Tuesday, October 15, 2013

பழங்களின் மருத்துவம் - தாய்ப்பால் சுரக்க முலாம் பழம்

குளிர்ச்சியைத்தரும் பழங்கள் முலாம் பழம் 

பழங்கள் நேரடியாக சத்துக்கள் உடலுக்குக் கொடுக்கக்கூடியது உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களை கொடுப்பது பழங்களே, முலாம் பழத்தின் மருத்துவத் தன்மை பற்றி அறிந்து கொள்வோம். முலாம் பழம் சிறிய பூசணிக்காய போல் பழுப்பு நிறத்துடன் இருக்கும். கோடைக் காலத்தில் அபரிமிதமாக அப்பழம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் பழங்களில் இதுவும் ஒன்று. அதில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து உள்ளன. அவை வெள்ளரி இனத்தைச் சார்ந்தது.


தந்தம் விழுந்திடுமே தாது மெலிந்திடுமே
விந்தைமிகுங் காந்தி விலகிடுமோ - சந்ததமும்
வாதம் மிகுந்திடுமே வந்துகபஞ் சேர்ந்திடுமே 
ஒதுகுமட் டிக்காயல் உன்    - அகத்தியர் குணபாடம்

குளிர்ச்சியுண்டாக்க:
அதிக வெயிலிலும், உஷ்ணம் தரக்கூடிய இடங்களில் வேரை செய்பவர்களின் உடலானது அதிக உஷ்ணத்தினால் பாதிக்கப்படும். இந்த சூட்டை தணிக்க முலாம் பழத்தை காரல, மாலை இருவேளையும் சாப்பிட்டு வரலாம். கோடைக் காலங்களில் ஜீஸ் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

சிறுநீர்ப் பெருக்கி:

மனித உடலானது சீராக இயங்க இரத்த ஒட்டம் நன்றாக இருக்க வேண்டும். சாதாரணமாக மனிதனுடைய சிறுநீரகம் ஒரு நாளைக்கு 160 லிட்டர் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதில் 1 முதல் 11ஃ2 லிட்டர் வரை சிறுநீரகம்வெளியேற்றுகிறது. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படும். உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும்.இக்குறையைப்போக்க முலாம் பழத்தை ஜீஸ் செய்து அடிக்கடி அருந்தி வந்தால் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு குணமாகும்.

தாய்ப்பால் சுரக்க:

தற்போது நிறைய தாய்மார்கள் தங்கள் பிள்ளைக்குத் தேவையான தாய்ப்பால் சுரப்பின்றி அவதியுறுகிறார்கள். எத்தனையோ மருந்து சாப்பிட்டும் தாய்ப்பால் சுரக்காதவர்கள் முலாம் பழம் மூலம் சுரக்கச் செய்யலாம்.
முலாம் பழத்தை தினசரி காலைஈ மாலை என இருவேளையும் ஜீஸாகவோ அல்லது பழமாகவோ சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

வாயுத் தொல்லை நீங்க:

வாயுத் தொல்லை இருந்தாலே சரியாக சாப்பிட முடியாது பசி எடுக்காது. வாய்ப்புண், குடல்புண், உண்டாகும். அந்த வாயுத்தொல்லை நீங்க முலாம்பழம் சிறந்த மருந்து.

மலச்சிக்கல் தீர:

மலச்சிக்கல் தவிப்பவர்கள் முலாம் பழத்தின் துண்டுகளை மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட மலங்களை வெளியேற்றும். மலக்கசடுகள் நீங்கும்.

உடல் பலமடைய:

உடல் பலவீனமடைந்தவர்கள், நோயின் தாக்கத்திலிருந்து மீண்டவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக காணப்படும். அதுபோல் சிலர் நோஞ்சானாக காணப்படுவார்கள். இவர்கள் முலாம் பழத்தை ஜீஸ் செய்து அதனுடக் தேவையான அளவு சர்க்கரை கலந்து மதிய உணவுக்குப்பின் அருந்தி வந்தால் உடல் பலமடையும்.

இரத்த விருத்திக்கு:


உடலில் இரத்த  ஒட்டம் சீராக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும் இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பதன் மூலம் இரத்தம் அசுத்தமமைகிறது. இந்த பித்த நீரினை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு. முலாம் பழத்தை ஜீஸ் செய்து அருந்தினால் இரத்தம் விருத்தியாகும்.

பெண்களுக்கு:

கர்ப்பப் பை வலுவில்லாத பெண்கள் முலாம் பழத்தை கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பி;ட்டு வ்நதால் கருப்பை பலம் பெறும்.
வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் இந்தப் பழத்தை அடிக்கடி வாங்கி உண்டு பயனடையலாமே.

No comments:

Post a Comment