Thursday, October 3, 2013

பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


அனைத்து பழங்களுக்கும் முதன்மை பழமாக விளங்கும் பழம் எது என்று தெரியுமா? அது பப்பாளி பழம் தான். மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளி பழத்தில் தான் மிகுதியான உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. இதய குழாய்கள் முதல் பெருங்குடல் வரை பல நன்மை இருக்கிறது. இதில் உள்ள மற்ற நன்மைகள் - இது அனைத்து காலங்களிலும் மலிவாக கிடைக்கின்ற பழமாகும். வருடம் முழுவதும் அனைத்து இந்திய சந்தைகளிலும் கிடைக்கக்கூடிய பழம் இது. இன்னும் சொல்லப்போனால் பலரது வீட்டு தோட்டத்தில் பப்பாளி மரம் இருக்கும். சரி, அப்படி என்ன பப்பாளியில் முக்கியமாக அடங்கியுள்ளது? பப்பாளியில் உள்ள உடல் நல நன்மைகளைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாமா? பப்பாளி மட்டுமல்ல அதன் விதிகளும் கூட உதவி புரியும்.


வைட்டமின் ஏ குறைபாடு 

வைட்டமின் ஏ குறைபாடு இருந்தால், கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ளது.

மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும் 

உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள். அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது.

மலச்சிக்கல் 

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால், இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும்

செரிமான பாதை பிரச்சனை 

நார்ச்சத்து இல்லாத உணவுகளை சாப்பிட்டால், அவை செரிமான பாதையில் சில நேரம் சுலபமாக செல்லாது. இப்படி அடைப்பட்டிருக்கும் பொருட்கள், தேற்று தன்மையை ஏற்படுத்திவிடும். ஆகவே அதனை பப்பாளி பழம் சிறப்பாக சரிசெய்யும். உதாரணத்திற்கு, பெருங்குடலில் சளி அடைத்து இருந்தால், அதனை பப்பாளி ஜூஸ் நீக்கி விடும்.

எடை குறைக்க உதவும்

 உடல் எடையை குறைக்கும் டயட்டை கடைப்பிடிக்கிறீர்களா? அப்படியானால் குறைவான கலோரிகளும், வளமையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

பல்வேறு வலிகளுக்கு நிவாரணி கீல்வாதம், எலும்புத்துளை நோய் அல்லது வேறு ஏதாவது வலிகளுக்கும் பப்பாளியை உண்ணலாம். இது வலியை குறைக்க உதவும். மேலும் அழற்சியை எதிர்க்கும் குணத்தை கொண்டுள்ளதால், வேகமாக ஆற வைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.

சளியை போக்கும்

அடிக்கடி சளி பிடித்து கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே உணவில் பப்பாளியை சேர்த்துக் கொண்டால், சளி மற்றும் இருமலை நீக்க போராடும். மேலும் பப்பாளி பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்கும்

சிறுநீரக கோளாறு

 பப்பாளி விதைகளின் பயன்களை பற்றி பல பேருக்கு தெரிவதில்லை. ஜெல்லி போன்ற தோற்றத்தை கொண்ட இதன் விதைகளில் பாக்டீரியாவை அழிக்கும் குணம் உள்ளது. சிறுநீரக கோளாறு, ஈரலை சுத்தப்படுத்துதல் மற்றும் நச்சுத் தன்மையை நீக்குதல் போன்றவற்றிற்கு உறுதுணையாக இருக்கும்.

மலட்டுத்தன்மை 

பப்பாளி விதைகளை வெந்நீரில் போட்டு குடித்தால், குடும்ப கட்டுப்பாட்டிற்கு உதவி புரியும் என்று சில பேர் நம்புகின்றனர். உங்களின் சொந்த இடர்பாட்டில் இதனை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

வாய்ப்புண்ணுக்கு மருந்தாகும் பப்பாளிப் பால்

* பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள் மற்றும் வீட்டில் எளிய முறையில் இவைகளை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்....

யாருக்கு நல்லது: மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்.

யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள்: சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

* பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

* பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

* பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

* நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

* பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

* பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

* பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

* பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

* பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

* பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

No comments:

Post a Comment