ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக
ஆஸ்துமா,சளி,இருமல் குணமாக
- கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.
- எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்
- கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்
- கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்
- கபம் குணமாக:- கருந்துளசி இல்லை சாறு பிழிந்து இரண்டு வேலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்
- கபம் நீங்க:- சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.
- கபம் வெளியாக: சிறுகுறிஞ்சா வேர் போடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்
- சகல பிணி, சகோரமும் தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
- ஜலதோஷம் நீங்க:- துளசி ரசம், இஞ்சி ரசம் பருகலாம்.
- ஆஸ்துமா தீர:- நொச்சி இல்லை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்
- சளி தீர:- நத்தை சூரி இலை சாறை 15 மி.லி காலை மாலை சாப்பிடலாம்
- சளியை அகற்ற:- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்
- மார்பு சளியை நீங்க:- பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை துவையல் சுடுசோறு நெய்யில் உண்ணலாம்.
- சளி சுரம் நீங்க:- முசுமுசுக்கு இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.
- இருமல் நிற்க:- ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்
- காசம் :- ஆடாதொடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து பருகலாம்
- இளைப்பு, இருமல், குமமாக:- விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
- காசம் இறைப்பு நீங்க:- கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
- இருமல் குணமாக:- வெந்தையக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்.
- வரட்டு இருமல் குணமாக :- மிளகுடன் பொரிக்கடலை சேர்த்து பொடியாக்கி ஒரு சிட்டிகை என மூன்று வேலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்
- சளி தேக்கம் நீங்க:- வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடிக்கவும்.
- காச நோய்:- தினமும் அரிவேல்லிக்காய் சாப்பிடவும்.
- நெஞ்சு சளி குணமாக:- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
- காச நோய் தீர:- பசுந்தயிர் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்
- இருமல் குணமாக:- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து பருகவும்
- மார்பு சளி:- இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பாய் மிட்டாயை சாப்பிடவும்
- ஆஸ்துமா, மார்பு சளி தீர:- சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து பருகலாம்.
No comments:
Post a Comment