Saturday, October 12, 2013

காது பாதுகாக்க 10 வழிகள்


1. காதில் சேரும் பிசின் போன்ற குரும்பியின் (வேக்ஸ்) வேலையே காதைப் பாதுகாப்பதுதான். நமது தாடை அசைவின்போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்க உண்டு. கண்ட பொருட்களையும் காதில்விட்டுக் குடைந்து அழுக்கை நீக்க முயற்சிக்கக் கூடாது. ஏனெனில் காதில் உள்ள செவிப்பறையில் (நயச னரசஅ) ஒடடை விழுந்து கேட்கும் திறனை இழக்கும் அபாயம் உண்டு. காதில் எண்ணெய் விடுவதும் தவறு. தேவைப்பட்டால் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மூலம் காதுகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.


2. காது வலி, காது அடைப்பு அல்லது காதில் இருந்மு திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது தலைக்குக் குளித்தல், நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால், காது மடலை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்புத் தொல்லையை நீக்க முடியும். தேவைப்பட்டால் மெல்லிய பருத்தித் துணி மூலம் சுத்தப்படுத்தலாம்.

3. காது குத்துவது என்பதை மென்மையான காது மடலில் (ear lobule) மட்டுமே செய்ய வேண்டும். காதின் குருத் தெலும்புப் பகுதியில் குத்துவதால் நோய்த் தொற்று ஏற்படுவதோடு காது சுருங்கிவிடவும் வாய்ப்பு உள்ளது.

4. எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தால், குழந்தையின் காதில் பிரச்சனை இருக்கலாம். பள்ளியில் கவனக் குறைவாகவும் மந்தமாகவும் குழந்தைகள் இருந்தால், காதில் நீர் கோத்து இருக்கலாம். மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகள், சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்கமலோ, பேச ஆரம்பிப்பதில் தாமதம்
காட்டினாலோ உடனே காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். காது கேட்கும் திறன் குறைந்த குழந்தைகளுக்கு ஆரம்பித்திலேயே ஒலிக் கருவியைப் (hearing aid) பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பழுதாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

5. நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள், பரம்பரையாகக் காது கேளாதோர் வழிவந்த குழந்தைகள், சிக்கலான பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள். பிறந்த உடனேயே மஞ்சள் காமாலையாலும் மூளைக் காய்ச்சலாலும் தாக்கப்படும் குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் காது, மூக்கு, தொண்டை நிபுணரைச் சந்திப்பது அவசியம்

6. பெருத்த ஒசை உடைய வெடிகளை வெடிப்பதும்ஈ ஸ்பீக்கரில் அலறும் இசையைக் கேட்பதும், காதருகே அறைவதும் காதுக்குத் தீங்கு. தொடர்ந்து செல்போனில் பேசுவதையும் ஒயாமல் இயர்போனில் பாட்டுக் கேட்பதையும் தவிர்க்கவும்.

7. காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில்விடுவதுதான் உடனடி முதல் உதவி.

8. தொடர்ந்து ஓசை எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அணிவது நல்லது. குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது காது கேட்கும் திறனை உரிய மருத்துவரிடம் இவர்கள் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

9. ஜலதோஷத்தின்போது மிகப் பலமாக மூக்கைச் சிந்தாதீர்கள். காதுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

10. சிலருக்கு எந்தக் காரணமும் இன்றிக் காது கேட்கும் திறன் திடீரெனப் பாதிக்கப்படலாம். இதற்கு திடீர் கேட்புத் திறன் இழப்பு (Sensorineural hearing loss) என்று பெயர். கால தாமதம் செய்யாமல் உடனடியாகக் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகிச் சிகிச்சை எடுத்தால், இழந்த கேட்கும் திறனை மீண்டும் பெறலாம்.

No comments:

Post a Comment