Monday, October 14, 2013

கீரை மருத்துவம் - நாள் பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து புளியாரைக் கீரை

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத்தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும் உடலில் புது ரத்தம் ஊறவைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது.
Bot-Name: Oxalis corniculata

பித்த மயக்கமனும் பேருலகின் மானிடர்க்கு
நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
மூலம் கிராணியறும் மூல வுதிரமறுங்
கோலப் புளியாரைக்கு.          - அகத்தியர் குணபாடம்

வாத கப நோய்கள் குணமாகும் பித்தம் தணியும் மூலத்தில் உண்டாகும் மயக்கம், ரத்த மூலம் இரண்டும் தீரும்

தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடாது.


மருத்துவப் பயன்கள்:

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க:

புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்pபட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

உடல் சூடு நீங்க:
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.

பசி எடுக்க:
புளியாரைக் கீரையுடன், மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.

வாய்ப்புண். வயிற்றுப் புண் குணமாக:

புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டார் வாய்ப்புண்ஈ வயிற்றுப்புண் குணமாகும்.

காய்ச்சல் குணமாக:

புளியாரைக் கீரையை, மிளகு சேர்த்துக் கஷடியமாக்கிச் சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் சரியாகும்.

குடற்புண குணமாக:

புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் காய்ச்சுவதால் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுதிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.

வயிற்று கடுப்பு நீங்க:

புளியாரைக் கீரைச் சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.

பித்த நோய்:

புளியாரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

ரத்த மூலம்:

புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்த மூலம் சரியாகும்.

ஜீரண சக்தி அதிகரிக்க:

புளியாரைச் சாறில் ஓமத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

பிற மருந்துகள்:

வெள்ளை ஒழுக்கு குணமாக:

சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது அந்தரங்க உறுப்புகளில் இருந்து வெள்ளை நீர் ஒழுக்கு இருக்கும். அதனால் அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை உண்டாகி வேதனைப்படுத்தும், இந்தக் குறைபாடு உள்ளவர்கள், புளியாரைக் கீரைணை 15 நாள்களுக்கு (காலையில் மட்டும் ) சமைத்துச் சாப்பிட்டால் வெள்ளை ஒழுக்குப் பிரச்சனை தீரும்.

மர்மம் பகுதியில் புண்

ஆண்குறி மற்றும் பெண்குறியில் உள்ள புண்கள் உடனே குணமாக, புளியாரைக் கீரை மற்றும் புளியாரையில் செய்யப்படும் மருந்துகள் மிகச் சிறந்த பலனைத் தரும். இந்தக் கீரையை உணவாகச் சாப்பிடும்போது புளி சேர்க்கக் கூடாது.

No comments:

Post a Comment