40 வயதுக்குப்
பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்சனைகளை சரி செய்து, பழைய
தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான். அதனால்தான்,
40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை
மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து, முதுமைத்தோற்றம்
தெரிகிறது.
எலாஸ்டின்,
கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம்
உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும்
கோடுகளும் இன்னும்
சற்று ஆழமாகத் தெரியும். 50 வயதில்
சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும்.
மெனோபாஸ்
காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில் நிகழும்
ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப்
பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த
வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள். இளமையில்
இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை
காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப்
போவதுடன், நீண்ட காலம் இளமைத் தோற்றம்
தக்க வைக்கப்படுகிறது.
அதற்கு
என்னவெல்லாம் செய்ய வேண்டும்? தினமும்
சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க
வேண்டும். வயதாக ஆக கொழுப்பு
உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள், மீன்,
காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க
வேண்டும்.
உப்பையும்
சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை
அதிகம் சேர்த்துக்
கொள்ளலாம். மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க
சோயா உதவும்.வால்நட் மற்றும்
பிரேசில் நட், பாதாம் ஆகியவை
இளமைக்கு உதவக்கூடியவை.
தக்காளி,
பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை,
மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி
ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க்
சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.
No comments:
Post a Comment