Friday, October 4, 2013

நாளும் நலம் தரும் நெய்:

Ghee
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெயயின் பங்கு அதிகம். நெய்களுள் பசுநெய் மிகவும் சிறந்தது.  தற்போது பசுநெய் கிடைப்பது அரிது.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகமாக இருந்து வந்துள்ளது. மருத்துவக்குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களில் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.


மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

நெய்யில்லா உண்டி பாழ்:

என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகிறது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து ஆறு அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.
இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும்போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவக் குணங்கள் அதிகம் உள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட:

நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ்லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரஸ் நோய்களை தடுக்கிறது.
அதுபோல் ஓமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்னளர்.

இது மூளைக்கு சிறந்த டானிக் . நெய்யில்

Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic acid - 3% உள்ளது

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துக்கொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி:

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும்போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக்கொள்ளலாம்.
நெய் சேர்த்து பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதன் தன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

1. ஞாபக சக்தியைத் தூண்டும்.
2. சரும பளபளப்பைக் கொடுக்கும்.
3. கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய:

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்துவிடுவார்கள் கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்குக் காரணம் உடலில் சத்தின்மையே .
 இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக:

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும் அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் சீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கிவிடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும். உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும். மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப் பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, உருவித நாற்றம் வீசும்.
இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உடபுறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன் சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத்  தூண்டும்.

மூல நோயின் தாக்கம் குறைய:

அஜீரணகட கோளாறாலும் வாயுவின் சீற்றத்தாலும் மூலப்பகுதி தாக்கப்படுகிறது. இதனால்   மூலத்தில் புண் உருவாகிறது. இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு இடத்தில் அமரவும் முடியாமல் நீண்ட பயணம் செய்ய முடியாமல் அவதியுறுவார்கள்.
இவர்கள் நெய்யை சூடாக்கி அதனுடன் கறிவேப்பிலையை சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கிஈ மூல நோயின் தாக்கத்தைக் குறைக்கும். மேலும், இரத்த மூலம் மூலக் கடுப்பு, மூல எரிச்சல் நீங்கும்.

இரத்த சோகை நீங்க:

இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் பலகோடிகளாக உள்ளது. இரத்த சோகையைப் போக்கி இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க நெய் சிறந்த மருந்து. தினமும் மதிய உணவில் நெய் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை நீங்கும்.

சருமம் பளபளக்க:

வறண்; சருமம் கொண்டவர்கள் உணவில் நெய்யை சேர்த்து வந்தால் வறண்ட சருமம் பளபளக்கும்.

கண்களைக் காக்க:

இன்றைய சூழ்நிலையில் கண்களுக்குத்தான் அதிக வேளைப்பளு கொடுக்கின்றனர். சில அதிக வேலைப்பளு கொடுக்கின்றனா. சில சமயங்களில் இரவு நேரங்களில் கண்விழித்து வேலை செய்பவர்களின் கண் நரம்புகள் சூடாகி நீர்கோர்த்து கண்ணில் படலம் உருவாக ஆரம்பிக்கும். இதனால் இள வயதிலேயே எழுத்துக்களைப் படிக்க கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

கண் நரம்புகளின் சூட்டைக் குறைத்து, கண்களுக்கு புத்துணர்வு கொடுக்க நெய்யை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

பூப்பெய்திய பெண்களுக்கு:

 பூப்பெய்திய பெண்களுக்கு தினமும் உணவில் நெய் சேர்த்து கொடுத்து வந்தால், உடல் பலம்பெறும். புத்துணர்வுடன் திகழ்வார்கள். மாத விலக்கின்போது உண்டாகும் வலிகள் மற்றும் உபாதைகள் குறையும்.

சளி பிடிப்பது குறைய:

 அடிக்கடி சளிபிடித்து அவதியுறுபவர்கள் இருமலின் தாக்கத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் நெய்யுடன் நல்லெண்ணெய் கலந்து அதில் விளக்கேற்றி. அந்த வாசனையை முகர்ந்தால் சுவாசம் சீராகும். இருமல் குறையும். அடிக்கடி சளி பிடிப்பதும் குறையும். இதனாலேயே வீட்டில் நெய்யும், நல்லெண்ணெய்யும் சேர்த்து பூஜை அறையில் விளக்கேற்றச் சொல்வார்கள். இதன் மூலம் ஆன்மீகத்தில் மருத்துவமும் இருப்பமை அறியலாம்.
ஆங்கில் மருத்துவர்கள், நெய்யில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய், இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உணவில் நெய்யை சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள்.

 நெய்யை அளவுடன் சேர்த்து ஆரோக்கியத்தையும் ஆயுளையும் பெருக்குவோம்.

No comments:

Post a Comment