மணத்தக்காளி சூப்
தேவையான அளவு:-
- மணத்தக்காளி - அரை கட்டு
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- காய்ந்த மிளகாய் - 2
- மிளகு தூள் - சிறிது
- அரிசி ஊற வைத்த தண்ணீர் - 2 டம்பளர்
- எலுமிச்சை - அரை மூடி
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- பெருங்காயம் - தேவையான அளவு
- உளுந்து - தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும். உளுந்து, மிளகாய், வெங்காயம், பெருங்காய தூள், கறிவேப்பிலை, தக்காளி இவைகளை ஒவ்வொன்றாக போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்பு மணத்தக்காளி கீரையை போட்டு வதக்கவும். நன்கு வதங்கியவுடன் இவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அரிசியை கழுவினா 3 வது தண்ணீரை எடுத்துக்கொள்ளவும். அந்த தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் உப்பு, மிளகு தூள் இவற்றை சேர்த்து கலக்கி இறக்கவும். இறக்கியவுடன் எலுமிச்சை சாறு 5 சொட்டு விட்டு கலக்கியவுடன் மணத்தக்காளி சூப் தயார்.
No comments:
Post a Comment