Saturday, November 9, 2013

குழந்தையின் வாயுத்தொல்லை நீங்க சில பாட்டி வைத்தியம்

வாயுத்தொல்லை என்பது பிறக்கும் குழந்தை முதல் பெரியோர் வரை இருக்கும். பிறந்த குழந்தைக்கு எப்போதும் தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையானது சிலசமயம் வாயுத்தொல்லை
அல்லது மலச்சிக்கல் அல்லது வயிற்றுக்கடுப்பு போன்றவற்றால் அவதிப்படும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது வளர்ச்சியில் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். அதேப் போல் ஒரு சில பாட்டி வைத்தியமும் இருக்கிறது, அது என்னவென்று படித்துப் பாருங்களேன்...


 1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப் பின், குழந்தையை கையில் தாங்கி அதன் முதுகில் மெதுவாக தடவி விடவும். இதனை தொடர்ந்து 1-2 நிமிடம் வரை அல்லது குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை செய்தால், குழந்தைக்கு வாயுத்தொல்லையானது இருக்காது.

2. வாயுத்தொல்லை நீங்க குழந்தையின் வயிற்றை சற்று தேய்க்க வேண்டும். அதாவது குழந்தையை படுக்க வைத்து அதன் வயிற்றில் விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வாயுவானது வெளியேறிவிடும்.

3. எப்போது குழந்தையானது வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறதோ, அப்போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீரானது ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் தொண்டையானது மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வாறு குளிக்கவும் வைத்தால், உடலில் உள்ள வாயு நிறைந்திருக்கும் பாக்கெட்டானது அந்த வெதுவெதுப்பான நீரினால் வெடித்து, வாயுவை வெளியேற்றும்.

 4. தினமும் குழந்தையின் கை மற்றும் கால்களுக்கு ஏதேனும் உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது குழந்தையின் கால்களை கைகளால் தாங்கி, சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாயுவானது எளிதாக வெளியேறிவிடும்.

5. குழந்தையுடன் விளையாட வேண்டும். அவ்வாறு குழந்தையை விளையாட வைப்பதன் மூலமும் வாயுவானது வெளியேறும். மேலும் குழந்தையானது உட்கார்ந்து, தவழ்ந்து விளையாடுவதன் மூலமும் வாயுவானது நீங்கிவிடும். இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வராமல் தடுக்கலாம். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது காற்றானது குழந்தையின் வாயினுள் செல்லாமல் கொடுக்க வேண்டும். ஏனெனில் காற்றானது குழந்தையின் உடலினுள் செல்வதாலும் வாயுத் தொல்லை ஏற்படுத்தும்.

மூலிகை 

No comments:

Post a Comment