Wednesday, July 9, 2014

முகத்தில் வழியும் எண்ணெய்ப் பசை நீங்க...


  எண்ணெய்ப் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவு அல்லது பாசிப்பயிறு மாவு பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

  வெயிலில் சென்று வீடு திரும்பியதும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும்.

  மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.


  தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.

  வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தனத் தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும்.

  சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப்பசை நீங்கும்.

  பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.

No comments:

Post a Comment