பாகற்காய் சிப்ஸ்
- பெரிய பாகற்காய் - 4
- பெருங்காயத்தூள் - சிறதளவு
- கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- நசுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டேபில் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது. வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, பெருங்காயத்தூள். சிறிதளவு நீர் சேர்த்து பிசிறவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும். சூப்பரான பாகற்காய் சிப்ஸ் தயார்.
No comments:
Post a Comment