பன்னீர் கட்லெட்
தேவையான பொருட்கள்:-
- எண்ணெய்
- குடமிளகாய் - 3 கலர்
- சீரகம்
- ப.மிளகாய்
- கறிவேப்பிலை
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- கரமசாலா தூள்
- பன்னீர்
- சாதம்
- கொத்தமல்லி
- மைதா
- பிராட் தூள்
செய்முறை:-
வாணலில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் சிறுசாக கட்பண்ண மூன்று வகையான குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். பின்பு பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்பு தூள் வகைகளை தேவையான அளவு சேர்த்து வதக்கவும். அதனுடன் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நேரம் கலக்கவும். (கெட்டியாக வரும் வரை கலக்கக்கூடாது) பின்பு சாதம் நன்றாக மசித்து சேர்த்து கலக்கி வேறு ஒரு பவுலில் எடுத்துக்கொள்ளவும் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து மசித்து கொள்ளவும். பின்பு மைதாவை கரைத்துக்கொள்ளவும் தண்ணீராக வைத்துக்கொள்ளவும். பின்பு பிராட் தூளை எடுத்துக்கொள்ளவும். மசித்த கலவையை உருண்டையாக உருட்டவும். பின்பு கட்லெட் போல் செய்துக்கொள்ளவும். மைதா கலவையில் போட்டு பின்பு பிராட் தூளில் போட்டு கட்லெட்டை சூடான எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் ரெடி
No comments:
Post a Comment