பெரியவர்கள்,
இளையவர்கள் என்று எந்தப் பாகுபாடும்
இல்லாமல் பச்சிளங்குழந்தைகளின் சருமத்துக்கும் கூட பளபளப்பு தந்து
பாதுகாப்பு வளையத்தையும் போனஸாக வழங்குகிறது பயத்தம்
பருப்பு!
இதோ
இந்த பயத்தம் பருப்பு பேஸ்
பேக்கைப் போட்டுப் பாருங்கள்... `ஆஹா... இது என்
முகம் தானா?'' என்று ஆனந்த
அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.
தோலுடன் முழு பச்சை பயறு
- 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை இலை - 1 (நடு நரம்பை அகற்றி
விடவும்),
வேப்பிலை -1,
துளசி-4,
பூலான் கிழங்கு-1,
ரோஜா மொட்டு-2,
கசகசா - அரை சிட்டிகை.
|
இவற்றை
முந்தைய நாள் இரவே தயிரில்
ஊறவைத்து, மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக்
கொள்ளுங்கள்.
இதனுடன்,
கஸ்தூரி மஞ்சள் தூள் -1 சிட்டிகை
கலந்து கொள்ளலாம். குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த
பேக் போட்டு, பத்து நிமிடம்
கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி
செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது
அசந்து போவீர்கள்.
இதில்
சேர்க்கப்பட்டுள்ள
- எலுமிச்சை இலை முகத்தை `ப்ளீச்' ஆக்கும்.
- துளசி, தோலை மிருதுவாக்கும்.
- ரோஜா மொட்டு பளபளப்பு தரும்.
- வேப்பிலை பருக்களை ஒழிக்கும்.
- பூலான்கிழங்கு வாசனையை வழங்கும்.
- கஸ்தூரி மஞ்சள் மினுமினுப்பு தரும்.
No comments:
Post a Comment