Sunday, January 18, 2015

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி


இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது பயிராகிறது. தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது, ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, பித்த நீரைச் சுரக்க செய்வது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ஓமியோ மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது. 


சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உடல் பருமனைக் குறைக்கக் கூடியது, வெள்ளைப் போக்கை குணப்படுத்த வல்லது, இது மாதவிலக்கின் இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தக் கூடியது, ஜலதோஷத்தை தணிக்கக் கூடியது, குளிர்ந்த நிலையை மாற்றவல்லது. தக்காளி உடலில் பரவி இருக்கும் நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி சுரப்பிகள் நல்ல வண்ணம் செயல்படத் தூண்டுவது, தக்காளி பித்த நீரைச் சுரக்கச் செய்து செரிமானத்தைத் தூண்டக்கூடியது. 

மென்மையான மல மிளக்கியாகவும் தக்காளி செயலாற்றுகிறது. தக்காளியை பச்சையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது மலத்தை இளக்கி வெளியேற்ற வல்லது. இதனால் மலச்சிக்கல் தணிகிறது. செயல்தன்மையில் மங்கிப்போன அல்லது கெட்டுப்போன ஈரலையும், சிறுநீரகத்தையும் நன்கு செயல்பட வைத்து ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற நச்சுக்களைக் கழுவி வெளியேற்ற உதவுகிறது. 

சர்க்கரை நோயாளிகளுக்குத் தக்காளி மருத்துவர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. “கரோட்டினாய்ட் லைகோபீன்” என்னும் மிக உன்னதமான மருத்துவ வேதிப்பொருள் செரிந்துள்ள முதல்தரமான கனி தக்காளி என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மேற்கண்ட வேதிப்பொருள் உணவு மூலமாக நமக்குக் கிடைக்கிறது என்றால் அது தக்காளிக்கே முதலிடத்தைத் தருகிறது. 

தக்காளிச் சாறு வயிற்றில் ஏற்படும் புண்ணை ஏற்படுத்தக் கூடிய காரணியைத் தடுத்து நிறுத்தி குடலில் சாதாரண புண் முதல் புற்று நோய் வரையிலான தொல்லைகளிலிருந்து குடலைக் காக்கிறது. தக்காளிச்சாறு அருந்துவதால் ரத்தத்தில் உள்ள “சீரம் லைக்கோ பீன்” என்னும் வேதிப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது. 

இதனால் வயிற்றுப் புண்களோ, புற்றோ தவிர்க்கப் பெறுகிறது. ரத்தத்தில் உள்ள “சீரம் லைக்கோபீன்” அளவு குறையும் போது தான் ஆண்களின் வயது முதிர்வின் போது ஏற்படும் துன்பமான “புரோஸ்டேட்கேன்சர்” ஏற்படுவதற்கு ஏதுவாகிறது. மேலும் தக்காளியில் மத்திய நரம்பு மண்டலத்தை நன்னிலையில் வைக்க உதவுவதோடு வலியை குறைக்க கூடியதாகவும் பயன் தருகிறது. தக்காளியில் அபரிமிதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 

* தக்காளியில் நல்ல ஊட்ட சத்துக்களும் உற்சாகம் தரும் வேதிப் பொருட்களும் அதிக அளவில் விட்டமின் ‘ஏ’‘சி’ மற்றும் “போலிக் அமிலங்களையும்” பெற்றுள்ளன. 

* தக்காளியில் உள்ள ஆல்பாலிப்போயகிக் அமிலம் சர்க்கரையை சத்துப் பொருளாக மாற்ற உடலுக்கு உதவி செய்கிறது. மேலும் ரத்த நாளங்களை சுத்திகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் விழிக்கோளாறு வராது காக்கிறது. மூளை மற்றும் நரம்புத் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது. 

* தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” சத்து தக்காளிக்கு சிகப்பு வண்ணத்தை தருவதாக அமைகிறது. அதுமட்டுமின்றி புத்துணர்வு தரும் வேலையையும் செய்கிறது. 

* தக்காளியில் உள்ள “காலின்” என்னும் சத்து தூக்கத்தைத் தூண்டுவதற்கும், தசைகளின் அசைவிற்கும், படிப்பதற்கும் படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. இந்த “கோலின்” சத்து செல்களின் கட்டமைப்புக்கு உதவுவதோடு நரம்பு வழி மின் கடத்தலுக்கும் உணவிலிருந்து கொழுப்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், நீண்டகால வீக்கத்தைக் கரைப்பதற்கும் உதவுகிறது. 

* தக்காளியை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியும், தோலும் அமைவதோடு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

* தக்காளியில் அடங்கி இருக்கும் அபரிமிதமான விட்டமின் ‘சி’ சத்துக்களும் “ஆன்டி ஆக்ஸிடென்ட்” களும் உடலில் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து போராட உதவுகின்றன. 

* தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” என்னும் சத்து “புரோஸ்டேட்” புற்றுநோயை வரவிடாது தடுக்கிறது. இளைஞர்கள் தக்காளியை தாராளமாகச் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள “பீட்டர் கேரோட்டின்” என்னும் சத்து ஆரம்ப நிலையிலேயே புரோஸ்டேட் புற்று நோயை தடுத்து நிறுத்துகிறது. 

* தக்காளியிலுள்ள “பீட்டாகேரோட்டின்” மற்றும் உயர்ரக நார்ச்சத்து ஆகியவை மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்க வல்லவை ஆகும். மலச்சிக்கலையும் போக்க உதவுகின்றன. 

* ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் குறைவான உப்புச்சத்து உள்ள உணவு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பொட்டாசியம்” சத்து அதிகமாக எடுத்துக் கொள்வது இதய நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது. 

தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின் ‘சி’ மற்றும் “கோலின்” சத்துக்கள் இதயத்துக்கு பலம் தருவதாகவும் இதய ஓட்டம் சீர்பெற நடப்பதற்கும் உதவுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு இதில் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது. 

* தக்காளியில் அடங்கியிருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து மாரடைப்பை தடுப்பதோடு, தசை அழிவை தடுப்பதோடு எலும்புகளின் பலத்தை அதிகப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்படாவண்ணம் காக்கிறது. 

* முதல் நிலை சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு அதிக நார்ச்த்துள்ள தக்காளியை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் தணிகிறது. 2ம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உயர்த்தவும், கொழுப்புசத்து மற்றும் இன்சுலின் சத்து மிகுதிப்படவும் உதவுகிறது. ஒரு கப் தக்காளியில் 2 கிராம் அளவுக்கு நார்ச்த்து இருப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

* தக்காளியில் உள்ள போலிக் அமில சத்து கருவுற்ற மாதர்களுக்கு நல்ல சத்தூட்டமாகவும் குழந்தையின் நரம்பு மண்டலத்துக்கு மிக்க பலம் தருவவதாகவும் அமைகிறது. போலிக் அமிலம் மன உளைச்சலையும் போக்க உதவுகிறது. நல்ல மனோ நிலை, தூக்கம், பசி ஆகியவையும் உண்டாகின்றன. 

* நவீன ஆய்வுகள் தக்காளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் மாதர் தம் மார்பகப் புற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கிறது. 

* இரண்டொரு தக்காளியை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்து சாறாக்கி வடிகட்டி சர்க்கரை சிறிது சேர்த்துக் குடிப்பதால் மேக நோய்கள், சிறுநீர் எரிச்சலோடு வெளியேறுதல், வீக்கம் முதலிய துன்பங்கள் தொலைந்து போகும். நாவறட்சியும் தணியும். உடன் மென்மையும் வனப்பும் அடையும். 

* தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு 2 தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் கொழுத்துப் பருத்த உடல் எடை குறையும். 

* தக்காளிப் பழத்தின் பசை ஓர் சிறந்த முகப் பூச்சுக்கான அழகு சாதனப் பொருட்களாகவும் பயன்தருகிறது. 

* அன்றாடம் ஒரு டம்ளர் தக்காளி சாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய வாழ்வுக்கு அதிலுள்ள லைக்கோபின் சத்து அடிகோலுகிறது. 

* தக்காளிச்சாறு சிறிது எடுத்து முகத்தில் பரவலாகப் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்தின் சருமம் பொலிவு அடையும். மென்மையும் நல்ல வண்ணமும் பெறுவதோடு முகச்சுருக்கங்கள் பறந்து போகும். 

* தக்காளிச்சாறு அன்றாடம் பருகுவதால் கணையப் புற்று ஏற்படும் அபாயத்திலிருந்து நம்மைக் காக்கிறது என்று மான்ட்ரியால் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. 

* பாலர்கட்குப் பாலூட்டும் தாய்மார்கள் தக்காளியை எவ்வகையிலேனும் உணவுடன் சேர்த்துக் கொள்ள தாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் லைக்கோபின் என்னும் சத்து அதிக அளவில் குழந்தைகளுக்குக் கிடைக்க செய்கின்றனர். இதனால் தாய்ப்பால் குடிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் புற்று நோய் வருவதற்கான ஆபத்துக்கள் குறைகின்றன. 

* தக்காளி தாராளமாகப் பயன்படுத்தும் போது எலும்புகளுக்கு பலமும் கிடைக்கிறது. ஏனெனில் தக்காளியில் விட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. 

* தக்காளி ஓர் சாதாரணமான ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவுக்கான பொருளாகிறது. ஒப்பற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்றாலும் சிறுநீரகம் பழுதுபட்டவர்கள் மட்டும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்தை மனதில் கொண்டு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment