறது.
5.கூன் விழுந்த முதுகை நேராக்க உதவுகிறது.
6.கணையத்தின் சுரப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
7.தோள் மூட்டுகளில் உள்ள குறைகளை தீர்க்க உதவுகிறது.
8.கண்களில் பார்வை திறனை அதிகரிக்கிறது.
9.இதயத்தை வன்மையடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
10.மலச்சிக்கலை நீக்குகிறது.
11.கழுத்துப்பகுதி தசைகளை வலுப்படுத்துகிறது.
12.மார்பு பகுதியை விரிவடையச் செய்து மார்பு பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது.
13.தொடைப்பகுதி தசைகளை வன்மையடையச் செய்கிறது.
14.சிறுநீரக பாதிப்புகளை சீராக்குகிறது.
15.நரம்பு தளர்ச்சியை நீக்கி புத்துணர்வு அளிக்கிறது.
16.ஞாபக சக்தி, மன ஒருமைப்பாடு இவற்றை அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment