Saturday, October 26, 2013

உடல் குளுமைக்கு ஒர் அழகான யோசனை



  • சிறிதளவு துளவி இலைகளை எடுத்து எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து முகப்பரு மேல் போட்டு வர பருக்கள் மாறும்.
  • ஒரு ஜாதிக்காய் எடுத்து உரைத்து குழந்தைகளின் நெஞ்சில் பற்றுப்போட சளி தீரும்
  • தொடை இடுக்கு, மர்ம இடங்களில் அரிப்பு, புண் ஏற்பட்டால் சிறிதளவு குங்குமப்பூவை எடுத்து தேன் விட்டு அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண் ஆறும்
  • வெந்தயத்தை பாலில் ஊறவைத்து, அரைத்து தலையில் தேய்த்துக் குளித்துவர பேன்கள் ஒழித்து விடும்.
  • வாயில் அதிகமான உமிழ்நீர் சுரந்து கொண்டிருந்தால் சிறிதளவு சீரகத்தை எடுத்து சர்க்கரை கலந்து சாப்பிட உமிழ்நீர் சுரப்பது நிற்கும்.
  • ஆப்பிள் பழச்சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மது ஆசை மெதுவாகக் குறையும்
  • சிறிதளவு துளசி இலைகளை எடுத்து இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். அதோடு சம அளவு வெற்றிலைச் சாற்றை கலந்து உடம்பில் ஏற்பட்ட கரும்படை மேல் பூசிவர படை மாறும்.
  • ஒரு கரண்டி வெங்காயச்சாறு, ஒரு கரண்டி பூண்டுச்சாறு கலந்து அடிக்கடி அருந்திவர புகை பிடித்ததால் ஏற்படும் தீமைகள் மாறும்.
  • இரண்டு மிளகை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்துப் பூச தலைவலி தீரும்
  • மாதுளம்பூக்களை இடித்துச் சாறு எடுத்து அதோடு தேன கலந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு நீங்கும்.


No comments:

Post a Comment