Thursday, July 10, 2014

நிலவேம்பு பொடி கஷாயம்

நிலவேம்பு பொடி

கஷாயம் தயாரிக்கும் முறை:

ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் பருகவேண்டும்.


எத்தனை வேளை, யாரெல்லாம் சாப்பிடலாம்? 


வாரம் இருமுறை (சனிக்கிழமை / புதன்கிழமை) இந்த கஷாயத்தை செய்து சாப்பிடவேண்டும்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரம் இருமுறை ஆண்டு முழுவதும் குடித்துவர, சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

காய்ச்சல் இருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 4 முறை குடிக்கலாம்.

பலன்கள்: 

  • மூட்டு வலி, உடல் வலி வராது. 
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். 
  • மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு, காய்ச்சல் மற்றும் இதரப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குறிப்புகள்:


  • கஷாயத்தை செய்து வைத்து நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பலன் தராது.
  • 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கலாம். 
  • மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி மழலைகளுக்கு கொடுக்கக்கூடாது.

No comments:

Post a Comment