Wednesday, July 9, 2014

நோய்களுக்கு அருமருந்து வசம்பு


  • Add caption
    இது ஆற்றங்கரை போன்ற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இயற்கையிலேயே வளரும் ஒரு வகைப் பூண்டு இலைகள் ஒரு மீட்டர் நீளம் கூட இருக்கும். இதன் வேர் மஞ்சள் கிழங்கைப் போல் இருக்கும். நெருக்கமான கணுக்கள் உடைய வேர்தான் மருத்துவக் குணங்கள் நிரம்பியது. வசம்பு என்று வேரைத்தான் குறிப்பிடுவார்கள். அனைத்து நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கும். இது குழந்தைகளின் உடல் நலம் காப்பதில் சிறந்தது. அதனால் தான் இதைப் பிள்ளை வளர்த்தி என்று சொல்லுவார்கள். வசம்பின் மருத்துவக் குணங்களால் பட்டியலைப் பார்ப்போம்.

  •  இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வயிற்றுப் போக்கு போன்ற நோய்களுக்கு அருமருந்தாகத் திகழ்கிறது வசம்பு.



  •  வசம்பின் வேரும், அடிநிலமட்டத் தண்டும், இலை, பூ ஆகியவையும் பித்தப்பை, சிறுநீர்ப்பை கற்களைக் கரைத்திடும் மருந்தாகப் பயன்படுகிறது.

  

  •  வசம்புத் தாளை அரைத்து வெட்டுக் காயத்தின் மேல் கட்ட காயம் ஆறிவிடும்.

  

  •   வசம்பை சுட்டுத் தூளாக்கி சுக்கு தூளுடன் கலந்து வயிற்றில் பூசினால் உப்புசம் மாறும்.


  • பசியைத் தூண்டும்

  • வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும் தன்மை உண்டு

  • வாயுத்தொல்லை உடனே அகலும்

  • வசம்பைத் தீயில் சுட்டுக் கருக்கி, அதனைத் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைகளுக்குப் புகட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு, வயிற்றுப் பொருமல் , வலி ஆகியவை குணமாகும்

  • வசம்புத் தூளைத் தேனில் கலந்து சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஜீரணக் கோளாறுகள் உடனடியாக அகலும்

  • கால்நடைகளுக்கு வசம்புத் தூளும் மஞ்சள் தூளும் கலந்து கொடுத்தால் தொற்று நோய்கள் அண்டாது.


  • வசம்பு வேர் விஷ முறிவாகவும் பயன்படுகிறது



  •   நீரில் வசம்புத் தாள்களை சிறுசிறு துண்டுகளாக்கி போட்டு அரைமணி நேரம் கழித்து நீக்கிவிட்டு அந்த நீரில் குழந்தைகளை குளிப்பாட்டினால், தோல் நோய்கள் அண்டாது.

  

  •  சிறிதளவு வசம்புத் தூளை தேனில் குழைத்து குழந்தைகளுக்குத் தர, காய்ச்சல் குணமாகும். திடீர் வயிற்றுப் போக்கு நிற்கும்.

  

  •  நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் காலை, மாலை வேளைகளில் வசம்பைப் பொடியாக்கி, அரை ஸ்பூன் தூளுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர, 40 நாட்களில் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.



  •   வசம்பை சுட்டு உரைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டியதும் கால்களின் அடிப்பாகத்திலும் தொப்புளைச் சுற்றி தடவிவர எந்த நோயும் அண்டாது.

  

  •   ஒரு துண்டு வசம்பு, ஒரு துண்டு பனை மஞ்சள் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டையும் சேர்த்து அரைத்து பொன்னுக்கு வீங்கி எனப்படும் கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்கம் நோய்க்கு பற்றுப்போட விரைவில் குணமாகும்.



No comments:

Post a Comment