Friday, October 11, 2013

சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன பழங்கள் சாப்பிடலாம்.


இன்று உலக மக்கள் தொகையில் இந்ரியா இரண்டாயிமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகதி;க அதிகர்க்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துபொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குpறப்பாக தென்னிந்திய மக்களை அவரியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும். இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த கசோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப்ப படைக்கினறன. இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ரோய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் எணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற்பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்படே   நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லாச் சுரப்பி மண்டலம்தான. அதை ஆங்கிலத்தில் எ;ணடோகிரைன் சிஸ்டம் என அழைப்பார்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
இந்த ஹார்மோன்களின் சுரப்பானது வாத, பித்த கபத்தை பொறுத்தே அமைகின்றன. இந்த மூன்றில் எதனுடைய நிலையில் மாறுபாடு ஏற்பட்டாலும் முதலில் பாதிக்கப்படுவது ஹார்மோன்களே. வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு முக்கிய பங்கு வகிப்பது ஹார்மோன்கள் ஆகும். உடலுக்கு தேவையான சர்க்கரை அதாவது இன்சுலினை சுரக்கும் கணையம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்பட்டு நீரழிவு நோய் உருவாக காரணமாகிறது.

இந்த நீரழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம உணவு முறையே.

முறையான உணவு. தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் காய்கறிகள்:




கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசனி, புடலங்காய், வாழைத்தண்டு. காளிவிளவர், வெண்பூசணி, பாக்றகாய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்:

சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு.

கறிவேப்பிலை, தூதுவளைக் கீலை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்தக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லி கீரை இவற்றில் ஏராவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்பளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம். அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்க் காரர்களுக்கு உகந்த பழங்கள்:


  • சாத்துக்குடி - 1
  • ஆரஞ்சு - 2
  • ஆப்பிள் (தோலுடன்) - 1
  • கொய்யா (சிறியது) - 2
  • பேரிக்காய் (சிறியது) - 2
  • வெள்ளரிக்காய் - 2
  • அன்னாசிப்பழம் - 4 வளையங்கள்
  • தர்பூசணி - 1 துண்டு

மேல் சொன் பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம்.உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பச அல்லது தாகம் எடுத்தால். வெள்ளரி, அரிசிப்பொரி, மோர், (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை, உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.


  • எலுமிச்கை சாறு - 200 மி;லி
  • வாழைத்தண்டு சூப் - 200 மிலி
  • அருகம்புல் சூப் - 200 மிலி
  • நெல்லிக்காய் சாறு - 100 மிலி
  • கொத்தமல்லி சாறு - 100 மிலி
  • கறிவேப்பிலை சூப் - 100 மிலி

இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது.

எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.


  • முட்டை - 1 (வெள்னைக் கரு மட்டும்)
  • மீன் - 2 துண்டுகள்
  • கோழிக்கறி - 100 கிராம் (அவித்தது)


மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள இருக்கும்.

No comments:

Post a Comment