Friday, October 11, 2013

பூவின் மருத்துவம் - இளமைமைத் துடிப்புடன் வாழ ஒரிதழ் தாமரை


மேக வெட்டை நீங்க:

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரிதழ் தாமரை சமூரம், பச்சை கற்பூரம் கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேக வெட்டை தாக்கய பகுதிகளில் பூசி வந்தால் மேக வெட்டை தீரும். உடலில் உள்ள புண்களில் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

ஓரிதழ் தாமரைச் சூரணம்:

ஒhதழ் தாமரை இலையை நிழலில் உலர்த்தி பின் அந்த இலைகளை இடித்து பொடியாக்கி சூரணமாக்க வேண்டும்.
அந்த சூரணத்தை வேளைக்கு 1 கிராம் அளவு பாலில் காலைஈ மாலை என இரு வேளை உட்கொண்டு வந்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கைணை பெருக்கும். மற்றும் பெண்களுக்கு மகப்பேறு சமயத்தில் பாலிரன சுரக்கச் செய்யும்.


கண் வியாதிகளை குணமாக்க:

ஒரிதழ் தாமரை செடியின் சமூலத்தை நன்கு நிழலில் உலர்த்தி பின் கல் உரலில் இட்டு இடித்து அதை சுத்தமான நீரில் கலந்து கரைத்து பின் தெளி நீரை கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் அழற்சி ஆகிய நோய்களுக்கு வெளிப்பிரயோகமாக உபயோகிக்கலாம்.

பொடுகு மற்றும் தலைமுடி உதிரல் குறைய:

ஒரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து நீரில் கரைத்து கொதிக்க வைத்து, அந்த நீரை தலையில் தேய்த்து (அரை மணி நேரம்) ஊற வைத்து குளிக்க பொடுகு மற்றும் தரைமுடி உதிரல் குறையும்.

ண்குறிப் புண்ணுக்கு:

ஓரிதழ் தாமரை இலையை மோரில் அரைத்து நெல்லிக்காயளவு உள்ளுக்கு காலை, மாலை சாப்பிட ஆண்குறிப்புண் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக:

ஓரிதழ் தாமரை இலையை குடிநீரிட்டு கொடுக்க நீரழிவு நோய் குணமாகும்.

சிறு நீர்ப்பாதை தாபிதங்கள் குணமாக:

ஓரிதழ் தாமரை அலையை எடுத்து நான்கு டம்பளர் நீர் விட்டு கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்ட விட்டு பின் அதை வடிகட்டி ஆறவைத்து குடிக்க சிறுநீர்ப்பாதை தாபிதங்கள் குணமாகுதம்.

சுரத்தை கடித்து சுவாசத்தைப் போக்கி
யுரத்தை யுடலுகட குதவும் - பருத்தவுடல்
வாடாதனுதினமும் வைத்தடிக்கு மேகத்தை
யேடேக கோகனகமே."                 - தேரையர் வெண்பா

காய்ச்சல் குணமாக:

சுரக் காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கஷாயம் செய்கு அருந்தி வந்தால் சுரக் காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கும் இது அரு மருந்தாகும்.

தாது நஷ்டத்தைப் போக்க:

ஓரிதழ் தாமரை சமூலம், பாதாம் பருப்பு, பாதாம் பிசின், முந்திரி பருப்பு, வாதுமைப் பருப்பு, வாதுமை பிசின், முருங்கைப் பிசின், சாரப் பருப்பு, நெருஞ்சில் வித்து, நீர் முள்ளி விதை, அமுக்கிரா கிழங்கு முதலியவைகளை நிழலில் உலர்த்தி கல்லுரலில் இட்டு இடித்து சூரணமாக்கிக் கொள்ளவும்.
பின் அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி, பாலில் சர்க்கரை கலந்து பாகுபதம் வந்தவுடன் முன்பு பொடித்த சூரணத்தைக் கலந்து நன்கு கிண்டி பின் நெய் கலந்து கிளறவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி தேன் கலந்து கிளறவும்.
இந்த இலேகியத்தை நெல்லிக்காயளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை இரு வேளை உண்டு வந்தால் ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். விந்து அணுக்களின் எண்ணிக்கையை பெருக்கும். விந்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரிதழ் தாமரை லேகியம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இளம் வயது ஆண் பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும் போது விந்து வெளியேறும். காலையில் சிறுநீர் கழிக்கும் போது வெண்மையான திரவம் வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஒரிதழ் தாமரையின் சமூலத்தை தேன் அல்லது பசும்பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு வந்தால் தாது இழப்பிலிருந்து மீளலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடலுறவில் நாட்டமின்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து விடுகின்றனர். சிலர் இதனை மறைத்து வைத்து மன வேதனைக்கு ஆளாகி தவறான முடிவிற்கு வருகின்றனர். இவர்கள் ஒரிதழ் தாமரையின் சமூலத்தை பசும் பாலில் கலந்து தினமும் காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும் ஒரிதழ் தாமரையின் சமூலத்தை காயகல்பமாக சாப்பிட்டு வந்தால் என்றும் இளமைத் துடிப்புடன் வாழலாம்.

No comments:

Post a Comment