Sunday, October 27, 2013

மூலிகை மருத்துவம் - வசம்பின் மருத்துவ குணம்

நமது தமிழ்நாட்டில் மருந்துப் பொருளான வசம்பை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள் குழந்தைகள் நோய்க்கு சஞ்சீவியாகத் துணை நிற்பது இதுவே. அதனை பிள்ளை வளர்ப்பான் என்றே செல்லப் பெயரிட்டு அழைப்பர் மக்கள்.

முனிவர்கள் சித்தர்களும் பெயரைச் சொல்லாமல் இம்மருந்தை வழங்குவார்கள் பாட்டி வைத்தியத்தில் இதன் பெயரே பேர் சொல்லாதது ஆகும். இது பிறந்த குழந்மைக்கு உரை மருந்து என்பதால் திருஷ்டி காரணமாகவும், பெயர் சொன்னால் மருந்து வேலை செய்யாது என்ற மரபு உள்ளதாலும் இதைப் பெயர் சொல்லி வழங்கக்கூடாது.



வசம்பின் மருத்துவ குணம்:

  • வசம்பை நல்ல நீரில் ஊறவைத்துத் துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் குழந்தை, பெரியவர்கள் எல்லோருக்கும் வயிற்றுவலி எட்டிப்பார்க்காது.
  • சிறிது வெந்தயத்துடன் ஒரு துண்டு வசம்பு  இட்டு ஊற வைத்து விழுதாக அரைத்து சாப்பிட்டால் சாதாரண அலர்ஜி குணமாகும்.
  • வசம்புடன் நீர் தெளித்து மையாக அரைத்து அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து, உடம்பில் பூசி கால்மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் சரும நோய் நீங்கும்.
  • வசம்புடன் கொஞ்சம் கருப்பட்டி வைத்து பொடித்து காலை மாலை என தின்றுவர நரம்புத் தளர்ச்சி மறைந்து நலம் கிடைக்கும்.
  • சிறிது சீரகத்துடன் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகிவர வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.
  • வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன் வெளிப்படும்.
  • வசம்பு, மிறகு, சுக்கு இம்மூன்றையும் கரகரவென அரைத்திட்டு கஷாயம் செய்து குடித்து வல கை, கால் மூட்டுவலி நீங்கும்.
  • வசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்ற வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.
  • வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகுஈ சீரகம் இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து, பனங்கற்கண்டு சேர்தது குடித்துவர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
  • ஒரு துண்டு வசம்ப, இரண்மு வெள்ளைப் பூண்டு பற்கள் இவற்றை நசுக்கி சிறிது தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி, ஆறியதும் காதில் சில துளிகள் விட்டுவர காதுவலி மாறும். 
  • சிறிது வசம்புத்தூள், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து நீரைக் கொதிக்க வைத்து எடுக்கவும். இந்த குடிநீரைப் பருகி வர அஜீரணம் அகலும், பசி, ருசி உண்டாகும்.
  • நுங்குடன் வசம்புத்தூள் தூவி தின்றால், சீதபேதி குணமாகும்.
  • வசம்புடன் வல்லாரை வைத்து அரைத்து தேனில் சேர்த்து தின்றுவர ஞாபகசக்தி அதிகமாகும்.
  • வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசிவர விஷம் முறியும். கடுப்ப முற்றிலும் நீங்கும்.
  • வசம்பு, பெருங்காயம் இவைகளுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து வேனற்கட்டி மீது தடவிவர சீகு வெளிப்பட்டு விரைவில் குணமாகும். 
  • சிறிது வசம்புடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்ற இரண்டு தம்ளர் மோர் குடித்தால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
  • வசம்பு, வெந்தயம், கிராம்பு, மிளகு, துளசி இலை இவைகளை இட்டு கஷாயம் செய்து தினம் மூன்றுவேளை பருகி வர குற்றிருமல் குணமாகும்.
  • தேங்காய் எண்ணெயில் வசம்பை பொடித்திட்டு, குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும்.
  • செவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத்தூளைச் சேர்த்து சாப்பிட்டுவர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
  • வசம்பைப் பொடித்து வீட்டு வாசற்பக்கம் தூவி வந்தால் விஷப்பிராணிகள் அந்தப் பக்கம் வராது.
  • வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்தால் கடும் வாந்தி நிற்கும்.
  • சிறுநீர்ப் பையில் கற்களைக் கரைக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.
  • இரண்டு வெற்றிலையுடன் சிறிது வசம்பு வைத்து மென்று தின்று, இரண்டு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் உப்புசம் குணமாகும்.
  • சிறுதுண்டு வசம்பு, சிறுதுண்டு மஞ்சளுடன் நீர் தெளித்து மையாக அரைத்து பொன்னுக்கு வீங்கி வீக்கத்தில் கழுத்துப் பக்கம் பற்றுபோட வீக்கம் நன்கு குணமாகும்.

No comments:

Post a Comment