Friday, August 28, 2015

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள் 


* கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.
* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.
* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.
* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
* பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.
* மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

* ஆப்பிள் மலச்சிக்கலைப் போக்கும்.
* திராட்சை இரத்த அழுத்தத்திற்கு நல்லது. ஈரல் சம்பந்தமான நோய் குணமாகும்.
* எலுமிச்சைப் பழம் உடல் சோர்வையும், மலச்சிக்கலையும்போக்கும்.
* செர்ரி பழம் கருப்பை வியாதிகளுக்கு நல்லது.
* மாதுளம் பழச்சாற்றில் பால் சேர்த்து சாப்பிட இரும்புச் சத்து கிடைக்கும். குடல் புழுக்கள் அழியும்.
* அன்னாசிப் பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
* நாவல் பழம் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.
* சாத்துக்குடி இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
* கமலாப்பழம் உடல் உஷ்ணத்தையும், பித்தக் கோளாறுகளையும் நீக்கும்.
* கொய்யாப்பழம் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. கல்லீரல் பலப்படும்.
* கோவைப்பழம் சாப்பிட்டால் பல்வலிகுணமாகும்.
* அத்திப்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

No comments:

Post a Comment