Saturday, August 9, 2014

முக அழகைப் பாதுகாக்க சில வழிகள்

இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியும். கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது. 



  • முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலும் அது வடுக்களாக மாறும். 



  • முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். 



  • மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். 



  • இரவு நேரங்களில் அதிகளவு கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். 



  • ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். 



  •  தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்யாதவர்கள் தியானம், யோகா, செய்வது நல்லது. 



  • எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 



  • மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். மாதவிலக்கு முடிந்தவுடன் அவை தானாக போய் விடும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.


No comments:

Post a Comment