Friday, October 4, 2013

வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில முளைக் கீரை

 சிறுவர் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கு ஏற்ற கீரை முளைக்கீரை மட்டுமே.
Amaranthus blitum

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் இந்தக் கீரை முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.  அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய்களைக்கூட குணப்படு;த்தக்கூடியது. இதன் சுபாவம் குளிர்ச்சியானது.

சித்தர் பாடல்:

           தளர்ந்த வர்க்கும் பாலருக்கும் தக்கவய தோர்க்கும்
          இளங்கீரை நாவுக் கிதமாம் - கிளம்பு
                                                                   சுரகாசம் போக்கு தொடர்பசி யுண்டாக்கும்
                                                                   பிரகாச மாயெடுத்துப் பேசு               (அகத்தியர் குணபாடம்)
முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

1. முளைக் கீரைஈ அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்
2. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கரந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.
3. முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
4. முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசிpயன்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.
5. முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.
6. முளைக் கீரையைத் தொடர்ச்து 40 நாள்களுக்குத் குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்
7. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
8. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.
9. முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு உண்டாகும்.
10. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்

முளைக்கீரையில் அடங்கியுள்ள சத்துக்ள்:

100 கிராம் முளைக்கீரையில்

சுண்ணாம்புச் சத்து - 400 மி.கி
மெக்னீசியம்      - 250 மி.கி
ஆக்ஸாலிக் அமிலம் - 770 மி.கி
மணிச்சத்து        - 80.5 மி.கி
இரும்புச் சத்து     - 26.0 மி.கி
சோடியம்          - 230 மி.கி
பொட்டாசியம்       - 340 மி.கி
தாமிரச்சத்து        - 0.33 மி.கி
கந்தகச் சத்து      - 60 மி.கி
குளோரின் சத்து    - 85 மி.கி
தயாமின்          - 0.20 மி.கி
ரைபோஃபிளேவின்   - 0.10 மி.கி
நிகோடினிக் அமிலம் - 1;0 மிகி
வைட்டமின "ஏ"    - 9000 ஐரு (அனைத்துலக அலகு)
வைட்டமின் "சி"    - 98 மி.கி

இவ்வளவு மருத்துவப் பயன்கள் கொண்ட இக்கீரையை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்குத்தான் பெரும் நஷ்டம் என்பதை உணர வேண்டும்.
இக்கீரையில் வைட்டமின் ஏ, பி, பி 1, பி 2, சி நிரம்பியுள்ளன. மேலும் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மணிச்சத்து, தாதுஉப்புகள் என உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் கலந்துள்ளன.
சாப்பிடும் பக்குவம் வந்த ஏழு, எட்டு மாத குழந்தைகளுக்கு இக்கீரையை நன்கு மசியல் செய்து, ஊட்டிவந்தால் மூலை வளர்ச்சி நன்கு பெருகும். அறிவில் ஓங்கி வளருவார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்தை தரும் இக்கீரையை நமது உணவில் அவ்வப்போது இடம்பெறச் செய்வோம். வலுவான உடலைப் பெறுவோம்.

No comments:

Post a Comment